
பெயர் சரியில்லாமையால் ஏற்படும் துன்பங்கள்
பெயர் என்ற காந்த ஆற்றலை துல்லியமாக அளவிட்டு பார்த்து நம் எதிர்காலத்தை அறிந்து அதை திருத்திக் கொள்ளும் ஒரு ஆற்றலாக செயல்படுவது எண் கணிதமாகும். இத்தகைய எண் கணிதம் அண்டத்தை விலக்கி, அணுவை துளைத்து ஆதியை உணரும் கலையாக செயல்படுகிறது. நம் துன்பங்களை கலையும் ஒரு மருந்தாக செயல்படுகிறது என்றால் வியப்பில்லை.
பல்வேறு ஞானிகளும், முனிவர்களும், அறிஞர்களும், நம் துன்பங்களை போக்க பல்வேறு வழிகளில் முயன்று கண்டுபிடித்து நமக்கு விட்டு தந்துள்ள அற்புதமான கலை எண் கணிதக் கலை. ஆகவேதான் திருவள்ளுவர் எண் கணிதக் கலையை நன்றாக உணர்ந்து, அறிந்து இதன் சிறப்பை இவ்வுலகில் வாழும் உயிர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு" என்று கூறியுள்ளார்.
அதாவது இவ்வுலகில் வாழும் உயிர்களுக்கு, மக்களுக்கு பிறந்த தேதியின் எண்ணும் எழுத்தும் ஆகிய தலையெழுத்தாக உள்ள பெயர் இந்த இரண்டும் சரியாக இருந்தால் இரண்டு கண்கள் எப்படி ஒளி பொருந்தியுள்ளதோ அதேபோல் வாழ்க்கையும் ஒளிபொருந்தி இருக்கும் என்பதை கூறியுள்ளார்.
திருவள்ளுவர் மட்டும் கூறவில்லை பல ஞானிகளும் கூறியுள்ளனர். ஒளவை மூதாட்டியும் எண்ணும் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்று கூறியுள்ளார். இவர்கள் இத்தகைய வரியை ஏனோதானோ என்று கூறவில்லை. ஆழ்ந்து சிந்தித்து பெயருக்கும் எண்ணுக்கும் உள்ள தொடர்புகளை அறிந்து அதன் ஆற்றலை உணர்ந்து தான் பாடலாக எழுதியுள்ளனர். பெயரே நம் துன்பதிற்கும், இன்பதிற்கும் காரணமாக உள்ளது. எத்தகைய துன்பங்களுக்கும் காரணமாக உள்ளது எனில் குடும்பத்தில்,
- கணவன், மனைவிக்குள் ஒற்றுமையின்மை.
- குழந்தைகளின் எதிர்காலம் தனது எதிர்காலம் பற்றிய பயம்.
- நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருத்தல்.
- ஜான் ஏற முழம் இறங்குதல் போன்ற நிலை.
- குழந்தைபேறு இல்லாத நிலை.
- செய்கின்ற தொழிலில் முன்னேற்றமின்மை.
- நஷ்டம், கடன் தொல்லையால் அவதி.
- மற்றவர்களால் ஏமாற்றப்படுத்தல்.
- எதிரிகளால் அமைதியின்மை, பயம்.
- வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகளால் வஞ்சிக்கப்படுவது.
- பதவி உயர்வு தடைபடுதல்.
- வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தும் தடைபடுதல்.
- திருமணப் பொருத்தம் அமையாமல் தள்ளிக் கொண்டே போவது.
நோய்களால் பதிப்பு, இரத்த அழுத்தம், சர்க்கரை, மூத்திரக் காய்கள், கண்ணில் நீர் வடிதல், கீழ்வதம், தோல் சம்பந்தமான வியாதிகள், வயிற்று வலி, ஆஸ்துமா, வாயு, பிடிப்பு, குடல் சம்பந்தமான பசியின்மை, தூக்கம் கெடுவது, நரம்பு பலஹீனம், பாரீச வாயு, மூறை பலஹீனம், சித்த பிரம்மை, காக்கை வலிப்பு, இருதய பலஹீனம், மலச்சிக்கல், குடலபுண், மூலரோகம் என இருபது வகையான வியாதிகளுக்கும் பெயரே காரணமாக உள்ளது.
