Thursday, 10 September 2015

உடல்நிலை சரியில்லை என்றால் விதி என்று இருப்பீர்களா ?


உங்களை சரிசெய்து கொள்ளுங்கள் நாம் அன்றாட வாழ்வில் பல ஆய்வுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கே தெரியாமல் சற்று கூர்ந்து கவனித்தால் தெரிய வரும். இந்த வாழ்கையே நாம் அனுபவிப்பதற்காகத்தான். பிறக்கும் எவ்வுயிரும் துன்பப்படுவதர்க்காக பிறப்பதில்லை. இது இயற்கையின் சட்டம். இந்த சட்டம் சரியாகத் தான் உள்ளது. நாம் அமைக்கும் வட்டம் தான் சரியாக உள்ளதா என அறிந்து சரியாக இருந்தால் போற்றுதற்கு உரியது. சரியில்லை என்றால் அதை சரி செய்து கொள்வதற்கான நிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நாம் அமைக்கும் வட்டம் என்பது நம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கையில் இருந்தது. அனால் இன்று நம் கையில் இந்த நிலை கிடைத்திருப்பதைத் தான் தங்க புதையல் என்ற முன்னொரு நூலில் குறிப்பிட்டிருந்தேன். ஆம் ! இறைவனுடைய படைப்பில் எந்த குறையுமில்லை. சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றதே. எதிலிருந்து தெரியுமா? சுத்த வெளி என்ற நிலையிலிருந்து பரிணாம தத்துவத்தின் அடிப்படையில் சற்றே திரும்பிப் பார்த்தல் உண்மை எதுவென விளங்கும் உங்களுக்கும் தெரிந்த விஷயம்தான் சற்று ஞாபகப்படுத்தி கொண்டால் மேற்கொண்டு செல்ல வசதியாக இருக்கும். பிரபஞ்ச ரகசியமே பஞ்சபூதம், நவகிரகங்களும் தான் என தொலைகாட்சியிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், கூறிவருகிறேன். இந்த பஞ்சபூதமும், நவகிரகமும் எந்த விகிதாச்சாரத்தில் நம் உடம்பில் சேருகிறதோ அதை பொருத்து நம் உடல் இயக்கப்பெறுகிறது. அதாவது உடல், மனம், சூழ்நிலைகள், உயிர், தொழில் என ஐந்து தன்மைகளும் இயக்கப்பெறுகிறது. இதில் பஞ்சபூதம் உயிர், தொழில் ஆற்றல்களை நிர்ணயம் செய்கிறது. நவகிரகம் உடல், மனம் சூழ்நிலைகளை நிர்ணயம் செய்கிறது. இது போல் அண்டத்தில் இருப்பது யாவும் அண்டத்தில் உள்ளது என்று சித்தர்கள் கூறுவது உண்மையென தெரியவரும். அண்டத்தில் உள்ள பஞ்சபூதமும் நவகிரகங்களும் நம் கண்ணில் காணும் பொருட்களாக அமையப்பெற்றுள்ளன. இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கும் விதத்தை நாம் சற்று சிந்தித்து பார்த்தால் இறைவனுடைய செயல் எத்தனை தூய்மையானது சத்தியமானது என தெரியவரும். விண்ணிலிருந்து காற்று, காற்றிலிருந்து நீர், நீரிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நிலம் என்று விண்ணைத் தொடங்கி நிலம் வரை பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதே நிலையில் தான் நவகிரகங்களும் பஞ்சபூதங்களால் ஆகி அந்த பஞ்ச பூதங்களின் இயக்கவல்லமையை பொருத்து அந்த கிரகங்களிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த ஒளிக்கதிர்கள் காந்த கிரக அலைகளாக நம் உடலை வந்தடைகிறது.இந்த உடலில் தூய்மை என சொல்லக்கூடிய மையம், சக்கரம் ஒரு டிஷ் ஆண்டனாவை போல் நம் உடலில் உள்பகுதிக்கு இழுத்துச் சென்று மற்ற மையங்களை இயக்கும் நிலையை அமையப்பெறுகிறது. இதுபோன்று அண்டமும் பிண்டமும் ஒன்றுக்குள் ஒன்றாக இயங்கப் பெற்று நம்மையும் இந்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவக்கிரகங்களும், பஞ்சபூதமும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதே போல் நம் உடலும், மனமும், உயிர், சூழ்நிலைகள் யாவும் ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்பொழுது மனிதன் தனக்கென்று ஒரு முத்திரையாக பெயரைசூட்டி கொண்டானோ அன்றிலிருந்து அவனது உடல், சூழ்நிலைகள், உயிர், தொழில் என அனைத்தும் அவனது பெயரை கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் பெயர் எந்தளவிற்கு நமக்கு சாதகமாக அமைகிறதோ அதைப் பொருத்து மேற்கூறிய ஐந்து கூறுகளும் சரியாக இயங்கும். அதாவது இயற்கையோடு ஒன்றி செயல்படும். இயற்கையில் கடவுளின் படைப்பில் எந்தத் தவறுமில்லை. மனிதன் நாம் செய்யக்கூடிய செயலில் தான் தவறு உள்ளது. அது நம் பெயர் மற்றும் வீடுமேயாகும். நம் பெயரையும், வீட்டையும் இறைவன் அமைத்து தரவில்லை. நாம் அமைத்துக் கொள்கிறோம். பெயரை பொறுத்தவரை முந்தய காலத்தில் இருந்து பெரும் பணக்காரர்களும், ராஜாக்களும், பிரபுக்களும், மந்திரிகளும் ஒரு இனத்தவர்கள். எண் கணிதத்தை பயன்படுத்தி பெயர் சூட்டுவிழா என்று முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். சாதாரண மற்றும் நடுத்தர வசதியுடையவர்கள் அன்றைக்கு வரும் பிராமணர் கூறும் முதல் எழுத்து "வா" என்று வந்திருக்கும் உறவினர்கள், நண்பர்கள் கூறும் பெயர்களில் எந்த பெயர் மனதிற்கு பிடித்துள்ளதோ அதையே சூட்டி மகிழ்ந்தனர். அதே போல் வீடு தன்னிஷ்ட்டபடி அமைத்து வீடு கட்டினர். இவ்வாறு தன் இஷ்ட்டபடி செய்து கொண்டு இன்பதுன்பங்களை நாமே வரவேற்றுக் கொள்கிறோம். ஆக இறைவனின் குற்றம் இல்லை. நம் குற்றம் தான். நம் பெயரையும், வீட்டையும் சரியாக அமைத்துக்கொண்டு வாழ்வில் வளம்பெற வேண்டும் என்பதற்காக எண் கணிதம் நியூமராலஜியும், வாஸ்த்து கலைகளும் அமைந்துள்ளது. இந்த கலைகளை நீங்கள் எந்தளவிற்கு பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு நன்மைகளை அனுபவிக்க முடியும். அதாவது பெயரின் மூலம் 70% நன்மைகளையும் வீட்டின் மூலம் 30% நன்மைகளையும் பெறமுடியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. ஆகவே நீங்கள் செய்வது இயற்கையோடு ஒன்றி வாழ்வதற்காகன ஒரு நிலையைத்தானே தவிர இயற்கைக்கு புறம்பானதோ, இயற்கையை மீறிய செயலோ இல்லை. இயற்கையின் ரகசியமே பஞ்சபூதமும், நவக்கிரகமும் தான் என்பதை நம் முன்னோர்கள் மிக தெளிவாக அன்று விளக்க முடியாத நிலையில் கோவில்களில் சாமி கும்பிடும்படியான நிலையை ஏற்படிதியுள்ளனர். நம் கோவில்களில் பெரும்பாலும் நவக்கிரகங்களை மையமாக வைத்து, பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை மையமாக வைத்தும் அமைத்துள்ளனர். உதாரணத்திற்கு நவக்கிரகம் ஒவ்வொரு கோவிலிலும் அமைக்கப் பெற்றிருக்கும். பஞ்சபூதங்களில் நிலத்திற்கு திருக்காஞ்சி, காற்றிற்கு திருக்காளத்தி, விண்ணிற்கு சிதம்பரம், நீர் திருவானைக்காவல், நெருப்பிற்கு திருவண்ணாமலை என பஞ்சபூதங்களையும் தவிர நடுகோவிலாக அமைத்து இதன் ரகசியங்களை என்று அறிந்து கொள்கிறோமோ, அன்று நம் துன்பங்கள், பிரச்சனைகள் அகலும் என்பதை சூட்சகமாகச் சொல்லி வைத்துள்ளனர். இன்றும் இதன் ரகசியங்களை அறிந்துகொள்ளாதிருத்தல் நாம் எப்பொழுதுதான் விழிப்பது. நமது துன்பத்திற்கு கர்மா என்றும், நம் பிறப்பே பாவத்தை கழிப்பதற்கு என்றும் நம்மை துன்பப்படும்படி இறைவனின் கட்டளை என்றும் கூறிக் கொண்டு உனக்கு நீயே குழி தோண்டிக் கொள்ளாமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து இயற்கையோடு ஒன்றி வாழும் நிலையை பெற்று நீங்களும் சந்தோஷமாக, பிறரையும் சந்தோஷப்படுத்தி மன அமைதியோடு வாழ முயற்சியுங்கள். இதற்கு எண் கணிதம் என்றென்றும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்வீர்கள். இறைவனின் கட்டளை, கர்மா என்று சும்மா இருப்பீர்களா? இல்லையே! உடனே நல்ல டாக்டரை தேடி போகவில்லையா? அதே போன்றது தான் நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் எதனால் வருகின்றது என ஆராய்ச்சி செய்யவேண்டு. எந்த பிரச்சனையும் திடீரென வரமுடியாது. ஒரு திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் அங்கு அறுசுவை உணவை கண்டவுடன் நன்றாக சாப்பிட்டு விட்டால் அதாவது அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டால் நமக்கு வயிற்றை வலிக்கும், வயிற்றுப் போக்கு ஏற்பட்டு பல துன்பங்களை அனுபவிக்கிறோம். ஆக நாம் செய்த தவறு அதிகமாக சாப்பிட்டது. இதுபோல் நாம் ஏதாவது தவறு செய்தால் தானே தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் எங்கிருந்து இறைவனின் செயல்பாடுகள் வருகிறது. நம்மை நாம் தான் சரியாக இருக்கிறோமா என சரிபார்த்துக் கொள்ளவேண்டும். என் பெயர் எப்படி உள்ளது? எனது வீடு எப்படி உள்ளது என அறிந்து சரி செய்து கொள்ளவேண்டு. நல்ல பெயரை அமைத்து கொண்டும், நல்ல வீட்டையும் பெற்று என்றும் ஆனந்தமாக இருக்கக் கூடிய நிலையைதான் அன்று சச்சிதானந்தம் கூறினார். சச்சிதானந்தம் = சத்+சித்+ஆனந்தம். சத் என்றால் அறிவு, சித் என்றால் வீடு பேறு அடைதல். அதாவது வீட்டையும் பெயரையும் அடைந்தால் நம் அறிவைக் கொண்டு நல்ல வீட்டையும் பெயரையும் அடைந்தால் என்றைக்கும் ஆனந்தம் நிலைத்து நிற்கும் என குறிப்பிட்டுள்ளனர். நல்ல பெயரை, நல்ல வீட்டை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.