மேலே கண்ட துன்பங்கள் பெயரை கொண்டே வருகிறது. இத்தகைய துன்பங்களை சரிசெய்ய பெயரின் உதவியின்றி குணம் செய்ய முடியாது. தற்காலிகமாக ஏனைய மருத்துவத்தில் தடைபடுத்த முடியுமேயன்றி நிரந்தரமாக குணப்படுத்த இயலாது. பெயரினால் ஏற்பட்ட துன்பத்தைப் பெயரினாலே தான் சரி செய்ய முடியும்.
நோய்களும் சரி, கஷ்டம், நஷ்டம், போன்ற துன்பங்களாக இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமையின்மை, எல்லாவற்றிற்கும் பெயரே காரணமாக உள்ளது. இத்தகைய வல்லமை படைத்த பெயரை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தினை அடிப்படையாக வைத்து பழைய பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொண்டால் துன்பங்கள் விலகிவிடும். எண் கணிதத்தால் பயனடைந்தோர்பல்லாயிரம் பேர். எண் கணிதம் பார்க்காமல் அழிபவர்கள் பலகோடி பேர்.
விதியை நிர்ணயம் செய்வது விதி
விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. நாம் அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்தும் சொல் அர்த்தம் என்னவென்றால் தன்னால் இயலாத காரியத்தையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று நம்மை இயக்குகிறது என்பதையும் உள்ளுணர்வாய் கொண்டு விதி, பாசம், இவைகளுக்கு கட்டுண்டு குறுகிய வட்டத்துக்குள் சுழலும் அமைப்பையும் விதி என்றே கூறுகிறோம். என்னுடைய தலைவிதி இவரிடம் ஏமாறவேண்டும் என்று கூறுவதிலும் தலைவிதி என்று கூறுகிறோம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது எனில், நாம் செய்யும் தவறுகளை விதி என்று கூறி தப்பித்துக் கொள்வதற்கு பயன்படுத்துகிறோம். அல்லது நம் மனதை சாந்தப்படுத்திக் கொள்வதற்காக விதியை பயன்படுத்துகிறோம். ஆனால் அடிக்கடி நம் தலைவிதி, தலையெழுத்து, நெற்றியில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும். உனக்கென்று விதிக்கப்பட்ட விதி இதுதான் என்றெல்லாம் விதியை பட்டியலிட்டு உபயோகிக்கிறோம்.
இந்த விதியை எங்கோ ஒருவன் இருந்து கொண்டு நம் தலையில் எழுதி வைத்ததாகவும், பல கதைகளாக எண்ணி கூறிக் கொள்கிறோம். ஆனால் அன்றைய ஞானிகளும் முனிவர்களும் விதி என்று கூறியது நம் பெயரைதான். பெயரின் காந்த ஆற்றலை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து அந்த அறிவைக் கொண்டே பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என இவற்றை அடிப்படையாக கொண்டு பெயரை நிர்ணயம் செய்து நம் எண்ணம் போல் வாழ வழிவகுதுக் கொடுக்கிறது.
இந்த ஆற்றலை கூர்ந்து நோக்கினால் விதியை விட மதியே வலிமைப்பெற்றது. அந்த மதியால் விதியை நிர்ணயம் செய்ய முடியும் என்பது புலனாகிறது. வலிமை படைத்த ஒன்று அதற்குட்பட்ட செயல்பாடுகளை அறிந்து தன் இச்சைப்படி நடத்தும் குணம் வலிமைக்கு உண்டல்லவா. அதுபோலதான் விதியை மதியே நிர்ணயம் செய்கிறது. இதனால் விதிக்கு வலிமை இல்லை என கருதக்கூடாது. விதியை மாற்றியமைக்கவேண்டும் என்று விதி இருந்தால் ஒழிய மதி வேலை செய்யாது. அறிவை கொண்டு விதியை நிர்ணயம் செய்கிறோம். அதையும் செய்வதற்கு விதியிருந்தால் தான் நடக்கிறது. மதியை கொண்டு விதியின் வலிமையை அறிந்து, அதன் இயக்கத்தை துல்லியமாக கணக்கிட்டு, காந்தத் தன்மையின் விளைவுகளை அறிந்து சரி செய்யும் ஒரு அற்புதக் கலையாக எண்கணிதக் கலை அமைந்துள்ளது.
இத்தகைய எண்கணிதக் கலை வாழ்வியல் நிகழ்ச்சிகளை மிக துல்லியமாக கூர்ந்து நோக்கி ஆய்வின் ஒரு துளியை அடைந்துள்ளோம். இந்த ஒரு துளி, பெருவெள்ளமாக பெருக்கெடுத்து, ஒரு ஆறாக, ஒரு கடலாக ஆகும் நிலை ஏற்படும் பொழுது இந்த நில உலகில் துன்பமில்லை, நோயிமில்லை, பாவிகளில்லை என்ற நிலை வந்துவிடும். அப்பொழுது இவ்வுலகில் வாழும் மக்கள் எல்லாம் இன்பத்தை மட்டுமே சுவைத்து கொண்டிருப்பர். இப்பூமி சுவர்க்க பூமியாக மாறிவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கர்மப்பலனை ஒருபகுதியகவும், பெயரை ஒரு பகுதியாகவும் கொண்டு இந்த உடல், மனம், உயிர் ஆகிய மூன்றும் சரீரங்களுக்கும், பஞ்சபூதங்களுக்கும் நவகிரகங்களுக்கும் உட்பட்டு இயங்கி கொண்டிருக்கின்றன. ஆன்றோர்களும், பெரியோர்களும், சித்தர்களும், முனிவர்களும், ஞானிகளும், பல்லாயிரம் முறை சொல்லி வந்த ஒரு சொல் எந்த செயலுக்கும் ஒரு விளைவு உண்டு, செயலுக்கேற்ற விளைவுகள் உண்டு அது எந்த செயலையும் குறிக்கும் என்றால் நாம் நம் பெயரை எழுதுகிறோமே அதற்கும் விளைவு உண்டுதானே? அதை ஆராய்ந்ததன் விளைவே நம் துன்பங்களை போக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இவ்வாறு கூறி நல்லதையே செய்யுங்கள். நல்லதையே பாருங்கள். நல்லதையே நினையுங்கள். நல்லதே நடக்கும் எனக் கூறிவந்தனர்.
இந்த மாதிரி நல்லதையே நினைக்க பேச, கேட்க, பார்க்க நல்ல எண் அதாவது பெயர் அமைந்தால் தான் நடக்கும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவன் மனம், உடல், உயிர் அனைத்தும் தீயவழிகளுக்கு இழுத்து செல்கிறது. நாம் ஒரு திருடனை பிடித்து டேய்! ஏன்டா இப்படி திருட்டு வேலை செய்கிறாய்? எதாவது தொழில் செய்து பிழைக்க வேண்டியது தானே என்று கேட்டல் அவன் என்ன கூறுகிறான். எனக்கு தொழில் திருட்டு தொழில் நான் எதற்காக திருடுகிறேன். சாப்பிடுவதற்காக தான். ஆகவே தவறு ஒன்றுமில்லை என்று கூறுகிறான். இதில் இருந்து என்ன தெரிகிறது இந்த சமுதாயம் கெடுதலான தொழில் என வைத்துள்ளது. அவனைப் பொருத்தவரை நியாயம் எனக் கூறுகிறான். காரணம் அவனுடைய மனம் தீய வழிக்குச் சென்று தீயவழியே அவனை பொருத்தவரை நல்லவழியாக மாறிவிட்டது. அந்த அளவிற்கு அவனது மனம் அவனை ஆதிக்கம் செலுத்துகிறது.