வீட்டில் வாழும் தேவதை வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது. நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக்கொண்டே இருக்கும். நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும். ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது. நிறைய இருந்தது. மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம். வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகரமாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம். எண் கணிதத்தின் தொன்மை அகரா முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு (குறள் 1) எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. (குறள் 392) -திருவள்ளுவர். வள்ளுவரின் இவ்விரு குறள்கள் மட்டுமல்லாது எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும். - மூதாட்டி ஔவையார். எண்ணெழுத்திகழேல் - பழமொழி. திருவள்ளுவரின் திருக்குறளும், ஔவையாரின் பொன்மொழியும், பழமொழியும், எண் கணிதத்தின் தொன்மையை நினைவுக் கூறுகின்றது. எண் கணிதம் ஓர் அற்புதக்கலை. இக்கலையை உதாசீனப்படுத்தியும் அறியாமையாலும் அழிபவர்கள் பலகோடி பேர் அந்த அளவிற்கு எண் கணிதம் நம் வாழ்க்கையோடு ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இக்கலை ஏதோ பொழுது போக்கிற்காக உருவாக்கப்பட்டதன்று. வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் கணக்கிட்டு கூறும் வாழ்க்கை சூத்திரம். ஆம்! எப்படி கணிதத்தில் (A+B) ² = a²+2ab+b² என்று கூறுகின்றோமோ, அதே போல் நம் வாழ்க்கையையும் ஒரு சூத்திரம் வடிவில் கொண்டு வந்து நம்மை ஒழுங்குப்படுத்தக்கூடிய அமைப்பாகும். உன் வாழ்க்கை உன் கையில் என்பது முற்றிலும் எண் கணிதத்திற்கே பொருந்தும் உன்னுடைய பெயரே உனது வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. எண் கணிதம் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும். அதுவும் தமிழகத்தில் மட்டுமே தோன்றியிருக்க வேண்டும். எதை வைத்து கூறுகின்றோமென்றால் முன் கூறிய குறள் எழுதிய திருவள்ளுவர் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் அக்காலகட்டத்திலேயே எண்ணையும் எழுத்தையும் அறிந்து அதன் முக்கியதுவத்தை தனது குறளில் குறிப்பிட்டுள்ளார். எண்ணும், எழுத்தும் இரண்டு கண்களைப் போன்றது என குறிப்பிடுகின்றார். எண் என்பதை வள்ளுவர் பிறந்த தேதியினுடைய எண் என்றும், எழுத்து என்பதை தலையெழுத்து, பெயர் என்றும் குறிப்பிடுகின்றார். அதாவது பிறந்த தேதியுடைய எண்ணும் தலையெழுத்தாகிய பெயரும் ஒன்றையொன்று சார்ந்து சிறப்பாக அமைந்தால் இரு கண்கள் எப்படி ஒளி பொருந்தியுள்ளதோ அதேபோல் நம் வாழ்க்கையும் ஒளி பொருந்தி இருக்கும் என்பதை குறிப்பிடுகின்றார். அதாவது எண்களாகிய பிறந்த தேதி எண்ணும், பெயரும் ஒன்றையொன்று சார்ந்து சிறப்பாக இல்லாவிடில் இரு கண்களும் ஒளியிழந்து பார்வை குறைவாக இருப்பதுபோல் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்ததாகவும் கஷ்டப்படுவதாகவும் துன்பத்தை தருவதாகவும் இருக்குமென குறிப்பிடுகிறார். இந்த ஒரு குறளை மட்டுமே வைத்து எண் கணிதத்தின் தொன்மையை கூறவில்லை அவர் தனது பெயரிலும் திருவள்ளுவர் என்ற பெயருக்கு 46 எண்ணை அமைத்துக் கொண்டுள்ளார். T H I R U V A L L U V A R 4 5 1 2 6 6 1 3 3 6 6 1 2 = 46 அதன்படி இவருக்கு நிகரான புலவர் இன்னும் கூட தோன்றவில்லை எனலாம். ஏன் என்றால் அத்தகைய சிறப்பு வாய்ந்த 46 எண்ணை தனக்கு சூட்டி கொண்டுள்ளார். இந்த 46 எண்ணின் உடைய பலன் யாதெனில் எத்துறையில் இவர் நுழைந்தாலும் அத்துறையில் மன்னராக விளங்கக் கூடியது. உயர்ந்த புகழையும் தரக்கூடியது. ஆகவே திருவள்ளுவர் தனது பெயருக்கு 46 எண்ணை அமைத்துக் கொண்டுள்ளார். அதே போல் திருவள்ளுவர் தனது நூலிற்கு திருக்குறள் என்ற பெயரும் எண் கணித முறைப்படியே 34 எண்ணை அமைத்துள்ளார். T H I R U K K U R A L 4 5 1 2 6 2 2 6 2 1 2 = 34 அதாவது 34 எண்ணினுடைய பலன்படி எக்காலமும் தன் தனித்தன்மையை வெளிப்படித்திக் கொண்டே இருக்கும் என்பதாகும். அதே போல் திருக்குறள் இன்றய காலம் வரை அதனுடைய தனித்தன்மை வெளிப்படுத்தி கொண்டே உள்ளது. காலத்தால் பழையது இக்காலத்திற்கு ஏற்ற ஏதாவது நாகரீக காலத்தில் இன்னும் விஞ்ஞான அதிவேக வளர்ச்சிக் காலத்திலும் அது விலக்கப்படாத நிலையில் தனித்தன்மை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதிலிறிந்து திருவள்ளுவரின் குறள் 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது உண்மையானால் எண் கணித தோற்றமும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் ஐயமில்லை. மேலும் பெயரை நம் முன்னோர்கள் நட்சத்திரத்தில் வலியாக "இவ்வகை எழுத்தில் ஆரம்பிக்கும்படி பெயர் வை" என்னும் அளவிற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் தோற்றம் கூற இயலாத அளவிற்கு முந்தயது. மேலும் வாரத்திற்கு 7 நாட்கள் என்பதை கிரகங்களின் வாயிலாக பிரித்து வைத்துக் கொண்டதும் நம் தமிழகத்தில் தான். இங்கிருந்து பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. தமிழ்மொழியின் தோமையை குறிப்பிடும்பொழுது கல்தோன்றி மண் தோன்ற காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் தமிழ்மக்களின் தொன்மையை உணரலாம். தொலைநோக்கு கருவிகள் பல வந்தும் விஞ்ஞான பூர்வமாக இன்னும் கிரகங்கள் அனைத்தையும் முழுவதுமாக காணமுடியாத நிலையில் அன்று நம் ஞானிகளும். சித்தர்களும், தன் அகதொலைநோக்கி பார்வை மூலம் அனைத்து கிரகங்களையும் கண்டு அவை நகரும் நிலைகளையும் அறிந்து தன்மைகளையும் நம் உடலோடு, உயிரோடு, மனமோடு ஒப்பிட்டு கூறியுள்ளனர். அத்தகைய ஞானிகளால் தான் இந்த எண் கணிதமும் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து எண்கணிதம் எங்கோ வெளிநாடுகளில் தோன்றியதல்ல, இங்கு அதுவும் தமிழ்நாட்டில் தான் தோன்றியுள்ளது. அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக இன்றைய காலத்தில் உலகமொழியாக உள்ள ஆங்கிலத்தில், தமிழ் எண் கணிதத்தை சார்ந்து தொகுக்கப்பட்டது. தொன்று தொட்ட காலகட்டமுதல் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சாரர்கள் மட்டுமே பயபடுத்தி வந்த கலை இன்று அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றால் இப்பொழுது வாழும் மக்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு "தங்க புதையல்" எனலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு எண் கணிதம் நம் வாழ்க்கையோடு ஒன்றி நம்மை வழி நடத்தி கொண்டு செல்கின்றது. எண் கணிதம் ஒரு கலங்கரை விளக்கம் எனலாம். ஏனென்றால் வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கும் நமக்கு கரையை காட்டக்கூடியதான விளக்கு போன்றது அதாவது நிம்மதியையும் நம் பாதையையும் நினைவுப்படுத்தக்கூடியது.
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வாஸ்து வாஸ்துவுக்கு பெண்களை முக்கியமாக வைத்து பார்க்கப்படுவது எதனால் என்றால் வீட்டில் அதிகநேரம் (அதாவது 24 மணி நேரமும்) பெண்களே இருப்பதால் பெண்களுடைய ஜாதகத்தையும், பிறந்ததேதியையும் வைத்து வாஸ்து படி அமைத்து தருகிறோம். வீட்டை பொறுத்த வரை அவர்களுக்கென்று உரிய பாகம் தென்கிழக்கு பாகம். அதற்கடுத்தாற்போல் வடமேற்கு பாகமாகும். அந்த பாகங்களை குறிப்பாக தென்கிழக்கு பாகங்களை சமையலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அவ்வாறு தென்கிழக்கில் உள்ள சமையலறையை பயன்படுத்த தவறினால் பெண்களுக்கு சாதாரணமாக அனுபவிக்கும் உரிமை பரிக்கபடும். அதேபோல் பெண்களுக்கு நோயினால் துன்பம் அனுபவிக்க கூடிய நிலையை ஏற்படுத்தும். அதே நேரம் கட்டிடதிற்கு வெளியே காம்பவுண்டிற்கு உள்ளே தென்கிழக்கு பாகத்தில் போர்வேல் அல்லது கிணறு (அல்லது) சம்ப் என போட்டால் அந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு. வீட்டிற்கு விளக்கேற்ற பெண் இல்லாமல் போகும். img தென்கிழக்கு மூலை அக்னி மூலை என்பதால் அந்த மூலையில் எந்த ஒரு நல்ல பொருளும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைத்தாலும் பணப்பெட்டி வைத்தாலும், ஒன்றுக்கும் உபயோகமின்றி வீணாகும். தெற்கு சார்ந்த தென்கிழக்கில் வாசல்படி வைக்கலாம். கிழக்கு சார்ந்த தென்கிழக்கில் வாசல்படி வைக்கக்கூடாது. வற்றாத செல்வத்திற்கு கைகொடுக்கும் வாஸ்து வாஸ்துவைப் பற்றி பார்க்கும் பொழுது குறிப்பாக இரண்டு விதமானது. ஒன்று, மனையை தேர்வு செய்து அடிக்கல் நாட்டி தளம் போடும் வரை உள்ளது. மனையடி சாஸ்திரம் ஆகும். மனையடிக்கு மேல் கட்டிடம் கட்டுவது என்பது வாஸ்து சாஸ்திரம் என்றழைக்கப்படும். இதில் சாஸ்திரம் பார்ப்பது என்பது நமது முன்னோர்கள் நல்லதோ, கெடுதலோ அனுபவித்து அனுபவத்தின் மூலமாக தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவும், தான் பெற்ற துன்பத்தை யாரும் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக தான் சாஸ்திரம் நிறுவப்பட்டது. அந்த அடிப்படையில் இன்று வாஸ்து சாஸ்திரம் என்னிலடங்காத மக்களை சந்தோஷப்படுத்தியும், முன்னேற்றத்தை அனுபவிக்கவும் ஒரு விழிகாட்டியாக அமைந்துள்ளதில் முக்கிய பங்கு வாஸ்துவுக்கும் உண்டு. பொதுவாக வீடு என்பது செங்கற்கலால் கட்டப்பட்டதல்ல. இதயங்களால் கட்டப்பட்டது. வீட்டிற்கு பேசும் சக்தி உண்டு. அதன் மொழி நமக்கு புரியாததாலும் நம் காதுகளுக்கு எட்டாத ஓசையாக அமைந்துள்ளதால் அதை ஜடம் என எடுதுக் கொள்ளக்கூடாது. ஒரு வீடு அவருக்கு பொருத்தமாக அமைந்தால் அது போன்று வாழவைக்கக் கூடியது ஒன்றுமில்லை. ஒரு வீட்டோடு ஒப்புமையாகாத போது கெடுப்பதும் நிகழும். சாதாரணமாக ஒரு நபருடன் பழகும்பொழுது சிலரிடம் நாம் நம்மையறியாமல் வெகுநேரத்தை எடுதுக் கொண்டு பழகுவோம். அத்தகைய பழக்கத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டோம். அதே போன்று தான் வீடும். குறிப்பாக ஒரு வீட்டில் கீழக்கு மற்றும் வடக்கு பாகங்களில் அதிகமாக இடம் விட்டு கட்டுதல் லெட்சுமி கடாட்சத்தை ஏற்படுதுவதோடு இன்னும் அதிர்ஷ்டத்தை கூட்டு விக்கும். மேலே கூறியுள்ளது போல் மனையில் கிழக்கு, வடக்கு புறம் அதிகமான இடத்தை விட்டு கட்டுவது சிறப்பானது. மேற்கு, தெற்கு பகுதியில் அதிகமான இடம் விடுவது உடலுக்கு கெடுதுதலை தரும். குறிப்பபாக மேற்கில் அதிகமான காலியிடம் இருதய வால்வுகளால் பாதிக்கப்படும். தெற்கில் மிகுதியான இடம் காலியாக விட்டால், இருதய பலஹீனம், இருதய பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறு அநேகம் பேர் வீடுகளில் பரம்பரையாக இருந்து வருபவர்கள் முதலில் சரிசெய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் பரம்பரை வியாதியென நினைத்து கொண்டு அடுத்தடுத்த தலைமுறைகள் பாதிக்கப்படும். இதே போன்று கிணறுகளை வடக்கு, கிழக்கு சார்ந்து, வடகிழக்கு பாகங்களில் தான் போட வேண்டும். இவ்வாறு இல்லாமல் தென்கிழக்கில் கிணறு அமைந்தால் அவ்வீட்டில் பெண்கள் எப்பொழுதும் வியாதிக்கு உள்ளாகி இருப்பார்கள். வடகிழக்கு, வடக்கு, கிழக்கு பாகங்களில் ஆழ்குழாய் கிணறுகளோ, கீழ்நிலைத் தொட்டிகளோ, செப்டிக் டேங்குகளோ இருந்தால், வீட்டில் மகிழ்ச்சி என்றும் நிலவும், லெட்சுமி கடாட்சம் மிகுந்து இருக்கும் எந்த கெடுதலான விளைவுகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் அந்த வீட்டிற்கு இருக்கும். இதைப் போல வாஸ்துவைப் பற்றி விரிவாக தனி ஒரு நூலாக வெளியிட உள்ளேன். விதியை மதியால் வெல்லலாம் எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு- குறள் 467 எண் கணிதம் என்றால் என்னவென்று எவரும் அறியாமல் நீண்டநெடும் காலமாக இருந்ததுண்டு. சாமானியர்கள் மட்டுமே அவற்றை உணர்ந்து அதன் பயன் அறிந்து, முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது உள்ளங்கையில் தெரிகின்ற நெல்லிக்கனியைப் போன்ற உண்மை சம்பவங்களாகும். முழுமையாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது அவர்கள் மீது சுமத்துகின்ற குற்றமல்ல! எண்கணிதம் என்றால் என்ன? அதன் பயன் யாது? என்பதை உணர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இங்கே என்னுடைய நோக்கம் என்னவெனில்! சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டுமே பயன் அடைந்து கொண்டால் போதாது. அவை சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும், இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மிக சாதாரணமானவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்பேரவா! இதில் மிகை ஏதுமில்லை. இதன் விழிதோன்றலே இப்பொழுது உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டு இமைகளுக்கு விருந்தாக, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திருப்பமாக அமைய இருக்கின்ற நான் கண்டெடுத்த "தங்கபுதையல்" ஆகும். எண் கணிதம் என்பது நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துகின்ற கணக்கு முறையல்ல! ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக குறிப்பிட்ட எண்கள் நிர்ணயிக்கப்பட்டு, அந்த எண்கள் மூலமாக ஒருவரின் பிறந்த தேதிக்கும் அவரின் பெயருக்கும் உள்ள தொடர்பு கணக்கிடப்பட்டு அவை கோடிட்டு கண்டறிந்து நல்லவை என்பனவற்றை எடுத்துக் கொண்டு தீயனவற்றை நம்மிடம் இருந்து அகற்றிக்கொள்வதுடன், செல்லும் விழி புரியாமல் தவிக்கும் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுடன், தீராத நோய்களில் இருந்து விடுவித்து கொள்வதும், உயிருக்கே கேடு விளைவிக்கிற பேராபத்துக்களில் இருந்து நம்மை காத்து கொள்வதுமே எண் கணிதமாகும். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் அவசியமான பாதுக்காப்பு கவசம் என்று எண் கணிதத்தைச் சொல்வது மிக பொருத்தமாகவே உள்ளது. எண் கணிதத்தால் தீர்க்கபாடாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நம் பெயரே காரணமாக உள்ளது. இந்த உலகத்தில் பிறந்த எந்த மனிதரும் துன்பப்பட வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. எல்லா இன்ப துன்பங்களுக்கும் பெயரே காரணமாக உள்ளது. ஆகவே இந்த மாபெரும் சக்தி பொருந்திய எண் கணிதத்தை முறைப்படி பயன்படுத்த, அதை கடைபிடிக்க முன்வருதல் வேண்டும். இது கடினம் என்றோ, இயலாது என்றோ சொல்வதற்கு ஏதும் இல்லை. மிகவும் எளிமையே! பிறந்த தேதியும் பெயரும் இருந்தால் போதுமானது. அவ்வாறு பிறந்த தேதி இல்லை என்றாலும் உங்கள் உடலில் உள்ள கிரகங்களின் ஆதிக்கத் தன்மையை உணர புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட "அட்சயா ஸ்கேன்" மூலம் மிகத் துல்லியமாக 100% அதிர்ஷ்டத்தை பெற்று வாழ்வாங்கு வாழலாம். ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்திவிடலாம். இது மட்டும் அல்ல வியாபாரம், சுபகாரியங்கள் தொடர்புடைய அனைத்து விபரங்களையும் மிக அருமையாக எண்கணிதம் வாயிலாக வலமானதாக, வலிமை உடையதாக உருவாக்கலாம். "விதியை மதியால் வெல்லலாம்" துன்பம் என்னும் விதியை எண் கணிதம் என்கின்ற மதியால் வெல்லலாம். உள்ளத்தால் உயர்வோம்! அல்லதை விடுவோம்!! எண்கணிதத்தால் வளர்வோம்!!! வாழ்க வளமுடன்!!! எது வாழ்க்கை? பெற்றோரின் இச்சையால் பிறந்தோம், வளர்ந்தோம், உண்டோம், உறங்கினோம், மணமுடித்தோம், பிள்ளைகளை பெற்றோம், இறந்தோம். இதுவா வாழ்க்கை? சிந்தியுங்கள் இச்செயலை 5 அறிவுள்ள ஜீவன்களும் தான் செய்கின்றது. பிறந்து, வளர்ந்து, பிற உயிர்களை கொன்று சாப்பிட்டு இனப்பெருக்கம் செய்து சாகின்றது. இதற்கும் நமக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? எல்லாம் விதிப்படியே நடக்கும் என்று கண்மூடித்தனமாக தனக்கு தானே குழிதோண்டிக் கொள்ளக்கூடிய நிலை இன்னும் தொடர்கின்றது. எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றால் நாம் ஏன் தொழில் செய்யவேண்டும். சம்பாதிக்கவேண்டும்? எல்லாம் விதியே தரும் என்று சும்மா வீட்டில் படுத்து உறங்கவேண்டியது தானே? எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றால் பழைய முறைப்படியே நடப்போம் என்றால் நாம் இன்று நாகரீகமாக கருதும் தொலைபேசி டி.வி.,வீடியோ,இன்டர்நெட் என உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள கூடிய சாதனங்கள் வந்திருப்பதை உபயோகப்படுத்தக் கூடாது. மாவரைக்கும் இயந்திரம், மிக்ஸி, கேஸ், வாஷிங் மிசின், குளிர்சாதன பெட்டி என இவைகளும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருந்திருக்கும். பழைய முறைப்படியே நடப்போம் என்று இன்னும் ஆட்டுக்கல்லில் மாவரைத்துக் கொண்டும், அம்மிக் கல்லில் சாந்து அரைத்துக் கொண்டும் இருந்தால் விஞ்ஞானம் வளர்வது தான் எப்படி? இதில் யார் அறிவாளிகள். மிக்ஸியும், கிரைண்டரும் உபயோகித்து சில நிமிட நேரங்களில் வேலையை முடிப்பவரா? பல மணி நேரம் உடல் நோக துன்பப்படுபவரா? எனில் முன்னவர் அறிவாளியாவார். ஆனால் இன்னும் சிலர் தர்க்கம் செய்பவர் அம்மி ஆட்டுக்கால் உபயோகிப்பது உடலுக்கு உடற்பயிற்சியாக அமையும் என்று கூறுவர். அவர்களும் சிந்தியுங்கள். முன்னோர்கள் சத்துள்ள உணவை உண்டு வாழ்ந்ததால் அவர்களுக்கு அம்மியும், ஆட்டுகல்லும் சாத்தியமாக இருந்தது. இப்பொழுது இருப்பவர்களுக்கு சத்துள்ள உணவு கிடைக்கிறதா? சிந்தியுங்கள். மேலும் உடற்பயிற்சி செய்வதற்கு ஆயிரம் வழிகள் உண்டு. ஆயிரம் ஆசிரியர்கள் உண்டு. அம்மி, ஆட்டுக்கல் அரைத்துதான் உடற்பயிற்சியை பெறவேண்டும் என்பதில்லை. இதை போன்றது தான் எண்கணிதமும். முன்னொரு காலம் தொட்டு நடைமுறை வாழ்க்கையில் ஒரு சாரர் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு கலை சாதாரண மக்களுக்கும் பயன்பெற வந்திருப்பதை எண்ணி அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்டு நன்மைகள் அடைவதை விட்டுவிட்டு பழைய திண்ணை பேச்சுப் பேசி காலத்தையும், நேரத்தையும் வீணாக்காதீர்கள். நாம் துன்பப்படுகிறோமென்றால் பாவத்தின் விளைவுகள் என்பர். அதாவது பாவிகள் என்பர். நாம் பாவிகள் என்றால் நம்மை இயக்குபவன் ஒருவன் இருப்பான் அல்லவா? அவன் யார்? என்றால் அவன்தான் கடவுள். அவன் எங்கே? என்றால் அவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்றால் நம்முள்ளும் அவன்தானே இருக்கிறான். சற்றே சிந்தியுங்கள்! நாம் பாவிகள் என்றால் நம்முள் இருக்கும் கடவுளும் பாவிதானே! நம் கருத்துப்படி கடவுள் பாவி இல்லை. அப்படி என்றால் பாவிகள் யாரும் இல்லை. பாவப்பட்டவர்களும் யாரும் இல்லை. துன்பப்படுவதற்காக யாரும் பிறக்கவில்லை. பிறந்தவர்கள் அனைவரும் இன்பத்தை அனுபவிப்பதற்கே பிறக்கின்றனர். துன்பத்தை அனுபவிப்பதற்கு அல்ல.
கர்ம பலன்கள்(Benefits of Karma) கர்ம பலன்கள் மூன்று. அவை பிராரப்திய கர்மம். சஞ்சித கர்மம், ஆகாமிய கர்மம் என்பதாகும். அதாவது சஞ்சித கர்மம் என்பது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டனார், முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களாகும். பிராரப்திய கர்மம் என்பது நம் இன்றைய வரை செய்த செயல். ஆகாமிய கர்மம் என்பது இவ்விரண்டும் பாவ புண்ணியங்களின் விளைவுகள் ஆகும். நம் வாழ்க்கையில் நாம் பிறக்கக்கூடிய தேதியை, நேரத்தை, நிர்ணயம் செய்வது கர்மப் பலனே ஆகும். உதாரணமாக ஒருவன் காலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறந்திருப்பான் என்றால் அவன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். கஷ்டம் தோல்வி என்பதே கிடையது. அவன் செய்யும் செயல்கள் யாவும் வெற்றியை கொடுக்கும். அதே போல் மதியம் 12-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை பிறப்பவர் வாலிபப் பருவம் வரை, வெற்றி, தோல்விகளை அனுபவித்து அவ்வனுபவ அறிவை பாடமாக்கி பின் வாழ்வில் முன்னேறுவர். வாலிப பருவம் முதல் அதிர்ஷ்டமாக இருக்கும். மாலை 6-00 மணி முதல் 12-00 மணி வரை பிறப்பவர்கள் பெற்றோரின் ஆதரவில் வளர்ந்து, அவர்களிடம் கற்று, பல திருப்பு முனைகளை கண்ட பிறகு திருமண நாள் முதல் முன்னேற்ற மேற்படும். குழந்தை பிறந்ததிலிருந்து மேலும் அதிர்ஷ்டகரமாக இருக்கும். இரவு 12-00 மணி முதல் காலை 6-00 மணி வரை பிறப்பவர் அவருக்கு குழந்தை பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டம் பெறுவர். அதுவரை எதிர் நீச்சலிட்டு போராடும் நிலை இருக்கும். இதைபோல் அவன் பிறக்கும் நேரத்தை கர்ம பலன் நிர்ணயம் செய்கிறது. ஆகவே நாம் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே கேட்டு, நல்ல செயல்களை மேற்கொள்வோமானால் நம் சந்ததியினருக்கு பயன்தருவதோடு அல்லாமல் இந்த உலகத்திற்கும் நன்மை தரக்கூடியது ஆகும். நல்ல செயல்கள் என்பது எது என்றால் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திற்கோ, பிற்காலத்திற்கோ, உயிருக்கோ, மனத்திற்கோ, தீங்கு செய்யாத எச்செயலும் நல்ல செயல்களே என வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார். இந்த நல்ல செயல்களை நாம் ஆராய்ந்து செய்வதே நம் ஆறாவது அறிவின் பயனாகும். உண்ண, உறங்க, உடுத்த என்று ஐந்தறிவுள்ள செயல்பாட்டை தவிர்த்து, ஆறறிவுள்ள மனிதனாக வாழ முயற்சி செய்வோம். இந்த நன்மை நம் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்குமேயாகும். மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு பல அறிஞர்களும், ஞானிகளும், சித்தர்களும் முயன்று சரியானபதிலை கூறமுடியவில்லை. அவர்கள் அனைவரும், கர்மா என்ற ஒன்றையே கூறிவந்தனர். கர்மபலன் என்பது ஒரு பகுதியே, முழுமையானது அல்ல. நாம் பிறக்கும் நேரத்தையும், பிறக்கும் நாளையும், கர்ம பலன் தான் நிர்ணயம் செய்கின்றது. அந்த கர்மபலனின்படி பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் குறிப்பிட்ட சுகங்களை அனுபவிக்க கூடியவர்களாகவும், எத்தகைய குணாதிசயங்கள் பொருந்தியிருப்பார்கள் என்பதை கர்மபலனே நிர்ணயம் செய்கின்றது. ஆனாலும் கர்மபலன் மட்டுமே நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. உதாரணமாக ஒரு குடும்பத்தில் 4 பேர் அண்ணன், தம்பிகள் உள்ளனர் எனில், ஒரு தாய் தந்தையின் கர்மாவை வைத்து பிறக்கின்றனர். அவர்கள் 4 பேருக்கும் ஒரே கர்ம பலன் மட்டுமே இருக்க முடியும். இவர்களுக்கு இன்பமோ, துன்பமோ வசதியோ, வசதி இல்லாத நிலையோ ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏன் ஒருவன் பணக்காரனாகவும் ஒருவன் ஏழையாகவும், ஒருவன் ஏற்றதாழ்வுகளை சந்தித்த வண்ணமும், ஒருவன் சமுதாயத்தில் குற்றவாளியாகவும் என நான்கு பேரும் பல்வேறு நிலைகளில் இருப்பதற்கு காரணம் என்ன? என சிந்தித்தால் கர்மபலன் மட்டுமே காரணமல்ல. கர்மபலன் நாம் செல்லக்கூடிய இலக்கை காண்பிக்கிறதே ஒழிய அடைவதும், அடையாததும், கர்மப் பலன் வாயிலாக அறிய முடியாது. அதற்குமேலும், சிந்தித்தோமானால் நம்மை வழி நடத்தி செல்லக்கூடியதும். இன்பதுன்பங்களை அனுபவிக்க செய்யக்கூடியதும், இலக்கை அடைய (அ) அடையாமல் செய்யக் கூடியதுமான சர்வ வல்லமை படைத்த சக்தி எதுவென்றால் நமது பெயரே ஆகும். கர்மப்பலன் நமக்கு வழியை காட்டினாலும், நம் கையை பிடித்து இழுத்துச் செல்லக்கூடிய அற்புத சக்தியாக நம் பெயர் உள்ளது. ஆகவே தான் "பெயரை சர்வ வல்லமை படைத்த சக்தி" என்று கூறுகிறோம். கர்ம பலன் தோற்றத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தாலும், இந்த அறிவை, மனதை, உயிரை, இயக்கக்கூடிய மறைபொருளாக இருக்கும் பெயரை அதன் வலிமையை, ஞானிகள், விஞ்ஞானிகள் மத்தியிலும் வைக்கிறேன்.