அந்த மனதை ஆதிக்கம் செலுத்துவது பெயர். ஆகவே திருத்தவேண்டியது அவனை அல்ல அவனது பெயரைத்தான். இதில் இருந்து நமக்கு என்ன தெரிகிறது? பெயருக்கு வல்லமை அதிகமா? மனதிற்கு வல்லமை அதிகமா? என்றால் மனம் ஒரு குறிப்பிட்ட இலக்கிற்கு சென்று கொண்டிருந்தாலும் பெயர் அதன் இலக்கிற்கு சிறிது சிறிதாக மாற்றி இழுத்துச் செல்கிறது. காரணம் பெயரின் காந்தத் தன்மை சூழ்நிலையை அமைக்கும் வல்லமை படைத்தமையால் பெயருக்கு மனதைவிட வல்லமை அதிகம். அதற்காக மனம் வல்லமையற்றது என கருதக்கூடாது. செயல்பாடு என்பது மனதை பொறுத்த ஒரு இயக்கம். ஆனால் இந்த மனதையும் பெயரையும் சீர் செய்து அதாவது நடுவராக இருந்து அவ்வப்போது ஆளுமை செய்வது அறிவாகும். அவ்வப்போது அறிவு தன் ஆளுமைக்குட்படுத்தும்.
அப்பொழுது அறிவின் செயல் உயர்த்தியதை உணர்ந்து பிடித்துக் கொண்டு செயல்பட்டோமனால் இங்கு மனதை முழு ஆதிக்கத்திலிருந்தும், பெயரிடமிருந்தும், பிரிக்கலாம். முழு ஆதிக்கத்திலிருந்து பிரிக்க முடியுமே தவிர முழுமையாக பிரிக்க இயலாது. அவ்வாறு முழுமையாக பிரிக்க வேண்டுமெனில் நல்ல ஒரு பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொண்டால் மட்டும் போதாது. தினசரி எழுதவும், என்னுடைய பெயர் இதுதான் என்ற சிந்தனையோடு செயல்பட்டால், விதியை மதியால் வெல்லலாம். இதுவும் ஒருவகையான தவத்தை போன்றதுதான் இதற்கு பெயர் தவம் என கூறலாம். தவம் செய்வதே நம் எண்ணங்கள், செயல்கள், பேச்சுக்கள். ஒரு நிலையில் இருக்கவேண்டும் என்பதாகும்.
அதாவது நாம் எதை நினைக்கிறோமோ அதை பேசவேண்டும். எதை பேசினோமோ, அதை செய்யவேண்டும். இது போல் எண்ணம், செயல், சொல் மூன்றும் ஒரே கோட்டில் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் தவம் செய்கிறோம்.
அத்தகைய வாழ்கை தான் சிறப்பான வாழ்க்கை. ஆனால் இன்று எல்லோரும் அப்படியிருக்கிறோமா? என்றால் கிடையாது. நாம் சாப்பிடும் பொழுதுதான் வியாபாரத்தைப் பற்றியும், பணி செய்யும் மேலதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் படிக்கும் போது தான் எந்த தியேட்டரில் எந்த சினிமா ஒடிகிறது. அதற்கு எப்பொழுது போகலாம் என்பது போன்ற சிந்தனைகள். இவ்வாறு நாம் நன்றாக யோசித்து பார்த்தோமானால் எண்ணம், சொல், செயல் என்ற மூன்றையும் முறையாக ஒரு விசயத்திலாவது கடைப்பிடித்திருக்கிறோமா என்றால் கிடையாது.
நம் மனம் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. அத்தகைய மனதை நம் பெயர் எழுதும்போது முழுக்கவனமும் பெயரிலேயே வைத்து எழுதுவது என்பது ஒரு வகைத்தவமேயாகும். நமக்கு முறையாக பிறந்த தேதி, வீதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என ஐந்தையும் அடிப்படையாக கொண்டு பெயர் வைத்துக் கொண்டோமேயனால் நம் பெயரே நமக்கு குருவாக இருந்து செயல்பட ஆரம்பிக்கிறது. இத்தகைய பெயரை குறிப்பிட்ட முறை எழுதிக் கொண்டு வந்தால் ஏற்கெனவே உள்ள பெயரில் எதிர்பாராத விபத்தினால் மரணம் என்றோ, ஏற்றத்தாழ்வுகள் பொருளாதாரத்தில் ஏற்படும் என்றோ இருந்தால் இதுபோன்று பல்வேறு பிரச்சைனைகளும் தீர்ந்து விதியை மதியால் வென்று வெற்றி வாகை சூடலாம். வாழ்வில் என்றும் அமைதியும், ஆனந்தமும் நிலைக்கும்.
தலையெழுத்தை எழுதியது பிரம்மாவா?