பிரபஞ்ச இயக்க ஒழுங்கு (Order to enable the Universe) இன்றய விஞ்ஞான உலகத்தில் எண் கணிதம் பிரமிக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது என்றால், இது இந்த உலகத்தில் மாற்றத்தை வெளிக் கொணர்வதற்கான ஒரு காலக்கட்டம். இந்த சமுதாயம் ஒரு ஆச்சரியமான வளர்ச்சியை எண் கணிதம் வாயிலாக அடையபோகிறது என்பதில் ஐயமில்லை. இப்பிரபஞ்சத்தில் நடக்கும் எச்செயலும் எதேச்சையாக நடப்பவை அல்ல. அவை யாவும் திட்டமிட்டு நடக்க கூடியதாகவே நடந்து கொண்டிருக்கிறது. அன்றைய ஞானிகளும், முனிவர்களும் இக்கணக்கினைக் கொண்டு நடக்கபோகும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவின் துணை கொண்டு வெளிப்படுதினர். அன்றைய ஞானிகளும், இன்றைய விஞ்ஞானிகளும், ஏற்றுக்கொள்ளும் ஒரு கலையாக எண் கணிதம் வளர்ந்து வருகிறது. பூமி தன்னை தானே மணிக்கு 1000 கி.மீ வேகம் சுழன்று கொண்டு, சூரியனை 365 நாட்களில் மிக துல்லியமாக ஒரே வட்டப்பாதையில் சுழன்று கொண்டு இருக்கிறது. பூமியை சந்திரன் 30 நாட்களுக்கு ஒரு முறை சுழன்று கொண்டும், அதைப்போல் அண்ட வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் தன்னைத்தானே சுழன்று கோண்டும், இருக்கிறது. தன் பாதையைத் திருத்திக் கொண்டோ, மாறியோ செல்வதில்லை. இந்த கிரகங்களின் கதிர்கள் நம் பூமியை ஆதிக்கம் செலுத்துவதைப் பொருத்து நம் எண்ண அலைகளும், செயல்பாடுகளும் மாற்றங்களும் நடைபெறுகின்றன. அண்ட வெளியிலுள்ள அனைத்து கிரகங்களும் எப்படி ஒழுங்கு மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றனவோ அதே போல் இவ்வுலக தோற்றமும் ஒழுங்கு முறையிலானவை. NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS ARULNIDHI AKSHAYADHARMAR,B.SC.,M.A.,M.PHIL.,DNYT SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. CELL:9842457516,www.srkmahan.com EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம் அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி, வேகம், பருமன் இவற்றின் துணை கொண்டு பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி, தெய்வானை என்று குறிப்பிட்டனர். காந்தன் காலத்தால் மருவி கந்தனானார். அதே போல் சிவ சக்தி என்பதும், சிவனின் தன் பாதி சக்தி என்று கூறுவதன் உள்நோக்கம், இயக்கமற்ற சிவனுள் இயங்கும் சக்தி தன் பாதி என கூறப்பட்டது. இச்சிவனை இயக்கமற்றவன் என்பதை சுத்த வெளி என்பர். இயங்கும், சக்தி களம் என்பது அண்ட கோடியில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஜீவராசிகள் அனைத்துமாகும். கிரகங்களின் தோற்றமும், அதன் சுற்று வட்டபாதைகளும் அது செல்லும் வேகமும் ஒரே மாதிரியானதாகும். அணுக்களின் கூட்டமே கிரகங்களாகும். அணுக்கள் ஒன்றோடொன்று மோதியும், விலகியும் அதாவது ஈர்க்கும் சக்தியையும், தள்ளும் சக்தியையும் கொண்டு அதிகமாக அவைகளும் இரு சக்திகளை மையமாக வைத்து இணைந்து கிரகங்கள் தன் வட்டப்பாதையில் தன்னை தானே சுழன்று கொண்டு தன் பாதையில் நகர்ந்தும் பிசகாமல் சூரியனை மையமாக வைத்து சுழன்று கொண்டு வருகிறது. பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய அனைத்தும் அணுக்களின் கூட்டமேயாகும். இவற்றில் முதலில் தோன்றியது விண் ஆகும். பிறகு காற்று, அடுத்ததாக நீர், நெருப்பு, நிலம் என்பதாகும். கிரகங்கள் அனைத்தும் சக்தி களம் முழுவதும் ஒரு வட்ட வடிவமான ஒரு அமைப்பாகும். அவற்றில் விண் என்ற அணுவிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், விண்கல் தன்னுள் மோதிக்கொண்டு காற்றை வெளிப்படுதுகின்றன. இக்காற்றானது மையத்தை நோக்கி விரைந்து வரவர அதன் அடர்த்தி அதிகமாகி ஆக்ஸிஜன் அதாவது நாம் சுவாசிக்கும் காற்றாக அமைகிறது. இதனையே நம் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 10 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்தியாகவும், அதற்குமேல் 100 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்த்தி குறைவாகவும் அமந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக்ஸிஜன் ஆகிய காற்று மையத்தை நோக்கி விரைந்து செல்லும் பொழுது ஹைட்ரஜன் வாயுவாக திரிந்து இவை ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் (H2O) இணைந்த நிலயை நீரின் தோற்றமாக உள்ளது. இந்த நீர் அதன் மையத்தை நோக்கி செல்லும் பொழுது நெருப்பாக ஆகிறது. இந்த நெருப்பு குழம்பு அதன் மையத்தை நோக்கி விரையும் பொழுது, இருக்கும் அணுக்கருக்குள் சிதைவு ஏற்பட மையத்திலிருந்து நெருப்பு குழம்பு பீறிட்டு வெளிவருகிறது. இது நீர் பரப்பிற்கு அப்பால் சென்று எரிமலையாக அமைகிறது. அங்குள்ள காற்று ஆக்ஸிஜன் அந்த எரிமலையை குளிரச் செய்து கற்பாறைகளாக, மலைகளாக அமைகிறது. இவ்வாறு நிலம் அமைகிறது. இதன் மொத்த தொகுப்பை பூமி என்று அழைக்கிறோம். விண் தோன்றுவதற்கு முன் வெற்றிடமே அமைந்திருக்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் விண் உருவாகி விண்ணிலிறிந்து காற்று உருவாகி, நெருப்பிலிருந்து நிலம் உருவாகியுள்ளது. இதன் அடுத்த நிலையே பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டமாகிய உயிரினங்கள் முதல் மனிதன் வரை தோன்றியுள்ளனர். இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. ********************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. Contact AKSHAYADHARMAR +91-98424 57516 web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************************** பிறப்பும் இறப்பும் பிறப்பிற்கு இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களே ஒருவரது வாழ்க்கையின் வரலாறாக அமைகிறது. பிறப்பில் எவ்வித பாகுபாடுமில்லை. இறப்பிலும் எவ்வித பாகுபாடுமில்லை. பிறந்தவன் ஒருநாள் இறப்பது உறுதி. யாரும் இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இப்படி இருக்கையில் நம் பிறப்பிற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏன்? நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன்? ஒருவர் குற்றவாளியாக இருக்கிறார். ஒருவர் எதிர்பாராத விபத்தினால் மரணமடைக்கிறார். ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையில் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கிறார். ஒருவர் வியாதிகளால் அவதியுறுகிறார். ஒருவர் இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து வருகிறார். ஒருவர் இச்சமுதாயதிற்கு தீமைகளை செய்து வருகிறார். ஒருவர் வசதி வாய்ப்புகளோடு வாழ்கின்றார். ஒருவர் புகழும் அந்தஸ்தையும் பெற்று வாழ்கிறார். ஒருவர் கையையோ காலையோ இழந்து காணப்படுகிறார். ஒருவர் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடையாக, வீழ்ச்சியாக உள்ளது. முன்னேற முடியாமல் துடிக்கின்றனர். குழந்தையில்லா நிலை, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை, திருமணம் தள்ளிக்கொண்டே செல்வதான நிலை, எதிர்காலம் பற்றிய பயம், தன்னுடைய மரணம் எப்படிப்பட்டதோ என்ற பயம், தொழிலில் நஷ்டத்தின் மேல் நஷ்டம் என அன்றாட வாழ்வில் காணும் துன்ப நிகழ்ச்சிகளோ ஏராளம் காரணம் என்ன? ஏன் இந்த மாறுபாடு ஒருவர் நன்மையை மட்டும் அடைகிறார். ஒருவர் தீமையை மட்டுமே அனுபவித்துவருகிறார். இதற்கு காரணம் யார்? நம் பெற்றோர்களா? நம்மை சுற்றியுள்ளவர்களா? நம் நண்பர்களா? இந்த சமுதாயமோ? இந்த நாடா? இந்த உலகமா? நம் முன்னோர்களா? அல்லது நம் அரசாங்கமா என்று நம்முள் கேட்டு பார்த்தால் பெற்றோர்கள் எப்பொழுதாவது தன் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவார்களா என்றால் இல்லை. அப்படியானால் பெற்றோர்கள் காரணமில்லை. முன்னோர்கள் என்றால் நம் கண்ணுக்கு தெரியாதவர்கள் இவர்களும் காரணமில்லை. இந்த சமுதாயமா என்றால் இந்த சமுதாயம்தான் நமக்கு படிக்கவும், உடைகளும், உணவும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த சமுதாயமும் காரணமில்லை. இவ்வாறு பார்த்தால் யாரும் காரணமில்லை. நம் பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது. பெயர்தானே என்ற அலட்சிய போக்கு இன்னும் நிலவுகிறது. காரணம் கெடுக்க நினைக்கமாட்டார்கள். ஆகவே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பெயரை அறியாமையால் சூட்டுகிறார்கள் தவிர தெரிந்து சூட்டுவதில்லை. மனிதர்களுக்குள் மாறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நாம் பிறக்கக்கூடிய தேதி, மாதம், வீதி எண், கிழமைநேரம்பஞ்சபூதங்களில்எண்அடிப்படையில் பிறந்துள்ளோம் என்பதை பொருத்து மாறுபடுகிறது.பிறப்பவர்கள் யாரும் துன்பப்படுவதற்கு என்று பிறக்கவில்லை. பிறந்த தேதி நம் குணாதிசயங்களையும், வீதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்வோம் என்பதையும் நிர்ணயம் செய்கின்றது. ஜீவகாந்த பதிவு (BIO-MAGNETIC RECORD) ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடல், ஸ்தூல உடல், சூக்குமஉடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் மனதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் எனக்கூடிய மனதின் தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட மொத்த தொகுப்பு ஜீவ உடல் ஆகும். ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடலில் மனதில் உள்ள ஆழ்மனம், அடிமனம், மேல்மனம், இதில் நமது பெயர் ஆழ்மனதில் நம்மையரியாமல் மனனமாகி கொண்டேயிருக்கும் இந்த மனனத்தின் விளைவால் ஆழ்மனதில் பதிவு ஆகிறது இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இது எவ்வாறெனில் நீர் உள்ள பாத்திரத்தில் நடுவில் ஒரு கல் விழுந்தால் எவ்வாறு அந்த அலை பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்குமோ அதுபோல் நம்பெயர் பரு உடல், உயிருடல், மனஉடல் என்ற மூன்று உடலிலும் பதிவாகிறது. இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இந்த மூன்று உடலின் மொத்த பதிவையே ஜீவகாந்தப் பதிவு என்பதாகும். இந்த ஜீவகாந்தத்தில் பெயர் பதிவு மட்டுமே நிகழ்வதில்லை கண்ணால் காணக்கூடியதும், நம் எண்ணங்களும், செயல்பாடுகளும், காதால் கேட்பதும், நாம் பேசக்கூடியது என அனைத்தும் பதிவாகின்றது இந்த பதிவுகளை பற்றி பின்னொரு நூலில் விளக்கிக் கூறலாம். ********************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. Contact AKSHAYADHARMAR +91-98424 57516 web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************************** ஜீவகாந்த பதிவு ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடல், ஸ்தூல உடல், சூக்குமஉடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் மனதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் எனக்கூடிய மனதின் தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட மொத்த தொகுப்பு ஜீவ உடல் ஆகும். ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடலில் மனதில் உள்ள ஆழ்மனம், அடிமனம், மேல்மனம், இதில் நமது பெயர் ஆழ்மனதில் நம்மையரியாமல் மனனமாகி கொண்டேயிருக்கும் இந்த மனனத்தின் விளைவால் ஆழ்மனதில் பதிவு ஆகிறது இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இது எவ்வாறெனில் நீர் உள்ள பாத்திரத்தில் நடுவில் ஒரு கல் விழுந்தால் எவ்வாறு அந்த அலை பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்குமோ அதுபோல் நம்பெயர் பரு உடல், உயிருடல், மனஉடல் என்ற மூன்று உடலிலும் பதிவாகிறது. இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இந்த மூன்று உடலின் மொத்த பதிவையே ஜீவகாந்தப் பதிவு என்பதாகும். இந்த ஜீவகாந்தத்தில் பெயர் பதிவு மட்டுமே நிகழ்வதில்லை கண்ணால் காணக்கூடியதும், நம் எண்ணங்களும், செயல்பாடுகளும், காதால் கேட்பதும், நாம் பேசக்கூடியது என அனைத்தும் பதிவாகின்றது இந்த பதிவுகளை பற்றி பின்னொரு நூலில் விளக்கிக் கூறலாம். ஜீவ காந்தத்திற்கும் வான் காந்தத்திற்கும் உள்ள தொடர்பு ஜீவகாந்தமாகிய உடலுக்கும் வான்காந்தமாகிய பஞ்சபூதங்களுக்கும், நவக்கிரகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களுமே இவ்வுடலை இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நம் ஞானிகள் முன்னரே அறிந்து விளக்கியுள்ளனர். அதாவது பஞ்சபூதங்களால் ஆன உடலை நவக்கிரகங்கள் இயக்குகின்றன. எந்த வகையில் எனில் சூரியன் நம் உடலில் உள்ள எலும்பையும், சந்திரன் நம் உடலில் உள்ள இரத்தத்தையும், செவ்வாய் நம் உடலில் உள்ள சிவப்பணுக்களையும், குரு கிரகம் நம் உடலில் உள்ள மூளையோடும், சனி கிரகம் நம் உடலில் உள்ள நரம்புகளோடும், சுக்கிர கிரகம் நம் உடலில் உள்ள விந்து குழம்போடும், புதன் கிரகம் நம் உடலில் உள்ள தோல்களோடும், ராகு, கேது சூரியனின் மையத்திலிருந்து வெளிப்படும் காந்த அலை பாதையானதால் அது சக்தி களம் முழுவதும் வியாபித்து சிவகளத்தில் கலக்கிறது. ராகுவும் கேதுவும் உடல் முழுவதையும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதிலிருந்து பஞ்சபூதங்களால் ஆன உடலில் மூன்று உடல், மூன்று உடலில் மூன்று மனம் கொண்ட தொகுப்பை ஜீவகாந்தம் என்றும் இந்த உடலுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு, இவை அனைத்தும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் சங்கிலி தொடர்போல, அமைந்து ஒரு காந்த தன்மையை உருவாக்குகிறது. நம் எண்ணம், சொல், செயல்கள் யாவும் ஜீவகாந்தப் பதிவுகளாகி இந்த பதிவுகள் யாவும் வான் காந்தப் பதிவுகள் ஆகிறது. இந்த வான்காந்தப்பதிவு நம் தேவைக்கேற்ப எடுத்துக் கொடுக்கிறது. உதாரணமாக ஒரு மனிதரை சந்திக்கிறோம் அவரிடம் சுமார் அரைமணிநேரம்பேசி விட்டு திரும்புகிறோம் பிறகு இரண்டொரு நாள் கழித்து அவரைப்பற்றி நினைக்கிறோம். அவரிடம் பேசிய விசயத்தைப்பற்றி நினைக்கிறோம். அவருடைய உருவத்தை மனக்கண் முன் காண்கிறோம். இது எப்படி வருகிறது? என சிந்தித்தோமானல் நாம் பார்த்த அவர் உருவம் நம் கண் மூலம் காணும் பொழுது அவர் சுமார் 5 அடி இருக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவர் சுமார் உருவம் நம் கண்ணில் ஒரு கொசு அளவில் பதிவாகி அந்த உருவம் நம் மூளையில் பதிவாகி பிறகு ஆழ் மனதில் பதிவாகிறது. அது உடல் முழுவதும் பதிவாகி வான்காந்தத்தில் பதிவாகிறது. நாம் அவரை நினைக்கும் பொழுது அவர் உருவம் வான்காந்தத்திலிறிந்து துரியம் (Cerebral Cortex) வழியாக மூளைக்கு வந்து மூளையிலிருந்து நம் கண்ணிற்கு பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் பேசிய செய்திகள் முதல் அனைத்தும் பதிவாகின்றன. அந்த பதிவுகள் ஜீவகாந்தப் பதிவு, வான்காந்தப்பதிவு என இருபகுதியாக உள்ளது. இதிலிருந்து ஜீவகாந்தத்தில் பதிவாகும் அனைத்தும் வான்காந்தத்திலும் பதிவாகும் என்பது தெரிய வருகிறது.
பெயருக்கும், ஜீவகாந்தத்திற்கும், வான் காந்தத்திற்கும் உள்ள தொடர்பு ஜீவ உடலில் ஸ்தூல உடல், சூக்கும் உடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிர் உடல், மன உடல், என்பவையில் மன உடலில் உள்ள ஆழ் மனம், அடிமனம், மேல்மனம் என்பதில் ஆழ்மனதில் பெயர் பதிவடைகிறது. அதாவது என்னுடைய பெயர் "R.கிருஷ்ணன்" என்று நம்மையரியாமல் பதிவாகிறது. இந்த ஆழ்மனப் பதிவானது மூன்று உடலில் பதிவாகிறது. ஆழ்மனப் பதிவை நாம் எப்படி அறிவது எனில் நம்மை நமது பெயரை எங்காவது, யாராவது கூப்பிட்டால் உடனேயே நாம் திரும்பிபார்க்கிறோமே காரணம் ஆழ்மனதினுடைய பிரதிபலிப்பு. அதேபோல் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது கொசு ஒன்று நம்மை கடிக்கும் பட்சதில் நாம் விழிக்காமல் விழிப்புநிலையில் இருக்கும் ஆழ்மனம் நம் மூளையை இயக்கி நம்மையும் அறியாமல் கையினால் அடிக்கச் செய்கிறது. அதற்கும் காரணம் நம்முள்ளே இயங்கும் ஆழ்மனதினுடைய விளைவேயாகும். ஆழ்மனதிற்கு உறக்கம் என்பதே கிடயாது. இவ்வாறு ஆழ்மனதில் பதிவடையும் நம் பெயர் மூன்று உடலிலும் பதிவடைகிறது. இந்த ஜீவகாந்தப் பதிவுகள் யாவும் வான் காந்தத்திலும் பதிவாகிறது. ஜீவகாந்தத்திற்கும், வான்காந்தத்திற்கும் இடைப்பட்ட சங்கிலித் தொடர் போன்ற அமைப்பின் மூலம் ஏற்பட்ட காந்தத் தன்மையே பெயரின் காந்தத்தன்மையோடு சேரும்போது ஜீவகாந்தத்தில் சிலமாற்றங்கள் நிகழ்கிறது. அது பாதிப்புகளாகவும் ஊக்கப்படுத்துவதுமாகவும் அமைகிறது. இந்தப் பதிவுகளின் விளைவுகளே நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும் எதிர்பாராத விபத்துக்களையும் நோய்களையும் தரக்கூடியதாக அமைகிறது. ஜீவகாந்தம் பிறந்த தேதி, வீதி எண் (கூட்டு எண்) கிழமை, மாதம் பஞ்சபூதத்தில் எதன் அடிப்படையில் பிறந்தோம் என்பதை பொருத்து அமைகின்றது. ஒரு குறிப்பிட்ட நான்கு கிரகத்தின் தன்மையை தன்பால் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. இத்துடன் பெயராகிய மூன்று கிரகம் சேரும் பொழுது அந்த காந்தத்தன்மைக்கு ஒத்துவராமல் அமையும் பொழுது உடல், மனம், உயிர் தன் நிலையிலிருந்து மாறுபடுகிறது. அதாவது நோய்கள் ஏற்படுகிறது. மனம் அலைக்களிக்கப் படுகிறது, உயிர் தன் சுய பலத்தை இழக்கிறது. அதே போல் பெயராகிய மூன்று கிரகம் முன் உள்ள நான்கு கிரகத்தோடு ஒத்து போகும் பொது உடல், மனம், உயிர் மூன்றும் ஊக்குவிக்கப்படுகிறது. புகழும், அந்தஸ்த்தும் உயர்கிறது. பொருளாதாரத்தில் தடையில்லாத நிலையும் ஏற்பட்டு இன்பத்தை வாரி வழங்குகிறது. பஞ்சபூதங்களால் ஆன உடலில் எந்த தன்மையில் பிறக்கின்றாரோ அதற்கு ஒத்த தன்மையில் பெயர் அமையுமானால் நீண்ட ஆயுளை பெறுகின்றார். உதாரணமாக நிலத்தின் தன்மையால் பிறந்த ஒருவருக்கு நெருப்பின் தன்மையால் பெயர் அமையுமானால் ஆயுள் பலம் குறையும் என்பதால் எண் கணித முறைப்படி பெயர் வைப்பதில் பஞ்சபூதங்களும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே பெயருக்கும், ஜீவகாந்தத்திற்கும், வான் காந்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வான்காந்தம் நமது சூழ்நிலையை உருவாக்கக் கூடியதாக அமைந்துள்ளது. ஜீவகாந்தம் நம் உடலை இயக்கக் கூடியதாக அமைகிறது. இவ்விரண்டும் காந்தத் தன்மையோடு பெயர் இணைதும் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்கிறது. ஜீவகாந்தத்தன்மையின் ஒரு பகுகுதியாக உள்ள பெயரினை நாம் மாற்றியோ, திருத்தியோ ஜீவகாந்தத் தன்மைக்கேற்ப பெயரை அமைத்து ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படித்திக் கொள்ளலாம். ஜீவகாந்தத் தன்மையின் ஒரு பகுதிகளாக உள்ள பெயரை திருத்தியோ மாற்றியோ அமைப்பதன் மூலம் வான் காந்தத்தன்மையும் மாறுபடுகிறது. இதனால் உடல், மனம், உயிர் மற்றும் சூழ்நிலைகளும் மாற்றம் பெறுகிறது.ஜீவகாந்தம் மற்றும் வான்காந்தத்தின் தன்மையை மாற்றம் செய்ய பெயர் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பெயரை கொண்டு மறைமுக ஆற்றலாக உள்ள கிரக ஆற்றலை வெளிக்கொணரச் செய்து இந்த உடலையும், மனதையும், உயிரையும் சூழ்நிலையையும் திருத்தி அமைக்க செய்யும். இந்த கலையே இது காணும் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கலையாகும்.“முள்ளை முள்ளாலேயே எடுக்க வேண்டும் என்பது பழமொழி. அதுபோல துன்பம் எதனால் ஏற்படுகிறது என்று ஆழ்ந்து ஆராய்ந்து சென்றோமானல் அதன் ஆதி நிலையாக உள்ள ஆணிவேரை நாம் காணமுடியும். அந்த ஆணிவேரை வேரோடு பிடுங்கி எறிவதால் நம் துன்பம் கலையப்படும். அந்த ஆணி வேராக உள்ள பெயரே இப்பொழுதுதான் கிடைத்துள்ளது. அதனை பிடுங்கி எறிய பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும், கற்றறிந்த பெரியோர்களும் முயற்சி செய்வார்களேயானால் இந்த சமுதாயத்திற்கு அவர்கள் செய்யும் மிகப் பெரிய தொண்டு ஆகும். இந்த சமுதாய மக்களை மூன்று பிரிவாக பெரியோர்கள் பிரித்துள்ளனர். சிறுவர்கள், வாலிபர்கள், வயதானவர்கள். இந்த நிலையில் சமுதாயத்திற்கு சேவை செய்யும் முக்கிய பங்கு யாரிடம் உள்ளது எனில் சிறுவர்கள் அறிவின் வளர்ச்சியை பெறுபவர்கள். வயதானவர்கள்நோய்களால் துன்பப்படுபவர்கள். இவர்களில் வாலிபப்பருவத்தினர் மட்டுமே சமுதாயத்திற்கு நன்மைகள் செய்ய முடியும். வாலிபப் பருவத்தினர் பெயர் பற்றிய அறிவினை வளர்த்துக் கொண்டால், இந்த சமுதாயம் சொல்லிலடங்கா நன்மையை அடையும். மக்களின் துன்பத்தை போக்க பல ஆயிரம் ஆண்டுகளாக ஞானிகளும், முனிவர்களும் அறிஞர்களும், விஞ்ஞானிகளும் முயன்று தன்னிறைவு அடையாத நிலையில் அவரவர்கள் சென்ற பாதையைச் சுட்டிக்காட்டி அவர்களால் முயன்ற வரை முயற்சித்து சென்றார்கள். இன்று கம்ப்யூட்டர் காலத்தில் அறிவியல் வளர்ச்சிகள் பிரமிக்கத்தக்க அளவில் வளர்ந்திருந்தாலும் மக்களின் துன்பத்தை சீர்படுத்துவதாக உள்ளதா எனில் அதுவும் இவ்வுலகை துன்பத்தில் ஆழ்த்தக் கூடிய அளவிலேயே வளர்ந்துள்ளது. இன்று நமக்கு கிடைத்திருக்கும் இந்த எண்கணிதம் உயிரினங்களில் உச்சக்கட்ட அறிவாகிய ஆறாவது அறிவின் துணைக்கொண்டு நம் துன்பங்களை நாமே களைய கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பு ஆகும். இதை தங்கப்புதையலாக கருதி அனைவரும் பயன்பெறுவதே சிறப்பாகும்.
நம் உடலில் உள்ள மையங்கள் நம் ஒவ்வொரு உடலிலும் 8 மையங்கள் உள்ளன. இந்த 8 மையங்கள் 8 சக்கரங்களாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த 8 சக்கரங்களும் உடலில் உள்ள உறுப்புகளை தனக்குள் பிரித்துக் கொண்டு சீராக வைத்துக் கொள்வதற்கான அமைப்பாக செயல்படுகிறது. மையங்களில் உள்ள சக்கரங்கள் முறையே. 1. துரியம் (Cerebral cortex) 2. மனோன்மணீயம் (Pineal gland) 3. ஆக்கினை (Convernous plexy) 4. விசுக்தி (Pharyngeal plexy) 5. அனாகதம் (Cardiac plexy) 6. மணிப்பூரகம் (Solar plexy) 7. சுவாதிஷ்டானம் (Hypogaestric plexy) 8. மூலாதாரம் (Coccygeal plexy என்பனவையாகும். இவற்றை பண்டைய கால ஞானிகளும், முனிவர்களும் கண்டு உணர்ந்து இந்த சக்கரம் சீராக இயங்க பயிற்சியும் செய்து மற்றவர்களுக்கு கற்றுத் தரவும் செய்துள்ளனர். இதை இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ந்து உண்மையென கூறி இதற்கு நாளமில்லா சுரப்பிகள் (Ductless glands) என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த எட்டு மையத்தை மையமாக வைத்தே எழுத்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். இந்த எட்டு சக்கரங்களில் எந்த சக்கரம் பாதிப்புக்குள்ளானாலும், சீரான இயக்கம் இல்லையென்றாலும், அந்த சக்கரத்தோடு தொடர்புடைய உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த சக்கரங்களை மீண்டும் இயங்கச் செய்ய அந்த காலத்தில் கையினால் தன் உயிர் ஆற்றலை மற்றவருக்கு செலுத்தி அச்சக்கரம் இயங்க உதவி செய்தனர். இதற்கு பாஸஸ் (தொட்டுணர்த்தும்) முறை என்று பெயர். இதன் மூலம் சிறிய வியாதிகள் முதல் பெரிய வியாதிகள் வரை தொடர்ந்து தொட்டு உணர்த்து முறையில் (Passes) செயல்பட்டு குணப்படுத்தினர். ஆனால் மீண்டும் குறிப்பிட்ட காலம் வரை சீராக இருந்து மீண்டும் வந்தடைகின்றது. இன்றைய மருத்துவத்துறையில் எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பெரும் நோய்களை குணப்படுத்த இயலவில்லை. அவர்கள் தற்காலிகமாக விடுதலையளிக்கின்றனரே தவிர நிரந்தரமாக நோய் குணமாக்க இயலவில்லை காரணம் எதனால்? இந்த நோய் ஏற்படுகிறது என்ற மூல காரணத்தை துருவி ஆராய்தலில் அவர்கள் விஞ்ஞான அடிப்படையில் பார்த்தனரே அன்றி மெய்ஞ்ஞான அடிப்படையில் பார்க்கவில்லை. நம் ஞானிகளும், முனிவர்களும் நோயின் மூலத்தை கண்டு அதனை சரிசெய்தும் வாழ்ந்தனர். அதனால் தான் இந்து ஆலயங்களில் இருக்கும் தெய்வங்கள் அந்தந்த நிலையில் உள்ளார் என கூறி அதற்கென சக்கரங்களையும் மந்திரங்களையும் நிறுவி வழிப்பட செய்தனர். உதாரணமாக திருச்சியில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்பாள் சுவாதிஷ்டான நிலையில் உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் உள் அமைந்துள்ள மூலஸ்தானத்தில் உள்ள அம்பாளின் உருவம் அமைப்பில் தொப்புளுக்கு அருகில் சுவாதிஷ்டான சக்கரம் இயங்கும் இடத்தில் நாகம் தலைதூக்கி நிற்பது போன்று அமைத்து இங்கு தீபாராதனையும் காண்பிப்பர். இதுபோல் ஆலயங்கள் நமக்கு பல உண்மையான மறைமுகமான கருத்துக்களை வெளிப்படுத்தவே அமைந்துள்ளது. அதே போல் சிவனின் பழைய படங்களை பார்த்தால் இந்த எட்டு மையங்களையும் சிவனின் உருவத்தில் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம். அதாவது ஒவ்வொரு நிலையிலும் ஒரு பாம்பு உடலை சுற்றி வளைத்து கொண்டு இருந்து படமெடுத்தாற்போன்று காட்சி அளிக்கும், கழுத்தில் ஒரு பாம்பு அதாவது விசுக்தியை நினைவு கூறுவதாகவும், மார்பில் ஒரு பாம்பு அனாகதத்தை நினைவுப்படுத்துவதாகவும், சுவாதிஷ்டானம், மூலாதாரம் எனவும் நெற்றியில் இரு புருவங்களுக்கு இடையே உள்ள மூன்றாவது கண்ணாக அமைந்துள்ள சக்கரம் ஆக்கினையையும், தலையில் ஜடாமுடியோடு முடியில் ஒரு பாம்பு அமையப்பெற்று துரியத்தை நினைவுப்படுத்துவதாகவும் எட்டு வகையான சக்கரங்களை அமைத்துள்ளனர், இந்த எட்டு வகையான சக்கரங்கள் அமைக்கப்பட்ட சிவனின் உருவத்தை மனதில் நிறுத்தி விழிப்பட்டால், நம் எட்டு சக்கரமும் நம்மையறியாமல் இயக்கம் ஊக்குவிக்கப்படும் என்பதற்காக அமைத்துள்ளனர். அதாவது நாம் எதை ஒன்றை நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இந்துக்கள் தெய்வ வழிபாட்டில் ஏதோ ஒரு கருத்தை நிலை நிறுத்தி சென்றுள்ளனர். அன்றைய காலத்தில் விளங்கவைக்க போதிய வசதி வாய்ப்புகள் கிடைக்காததால், காலத்தால் அறிந்து கொள்ளட்டும் என கூறி சென்றுள்ளனர். அதே போல் விநாயகரும் தன் வயிற்றில் தொப்புள் இருக்கும் இடத்திற்கருகில் பாம்பு சுற்றி உள்ள படங்களை கண்டிருக்கின்றோம். அது மூலாதாரம் நிலையில் அமர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறு எட்டு மையங்களாக உள்ள எட்டு சக்கரங்களும் அன்றைய காலம் முதல் நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் இணைத்து பார்க்கும் பொழுது இந்த எட்டு சக்கரங்களுக்கும் நம் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்த எட்டு சக்கரங்களும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கத்துக்குட்பட்டுள்ளது. ஆங்கில எழுத்துக்கள் 26-ஐ நாம் உச்சரிக்கும் விதத்தில் எட்டுமையங்களாகவும் எட்டுசக்கரங்களாகவும் பிரித்துள்ளனர். உதாரணமாக V- என்ற எழுத்தை உச்சரிக்கும் போது நம்முன் குறிப்பிட்ட "அலை" விகிதாச்சாரத்தில் செல்கிறது. இந்த அலையானது நம் உடலில் உள்ள Cardiac Plexy என்று அழைக்கக்கூடிய அனாகதச் சக்கரம் வரை செல்கின்றது. இவ்வாறு 26-எழுத்துக்களையும் 8 பிரிவாக பிரித்துள்ளனர். அண்ட வெளியில் உள்ள அனைத்துக்கும் நம் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் இந்த சக்கரங்களுக்கும் தொடர்பு உண்டு. சர்வ வல்லமை படைத்த இந்த சக்கரங்கள் இந்த உடல், மனம், உயிர், மூன்றும் இயங்க இயங்க ஒழுங்கை ஏற்படுத்தும் ஒரு களமாக அமைந்துள்ளது. அறிவு இந்த எல்லாவற்றையும் ஆளும் திறன் படைத்தது. அறிவு அதன் தன்மையால் உண்மையை உணரக்கூடிய நிலைக்கு இச்சக்கரங்களை அறிந்து செயற்படும் நிலைக்கு இழுத்துச் செல்கிறது என்றால் அறிவின் ஆட்சித் தரத்தை வியக்காமல் இருக்கமுடியாது. அறிவே தெய்வம், அறிவையே தெய்வமாக வழிப்படுங்கள் என்று தாயுமானவர் கூறியுள்ளார். இந்த எட்டு மையங்கள் பற்றிய அறிவை ஞானிகளும் சித்தர்களும் அறிந்து அதை இயக்கி பயன்பெற்றார்கள். நோயின்றி, துன்பமின்றி வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய காலத்தில் இந்த எட்டு மையங்கள் பற்றிய அறிவு கிட்டாமையலும் அதை பற்றிய முக்கியத்துவம் தெரியாமையாலும் அந்த எட்டு மையங்கள் சீர்தூக்கி இயக்க முடியாமல் பலப்பல துன்பங்களுக்கும் ஆளாகி அவதியுறுகிறார்கள். தற்பொழுது கிடைத்திருக்கும் இந்த எண் கணிதம் என்ற காந்தத் தத்துவத்தின் மூலம் இந்த எட்டு மையங்களில் எந்த மையம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பெயரைக் கொண்டு கண்டுபிடித்து அதே பெயரைக் கொண்டு இயக்கச் செய்து நோய்களை கட்டுப்படுத்தி, நிரந்தரமாக குணமடையச் செய்வதற்கே நேம்யோபதி (Nameopathy) சிகிச்சை என்று பெயர். இச்சிகிச்சை எந்த நாட்டினருக்கும் பயன்படும். இந்த உலக முழுமைக்கும் நேமியோபதி (Nameopathy) சிகிச்சை பொருந்தும். இந்த சிகிச்சைக்கு பிறந்ததேதி, பெயர் மட்டுமே போதுமானது. பிறந்த தேதியிலிருந்து பிறந்த தேதி, மாதம், விதிஎண், கிழமை, பஞ்சபூதம் என்ற ஐந்தின் அடிப்படியில் பெயரை சீர்திருத்தி அழைத்தோமானால் தினசரி எழுதுவது மூலமே நோய்கள் குணமடையும். இத்தகைய சிகிச்சை நேமியோபதி (Nameopathy) சிகிச்சை எனப்படும். ஏற்கனவே இருக்கக்கூடிய பெயரை கொண்டு எந்த சக்கரம் சீர்கேடடைந்து உள்ளது என்பது தெரியவரும். அவ்வாறு சீர்கேடடைந்த சக்கரத்தை மீண்டும் சீர் செய்ய பிறந்த தேதி, மாதம், விதிஎண், கிழமை, பஞ்சபூதம் ஆகியவற்றை கொண்டு ஏற்கனவே உள்ள பெயரை சீர்திருத்திக் கூட்டியோ, குறைத்தோ, மாற்றியோ தினசரி எழுதுவதன் மூலமே நாள்பட்ட நோயும் மிகப் பெரிய அதாவது திடீர் மரணத்தை ஏற்படுத்த கூடிய இருதய பலஹீனம் இரத்த அழுத்தம், சர்க்கரை ஆஸ்துமா போன்ற நோய்களையும் குணப்படுத்த முடியும். நோயைப் பற்றிய விரிவான நூல் பிறகு வெளிவரும்.