இந்துக்கள் பிரம்மா என்றும், முஸ்லீம்கள் அல்லா என்றும், கிறிஸ்துவர்கள் பரிசுத்தமானவர் என்றும் அவரவர்கள் தங்களது விருப்பமான தெய்வத்தைக் கூறிக்கொள்கின்றனர்.
இதை நம் சிந்தனைக்கு எடுதுக் கொள்வோம். இறைவன் என்பது யார் என்று புலப்படும். இங்கு முதலில் பிரம்மா என்று கூறும் இந்துவின் கடவுளை எடுத்துக் கொள்வோம். பிரம்மா என்பது ஒன்றுமில்லை. ஆகவே ஒன்றுமில்லாதவன் ஆகிறான். அடுத்ததாக முஸ்லீம்கள் கும்பிடும் அல்லாவை எடுத்து கொள்வோம். அல்லா என்றால் அல்லாதவன் என்பதுதான் பொருள். அதாவது ஒன்றுமில்லாதவன் என்பது தான் பொருள்.
கிருஸ்துவர்கள் வணங்கும் பரிசுத்தமானவர் என்பதும், ஒன்றுமில்லாதவர் என்று தான் அர்தம். இதிலிருந்து என்ன தெரிகிறது. நாம் கூறுவதில் வேறுபாடு பிரம்மா, அல்லா, பரிசுத்தமானவன் என்பது, ஆனால் மூன்றிற்கும் பொருள் ஒன்றுதான். அந்த ஒன்றுமில்லாதவனுக்கு இன்பமோ துன்பமோ கிடயாது. விருப்பமோ, வெறுப்போ கிடையது. பிறப்பு, இறப்பு கிடயாது. இவ்வாறு எதுவும் இல்லாத ஒருவனுடைய படைப்பில் மட்டும் விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் என பாகுபாடோடு படைப்பான என்றால் முடியாது. அவனுடைய படைப்பில் எந்தவிதமான மாற்றமும் கிடையது. அவன் ஒன்றுமில்லாதவன், என்றும் நிரந்தரமானவன் என்பது சுத்தவெளி என்ற ஒன்றயே குறிக்கும். இந்திலிருந்து நம் தலையெழுத்தை எழுதியது பிரம்மாவும் இல்லை. அல்லாவும் இல்லை. பரிசுத்தமானவனும் இல்லை. வேறு யாரும் எழுதவில்லை. நம் தலையெழுத்தை நாமே தான் எழுதிக்கொள்கிறோம்.
நமக்கு பெயர் வைப்பதன் மூலம் நம் பெற்றோர்களால் நம் தையெழுத்து எழுதப்படுகிறது. எந்த பெற்றோர்களும் தன் குழந்தைகள் துன்பப்டவேண்டும் என்று எண்ணுவதில்லை. எண்ணி பெயர் வைப்பதில்லை. அவர்களும், தன் அறியாமையால் செய்யும் தவறேயாகும். இப்பொழுது பிறக்கும் குழந்தைகளுக்கு எண்கணித முறைபடிதான் பெயர் சூட்டுகிறார்கள். இதற்கு முன் பெயரின் முக்கியத்துவம் தெரியாமையினால் தவறுகள் செய்தனர். அது மட்டுமின்றி எண் கணித நிபுணர்களும் மிகவும் குறைவு.
அத்தகையவர்களை பார்ப்பதே கடினம். அதையும் மீறி பார்த்தாலும் அவர்கள் நிர்ணயிக்கும் தொகையோ ஏராளம். சாதாரண மக்கள் இதற்கு பயந்து கொண்டு போகாமல் தன்னுடைய வாழ்க்கையை தானே கெடுத்துக் கொள்கின்றனர். பெற்றோர்கள் தன் அறியாமையினால் பெயரை அமைத்திருந்தாலும், இன்று நாம், நமது பெயரை திருத்தி அமைத்துக் கொண்டு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்று நம் நாட்டையும், இந்த உலகையும், முன்னேற்ற பாதையில் இழுத்துச் செல்லக்கூடிய முக்கிய பொறுப்பு நமக்கு உள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஆசைகளும், குறிக்கோள்களும் உண்டு. அதாவது நாம் இப்படி இருக்கவேண்டும். அப்படி இருக்கவேண்டும் என்பது போன்ற எண்ணங்கள், எதிர்பார்புகள் என்பதே கிடையாது என்று கூறுவர். வெளிப்படையாக கூற மறுத்தாலும், உள்ளுக்குள் எதிர்பார்புகள் என்பது இருக்கும்.