பெயர் நம்மை எப்படி இயக்குகிறது? இந்த உடல் அணுக்களால் கட்டப்பட்ட ஒரு ஆலயம். இந்த ஆலயத்தில் மூலஸ்தானமாக அமைந்திருப்பது கருமையம் ஆகும். அணுக்களால் கட்டப்பட்ட இந்த உடல் என்பதை பாரதியின் ஒரு பாடலைக் கொண்டு நினைவு கூறலாம். "காக்கை, குருவி, எங்கள் சாதி! காடு, மலைகள், எங்கள் கூட்டம்" என்ற வரியை கூர்ந்து கவனித்தால் பாரதி என்ற கவிஞன் மிக பெரிய காந்த தத்துவத்தை விளக்கும் ஞானியாக இருந்துள்ளார் என்பதை நாம் அறிய முடியும். காக்கை, குருவிகள் எங்கள் சாதி காடு, மலைகள், எங்கள் கூட்டம் என்ற சொல் காக்கை குருவி பசித்தால் உண்ணும் எங்களை போன்ற ஒரு சாதி என்றும் காடு மலைகள் எங்களை போன்று அணுக்களின் கூட்டம் என்றும் கூறுகின்றார். அணுக்களால் கட்டப்பட்ட இந்த உடலுக்குள் இயங்கும் அற்புதங்கள் ஏராளம் ஏராளம். அண்டவெளியில் அமைந்துள்ள அனைத்தையும் இந்த உடலுக்குள் காணமுடியும். மறைபொருளாக இருக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நம் உடலுக்குள் தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளது. இதனால் தான் நம் அறிஞர்கள் கடவுள் = கட+வுள் உள்ளே கடந்து பார் என்று கூறினார்கள். உள்ளே கடந்து பார்த்தால், அண்டவெளியில் நமக்கு தெரியும் இந்த உலகத்தையே நம் முன் காணமுடியும் என்பதை மகாபாரதத்தில் கிருஷ்ணர் தன் வாயைப்பிளந்து உலகை காண்பித்தார். அவ்வாறு கிருஷ்ணர் செய்தது நாம் அவர் வாயினுள் பார்க்க அல்ல. நம் முன் பாருங்கள் இந்த உலகத்தை அறியலாம் எனக் கூறினார். இந்த சக்திகளம் முழுவதும் என்ன உள்ளது எனப்பார்த்தால் நவக்கிரகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த பூமியில் பஞ்சபூதங்கள் நிறைந்துள்ளன. அதற்கப்பால் சுத்தவெளி அமைந்துள்ளது. பஞ்சபூதங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு அழுத்தம் ஒலி, ஒளி, சுவை, மணம், உயிரினங்களில் மனம் என தோன்றின. உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியில் மனம் என்ற ஒன்றை உணரும் மனிதன் ஆறாவது அறிவை கொண்டு தோன்றினான். இந்த அடிப்படையில் உயிரினம் தவிர பஞ்சபூதம் நவக்கிரகங்கள் அனைத்தும் நம் உடலோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ளன. நவக்கிரகங்களும், பஞ்சபூதங்களும் உடலுக்குள் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. உடல் என்பது நம் கண்ணுக்குத் தெரிந்த பரு உடல் எனக் கருதக் கூடாது. பரு உடலோடு கூடிய உயிருடல், மன உடல், மின் உடல் என நான்கு உடல்கள் உள்ளன. இவற்றுள் மறைபொருளாக உள்ளது அறிவு, பரு உடல், உயிர் உடல், மன உடல், மின்னுடல், என நான்கு உடல்களில் மன உடலாகியதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் என்ற மூன்று நிலைகள் உண்டு. இதில் ஆழ்மனதில் மிக அதிகமாக பதிவாவது நம் பெயரெயாகும். இந்த ஆழ்மனம் நம்முடைய பெயரை நம்மையறியாமல் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்கின்றன. இந்த பதிவின் விளைவாக 3 உடலிலும் பரவி இந்த உடலுக்கு அப்பாலும் பரவி செல்கிறது. இந்த உடல்பதிவை தான் அதாவது ஜீவ உடலில் ஏற்படும் பதிவை ஜீவகாந்தப்பதிவு என்றும் இவ்வாறு ஜீவகாந்தத்தில் பதிந்த நம் பெயர் வான் காந்தத்திலும் பதிவடையும். இவ்வாறு வான்காந்தத்தில் பதிவடையும் பொழுது தான் அது நம்மை சுற்றி சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஆழ் மனப்பதிவை நாம் எப்படி அறியமுடியும் என்றால் நம் வேறு செயல்கள் செய்து கொண்டிருக்கும் பொழுதும் சரி சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுதும் சரி "சேகர்" என நமது பெயரை யாராவது கூப்பிடுவாரேயானால் உடனே திரும்பிப் பார்க்கின்றோமே ஏன்? இது தான் ஆழ்மனதினுடைய தன்மை. ஆழ்மனதிற்கு மிகுந்த வலிமையும், வல்லமையும் உண்டு முன் கூறியபடி ஒருவர் தூக்கத்திலேயே சட்டென கொசுவை அடிக்கிறார், அடிக்கத் தூண்டியது எது என்றால் அது தான் ஆழ்மனதினுடைய விளைவு. நாம் உறங்கினாலும் ஆழ்மனம் எப்போதும் விழிப்புணர்வுடன் உள்ளது என்பதை அறிகிறோம். ********************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. Contact AKSHAYADHARMAR +91-98424 57516 web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************************** இத்தகைய தன்மை கொண்ட ஆழ்மனம் நம்மையறியாமல் பெயரைப் பதிவு செய்து கொண்டேயுள்ளது. இவ்வாறு ஆழ்மனதில் நம் பெயர் பதிவடைந்து மூன்று உடலிலும் பரவி ஜீவகாந்தப்பதிவாகி பிறகு வான் காந்தப்பதிவாகி நம் சூழ்நிலையை அமைக்கின்றது. ஒருவருடைய பிறந்த தேதி, குணாதிசயத்தையும் விதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதையும், அந்த பிரயாணத்தையும் நாம் எப்படி செய்கிறோம் என்பதையும் நம் பெயர் நிர்ணயம் செய்கிறது. நம் பிறந்த தேதி முன் கூறியபடி கர்ம பலனின் வாயிலாக நிர்ணயம் ஆகிறது. விதி எண் என்பது பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் எண், ஒரு கிரகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு. இந்த விதி எண் ஒருவர் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதை குறிக்கும். அதாவது புகழை எடுத்து கொள்வோம் ஒருவர் தெரு அளவில் புகழ் அடைய முடியும் என்பதையும், ஊர் அளவில் புகழ் அடைய முடியும் என்பதையும், மாவட்ட அளவில், மாநில அளவில், இந்த நாடு அளவில் என அவருக்கு விதிக்கப்பட்ட விதியை நிர்ணயம் செய்ய கூடியதாக இவையாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் அடிப்படையாக கொண்டு சொல்லபடுகின்றன. பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களும் நம்மை இயக்குகின்றன. எல்லா கிரகங்களும் இயக்கிக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் தனது ஆட்சிக்குட்படுத்துகின்றது. அவ்வாறு ஆட்சிக்குட்படுத்தும் பொழுது நம் செயல்பாடுகள், உடல் நோய்கள் என ஏற்படுகின்றன. அனைத்து கிரகங்களும் நம் முன் இயங்கிக் கொண்டிருந்தாலும் பிறக்கும் நாள் அன்று 9 கிரகங்களில் 4 கிரகங்கள் முழு ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த 4 கிரகங்களும் நம் வாழ்வோடு ஒன்றி பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவர் 22-6-1998 அன்று திங்கள்கிழமை பிறக்கிறார் என்றால் அவருக்கு ராகு, சூரியன், புதன், சந்திரன் என்ற 4 கிரகங்களின் முழு ஆதிக்கத்திற்குட்படுகிறார். அதாவது பிறந்த தேதி 22 என்பது ராகு கிரகத்தின் ஆதிக்கத்தையும், ஜூன் மாதம் 22 என்பதால் புதன் ஆதிக்கத்தையும், விதி எண் 1 என்பதால் சூரியனின் ஆதிக்கத்தையும், திங்கட்கிழமை என்பதால் சந்திரனின் ஆதிக்கத்தையும் பெறுகின்றார். அதைப்போல் பஞ்சபூதங்களின் அடிப்படையில் உப்பு நீரின் தன்மையில் பிறந்துள்ளார். "இவ்வாறு நான்கு கிரகத்தின் ஆதிக்கத்திலும் பஞ்சபூதங்களின் நீரின் ஆதிக்கதிலும் பிறந்துள்ளார்". இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் தொடர்ந்து சம்பவித்துக் கொண்டே இருக்கும். இதை நிலையானது (Constant) எனலாம். இம்மாதிரியான நான்கு கிரகங்களின் சேர்க்கையிலும், பஞ்சபூத சேர்க்கையிலும் எந்த மனிதனும் கஷ்டப்படவேண்டும் என்பதோ அகால மரணம் அதாவது எதிர்பாராத விபத்திலோ, திடீர் மரணம் ஏற்படவேண்டும் என்றோ கிடயாது. இந்த நான்கு கிரக ஆதிக்கமும் பஞ்சபூத சேர்க்கையும் நமக்கு நன்மைகளை வாரி வழங்குகிறதே தவிர தீமைகள் ஏற்பட வழிவகுக்கவில்லை. இதிலிருந்து, பிறக்கும் எந்தன் மனிதனும் துன்பப்படுவதற்காக பிறக்கவில்லை என்பது தெரியவருகிறது. இவ்வாறு நான்கு கிரகங்களின் சேர்க்கை சரியில்லாது இருக்கும் போது பெயரின் உதவியைக் கொண்டு சரிசெய்துக் கொள்ளமுடியும். எந்த சூழ்நிலையிலும் கிரகங்களின் சேர்க்கை சரியில்லாத போதும் சுகமான வாழ்க்கையாவது தருகிறதே ஒழிய துன்பப்படுத்துவது இல்லை. துன்பத்திற்கு பெரிதும் காரணமாக இருப்பது பெயரே ஆகும். அதாவது பெயரில் 3 கிரகம் அமைந்துள்ளது. எப்படி எனில் இனிசியலில் ஒரு கிரகம் பெயரில் ஒரு கிரகம், இனிசியலோடு பெயரும் சேர்ந்து ஒரு கிரகம். பெயரே ஆட்சி செலுத்துகிறது. இந்த பெயரில் உள்ள 3 கிரகமும் ஏற்கனவே பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு ஒத்தும் உதவியாகயிருக்கும்படி அமைத்து பெயரில் பஞ்சபூதத்தின் அடிப்படையிலும் பெயர் சரியாக அமைத்தால் திட்டவட்டமாக சிறப்பான வாழ்வு உண்டு. எதிர்பாராத விபத்தினால் மரணமில்லை. குற்றவாளி என்கிற அமைப்பில்லை. துன்பம், கஷ்டம். நஷ்டம் என்பதில்லை. பஞ்சபூதங்களால் பதிப்புகள் கிடையாது. மனதில் அமைதியும், ஆனந்தமும் நிரந்தரமாக நிலைக்கும். செல்வ செழிப்பு கிடைக்கும். நினைத்தது நடக்கும். செயல்பாடுகள் யாவும் உலக நன்மைக்கு பயன்படும். எதிர்பாராத விபத்தினால் மரணமில்லாமல், குற்றவாளிகள் அற்ற துன்பமற்ற செல்வ செழிப்போடு மக்களின் மத்தியில் அமையும், ஆனந்தமும் பெற்று ஒரு உலகம் அமையுமானால் எப்படி இருக்கும் என சிந்தியுங்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளை எண் கணிதத்தால் பெறமுடியும். நம்மையும் இந்த உலகத்தையும் பெயரே இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆம், இதற்கு பல உதாரணம் கூறலாம். கோயமுத்தூர் என்று உபயோகித்து கொண்டிருந்தவரை ஊர் சிறப்பாக இருந்தது. கோவை(Covai) என்ற பெயர் உபயோகப்படுத்தியதிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது. C O V A I 3+7+6+1+1 = 18 18 என்ற எண் சூரியனும், சனியும் சேர்ந்து ஆதிக்கமாக கொண்டதினால் தீக்கிறையாக வேண்டும் என்பதே எண் கணிதத்தில் விதிக்கப்பட்ட விதி. சூரியனை பிரதானமாக வைத்து கேது சேர்ந்தாலும், சனி சேர்ந்தாலும், சுக்கிரன் சேர்ந்தாலும் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. மற்றொரு உதாரணம் கூறலாம். S R I L A N K A 3+2+1+3+1+5+2+1 = 18 எண் கொண்ட ஸ்ரீலங்காவும், ராமாயண காலத்திலிருந்து எரிந்து அழிந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சூழ்நிலையை பெயரே அதாவது பெயரில் உள்ள கிரகமே ஏற்படுத்துகிறது. மேலும் சமீபத்தில் கோவையில் எரிந்து சாம்பலான ஷோபா என்ற கடைக்கும் பெயர் 18 எண் அமைந்ததே காரணம். S H O B A 3+5+7+2+1 = 18 என்ற எண்ணாகும். இதிலிருந்து பெயரில் உள்ள