அந்த எதிர்பார்ப்புகள் நடைபெறாத பொழுது அல்லது நடைபெறும் சூழ்நிலை இல்லாத பொழுது மிகவும் வேதனை அடைகிறார்கள். அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமலும் இருக்கமுடியாது. எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை சப்பென்று ஆகிவிடும். உங்களுடைய எண்ணத்தில் ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய எண்ணம் வருவதற்கான காரணம் அவருக்கு விதிக்கப்பட்ட விதி ஆசிரியராக வேண்டும் என்பது தான், அது கிடைக்காமல் போகும்போது அந்த ஏக்கம் எப்பொழுதும் அவனது உள்ளத்தில் இருந்து கொண்டேதான் இருக்கும்.
அவர் அந்த ஆசிரியராக முடியாமைக்கு காரணம் அவருடைய பெயரே ஆகும். இங்கு விதி எது என்று சந்தேகம் வரலாம். ஏற்கனவே கூறியபடி நாம் பிறக்கும் நாளில் நான்கு கிரகங்கள் ஆட்சி செலுத்துகிறது. அந்த ஆட்சி இறக்கும் வரை நிலையானது. அந்த நான்கு கிரகங்களும், பஞ்சபூதமும் சேர்ந்து ஒரு காந்த ஆற்றலை ஏற்படுதுகிறது.
அத்தகைய ஆற்றலிருந்து வெளிப்படும் விரிவலையானது ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயம் செய்யும். அந்த இலக்கை நோக்கி போகவும் முயற்சி செய்யும். அந்த இலக்கை அடைய பெயராகிய மூன்று கிரகமும், பஞ்சபூதமும் ஏற்படுத்தும் காந்த அலையிலிருந்து வெளிப்படும் விரிவலை ஏற்கனவே நிலையாக உள்ள விரிவலையோடு சார்ந்து இருக்குமானால் கடிவாலமிட்ட குதிரைபோல் அந்த இலக்கையே மிக குதூகலமாக சென்றடையும். அவ்வாறு இரு விரிவலைகளும் ஒத்து வராத பொழுது பெயராகிய விரிவலை தனித்தன்மையோடு வெளிப்பட்டு அதன் பாதைக்கு இழுத்துச் செல்லும், அப்பொழுதுதான் அவன் தன் மனதிற்கு இசைவில்லாமல் பெயர் செல்லும் இலக்கிலே ஏனோ தானோ என்று செல்கிறான்.
இதற்கு உதாரணம் கூறலாம். டாக்டருக்கு ஒருவர் படிக்கிறார் என்றால், அவர் மேல்நிலை தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்று, மருத்துவ கல்லூரியில் குறிப்பிட்ட அனுமதி தேர்வுகளையெல்லாம் வென்று இடம் கிடைத்து ஐந்து வருட படிப்பையும் முடித்து டாக்டர் பட்டத்தை பெறுகிறார். இவரை போலவே அனைவரும் படித்து கடினமாக உழைத்துதான் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் அந்த நூறு பெரும் பிரசித்தி பெற்ற டாக்டர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை. நான்கு (அ) ஐந்து பேரோதான் பிரபல்யம் அடைகின்றனர். என்ன காரணம், படித்த படிப்பில் குறைபாடா? சொல்லிக் கொடுத்த ஆசிரியரின் குறைபாடா? என்றால் கிடையாது. அவனுடைய பெயராகிய மூன்று கிரகங்கள் ஏற்கனவே நிலையாக உள்ள நான்கு கிரகங்களோடு சார்ந்து அமைந்ததாலேயே அந்த ஐந்து பேர் பிரபல்யம் அடைந்தனர் மீதமுள்ள தொன்னூற்று ஐந்து பேர்களும் கடமையே என்று தொழில் செய்வார்கள்.