எண்ணுக்கு எத்தகைய வலிமையுள்ளது என்பதை அறியலாம். இவை ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பொருந்த கூடியவை. இன்னும் பல நாடுகளையும் கூறலாம். இதை போல் மனிதர்களுக்கும் இனிசியலிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, சூரியனை பிரதானமாக வைத்து சுக்கிரனோ, கேதுவோ, சனியோ, வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதாவது இனிசியலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ 16,17,18எண் வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் என்பதை திட்டவட்டமாக கூறிவிடலாம். இதற்கு பல உதாரணங்களை கூறலாம். உதாரணமாக, முன்னாள் ராணுவத்துறை அமைச்சர் N.V.N சோமு அவர்களுக்கு 5+6+5 = 16இன்சியலில் 16 எண் அமைந்தால் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தார். இந்த எண்ணுடைய குணம் யாதெனில் இந்த எண் வரும் பெயரை உடையவருக்கு ஆரம்பத்தில் கெடுத்துக் கொண்டேயிருக்கும். இது எப்போது உச்சநிலையை அடைகிறதோ அப்போது உயர்ந்த நிலைக்கு இழுத்துச் சென்று திடீரென எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தும். அந்த மரணமும் உடல் சிதறக்கூடிய வகையில் அமையும். மேலும் உதாரணம், பிரிட்டிஸ் இளவரசி C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 எண் அமைந்துள்ளதால் அதனுடைய விளைவையடைந்தார். இதுபோல எண்ணில் அடங்கா உதாரணங்களை கூறிக் கொண்டேயிருக்கலாம். இந்த எண்ணில் உள்ள குணம் கவிழ்விக்க கூடிய குணம் ஆகும். அதே போல் J A P A N 1+1+8+1+5 = 16 எண் அமைந்துள்ளதால் நாடு எவ்வளவு தான் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் அது வீழ்ச்சியை அடைந்துக் கொண்டுதான் இருக்கும். இதற்கடுத்தாற்போல் 17 என்ற எண்ணும் சூரியனை பிரதானமாக வைத்து கேதுவின் ஆக்கத்திற்குட்பட்டது. அதாவது இந்த எண்ணினுடைய தன்மை யாதெனில் ஒருவரை கார் வாங்கும் அளவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி அதே காரிலேயே எதிர்பாராத விபத்தினை ஏற்படுத்தக் கூடியது. அதாவது மோட்டார் வாகனத்தில் விபத்து என்பது தான் விதிக்கப்பட்ட விதி. இவை அன்றாடம் ஏராளமான நபர்களை பார்க்க கூடிய அளவில் தான் உள்ளது. மேலும் இனிசியலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ 8 எண் வருமானால் பஞ்சபூதங்களால் பாதிக்கப்படலாம். எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுவதற்கு காரணம் உள்ளது. அதாவது இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ சனியினுடைய ஆதிக்கத்தில் அமையுமானால் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. உதாரணமாக, நம் பாரதப் பிரதமர்களில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராஜிவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியும் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தனர். இதற்கு காரணம் இவர்களது தந்தையின் மற்றும் கணவரது பெயர் ஃபெர்ரோஸ்காந்தி என்பதால் இனிசியல் "F" அதாவது 8-ன் தன்மையில் சனியினுடைய ஆதிக்கத்தில் அமைந்தமையால் எதிர்பாராத விபத்தினால் மரணம் விளையக்காரணமாய் இருந்தது. இதைபோல ஏராளமான உதாரணங்களை தரலாம். இத்தகைய சனியினுடய ஆதிக்கத்தினால் பெரியசாமி, பொன்னுசாமி இவர்களை போன்றவர்களின் பிள்ளைகள் பெரிதும் பதிப்புகுள்ளாகிறார்கள். இந்த எண்ணினுடைய குணம் யாதெனில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை, சுகத்தை, சந்தோஷத்தை, எந்த அளவில் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து முடிவில் பஞ்சபூதங்களலோ, எதிர்பாராத விபத்தினாலோ மரணத்தை ஏற்படுத்துகிறது. அடுத்ததாக சந்திரனை எடுத்து கொள்வோம். சந்திரன் பிரதானமாக வைத்து சந்திரனே இணைந்தாலும் சுக்கிரன் இணைந்தாலும், செவ்வாய் இணைந்தாலும் கெடுதலான விதியையே அடைகிறது. அதாவது 22, 26, 29 என்பது போன்ற பெயர்களிலோ, இனிசியலிலோ மொத்த எண்ணிலோ வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதாவது சந்திரனோடு சந்திரன் இணையும் பொழுது சுயநலவாதிகளால் சூழப்படக் கூடிய நிலையும், சுயநலவாதிகளால் பயன்படுத்தப்பட்டு எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதே போல் சுக்ரன் இணையும் பொழுது எதிரிகளால் சூழப்பட்டு எதிரியால் மரணம் என்பது. இதற்கு விதிக்கப்பட்ட விதியாகும். அதாவது எதிரிகள் என்பது ஆட்களாக இருக்கலாம். வாகனமாகவோ அல்லது விஷ மருந்தாகவோ கூட இருக்கலாம். ஆக மொத்தம் திடீரென எதிர்பாராதபடியே விபத்தாகவே வாழ்க்கை முடிகிறது. அதே போல் செவ்வாய் சேரும் பொழுதும் மிக கெடுதலான பலன்களே நடக்கிறது. அதாவது கோர்ட், கேஸ் என வழக்குகளால் அலைக்கழிக்கப்படுவதாக அமைகிறது. மற்றவர்கள் முன் இவர்கள் குற்றவாளிகளாக நிற்கும் நிலை ஏற்படும். இதற்கடுத்தாற்போல குருவை பிரதானமாக வைத்து புதன் (35) சேர்க்கையும் சிறப்பானதல்ல. இவை வீண் தொல்லைகளையும், வம்பு வழக்குகளையும் உண்டு பண்ணும். தவறான வழிக்கு இழுத்துச் செல்லும்படி மனதை தூண்டும். அதையும் மீறி இவரால் சேர்க்கப்பட்ட செல்வம் இவர்கள் முன் அழிந்து, இவரும் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடையவேண்டும் என்பதே விதி. அதே போல குருவை பிரதானமாக வைத்து சனி சேர்க்கையும் (38) பெரிய ஆட்களுடைய தொடர்புகளை ஏற்படுத்தி மனத்தில் துக்கத்தை ஏற்படுத்தும். உயர்பதவி, புகழ், அரசாங்க ஆதரவுகளை ஏற்படுத்தி எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. இதேபோல ராகுவின் இரட்டை சேர்க்கையும் (44) சட்டவிரோதமான காரியம் தீயவழிகளில் பணம் சேர்க்க முயல்வர். பிற்காலத்தில் அனைத்தையும் பறிகொடுப்பர். ஒரு காலையோ, கையையோ இழக்க வேண்டிவரும். இதே நிலை நீடித்து முடிவில் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல ராகுவோடு செவ்வாய் சேர்க்கை (49) செல்வத்தை வேகமாக கொடுத்து ஒரு கலையோ, கையையே இழக்க செய்து எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துகிறது. இதேபோல 8, 16, 17, 18, 22, 26, 29, 35, 38, 44, 48, 49, 53 போன்ற எண்கள் பெயரிலோ, இனிசியலிலோ, மொத்த எண்ணிலோ வருமானால் எண் கணித முறைப்படி பெயரை சரிபார்த்து திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொள்வதன் மூலம் தீய விளைவுகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ********************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. Contact AKSHAYADHARMAR +91-98424 57516 web:http://akshayadharmar.blogspot.com ********************************************************************************** எப்படி நம் பெயரை கண்டறிவது என்றால், A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்ற எண்களை நினைவில் கொண்டு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் தனித்தனியாக பிரித்து எழுதி அதற்குரிய மதிப்பெண்களை போட்டு இனிசியல் தனியாகவும், பெயரை தனியாகவும், மொத்த எண்களை தனியாகவும் கூட்டி பார்க்க முன் சொன்ன 8, 16, 17, 18, 22, 26, 29, 35, 38, 44, 48, 49, 53 போன்ற எண்கள் வருகின்றதா என பார்க்கவேண்டும். S. R. THANGARASU என பெயரை கையெழுத்திடுகிறார் என வைத்து கொள்வோம். S. R. THANGARASU 3. 2. 45153312136 5. 31 = 36 இதில் இனிசியல் எண் 5 ஆகியும், பெயர் எண் 31எண் ஆகவும், மொத்த எண் 36 எண்ணாகவும் அமைந்துள்ளது. அதேபோல P. GANESAN 8. 315531 8. 23 = 31 இதில் இனிசியல் எண் 8, பெயர் எண் 23 ஆகவும், மொத்த எண் 31 எண்ணாகவும் அமைந்துள்ளது. இதில் இனிசியலில் 8 எண் இருப்பது நல்லதல்ல. R. SANKAR 2. 315212 2. 14 = 16 இதில் இனிசியல் எண் 2, ஆகவும், பெயர் எண் 14 ஆகவும், மொத்த எண் 16 ஆகவும் அமந்துள்ளது. இதில் மொத்த எண் 16 ஆக உள்ளது நல்லதல்ல. மேலும், V.N.V SUNDHAR 6.5.6 3654512 17. 26 = 43 இதில் இனிசியல் எண் 17 எண்ணும், பெயரில் 26 எண்ணும், மொத்தத்தில் 43 எண்ணும் அமைந்துள்ளது. பெயரும் இனிசியலில் உள்ள எண்களும் நல்லதல்ல. சரியான முறையில்சரியானபாதைக்கு அழைத்துச் செல்வோமானால் இந்த உலகம் சரியான பாதையில் அதாவதுவெற்றிப் பாதையில் செல்லும். தனி மனிதனுடைய முன்னேற்றமே அவன்குடும்பத்தினுடைய முன்னேற்றம், அந்த குடும்பத்தினுடைய முன்னேற்றமே அந்தஊரினுடைய முன்னேற்றம், அந்த மாநிலத்தின் முன்னேற்றம், அந்த மாநிலத்தினுடையமுன்னேற்றமே அந்த நாட்டின் முன்னேற்றம், அந்த நாட்டின் முன்னேற்றமே இந்தஉலகத்தினுடைய முன்னேற்றம். ஆகவே முதலில் நம் தேவை தனி மனிதனுடைய முன்னேற்றம் இந்த தனி மனிதனுடைய முன்னேற்றம் பொருளாதாரத்தாலோ, குடும்பச் சூழ்நிலையாலோ எதிர்பாராமல் தடைபடுமேயானால்அது இந்த உலக முன்னேற்றத்தை பாதிக்கிறது. ஆகவே தனி மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற்றமும், மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெற்று வாழ தனி மனிதனுடைய பெயரை சரிபார்த்து அமைத்து கொள்ளவேண்டும்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME &DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5,500/= 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND,OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12,000/= 2 ND STAGE (16SUBJECT) JEWISH,EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20,000/= 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40,000/= 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE,TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன்,ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70,000/= மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . ********************************************************************************** SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES, CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112. Contact AKSHAYADHARMAR +91-98424 57516 web:http://akshayadharmar.blogspot.com **********************************************************************************

No comments:

Post a Comment