ஆகவே பெயர் நம் வாழ்க்கைக்கு எத்தகைய சூழ்நிலைகளை உருவாக்குகின்றது என்பதை அறியலாம். இதிலிருந்து நாம் ஒவ்வொருவருக்கும் நிலையாக உள்ள காந்த ஆற்றலிலிருந்து வெளிப்படும் விரிவலையின் காரணமாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு அத்தகைய சிந்தனை செயல்பாட்டிற்கு வர பெயராகிய மூன்று கிரகமும், பஞ்சபூதமும் ஒத்து வந்தால் வாழ்க்கைக்கு குதூகலமாக, ஆனந்தமாக விரும்பிய வழியில் சென்று கொண்டிருக்கலாம். அத்தகைய விரும்பிய தொழில்தான் பல்வேறு சாதனைகளையும், பிரம்மிக்கதக்க வளர்ச்சியினையும் அடைய முடியும். அதற்கு பெயரை சரியாக அமைத்து கொண்டால்தான் நடக்கும். இதிலிருந்து தலையெழுத்தை எழுதியது பிரம்மாவா, அல்லாவா, பரிசுத்தமானவரா....
நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்களோ அது உங்களது பெயரின் மூலமாகவே கிடைக்கும். நீங்கள் மிகப்பெரிய தொழில் அதிபராக வேண்டுமா, ஆராய்ச்சியாளராக ஆக வேண்டுமா, மில், கம்பெனி இவைகளுக்கு அதிபதியாக வேண்டுமா, அரசியலில் புகழும், அந்தஸ்தும் பெற வேண்டுமா, பிரமிக்கத்தக்க பேச்சாற்றல் வேண்டுமா, உங்களுடைய வார்த்தைக்கு மற்றவர்கள் அடங்கி போக வேண்டுமா, பொன், பொருள், பூமி சேர்க்க வேண்டுமா, சுயமுயற்சியும், தன்னம்பிக்கை வேண்டுமா, நீங்கள் வாங்கும் சொத்து பல தலைமுறைக்கு பயன்பெறவேண்டுமா, மக்களின் அமோக ஆதரவு, மக்களால் சூழப்படும் நிலை வேண்டுமா, ஊர் ஊரக சுற்ற ஆசையா, வெளிநாட்டு பயணம் வேண்டுமா, சிறந்த நகைச்சுவையாளராக வேண்டுமா, என்ன வேண்டும் உங்களுக்கு. உங்களது தேவையை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் உங்களுடைய விதியை நீங்களே நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில் எண் கணிதம் அமைந்துள்ளது. இதிலிருந்து தலையெழுத்தை நிர்ணயம் செய்வது யார் என்று தெரிந்திருக்கும்.

குழந்தையிலேயே பெயர் சரியாக அமைப்பதன் பயன்
இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள் என்று வாயளவில் கூறினால் போதுமா! அவர்கள் எந்த துறையில் நுழைகிறாரோ அதில் மன்னராக விளங்கக்கூடிய அளவிற்கு உயர்த்த வேண்டியது பெற்றோர்களின் கடமையல்லவா. இன்றைய குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை, பொறுப்பு, அவர்களுடைய பிள்ளைகளுக்கு சரியான பெயரை அமைத்துக் கொடுப்பதாகும்.
சரியான பெயரை அமைத்து கொடுப்பதே பெற்றோர்களாகிய நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்து. எவ்வளவு பணம் காசுகளை சேர்த்து வைத்தாலும் அதை முறையாக பயன்படுத்த நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டாமா? நல்ல சிந்தனையும், நல்ல செயல்பாடுகளும் மிக்க குழந்தையாய் ஆக வேண்டுமெனில் பெயர் சிறப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். இதைத்தான் வள்ளுவர் எண்ணும் எழுத்தும் அதாவது, தலையெழுத்தாகிய பெயர் எண்ணோடு சார்ந்து சிறப்பாக இருந்தால் இருகண்கள் எப்படி ஒளி பொருந்தியிருக்குமோ அதுபோல் வாழ்க்கையும் ஒளி பொருந்தியிருக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எண்ணின் வலிமையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து, தெரிந்து குறள் வடித்துள்ளார்.
இதை நாமும் அறிந்து எண்ணையும் எழுத்தையும் பொருந்தச் செய்து நம் குழந்தைகளுக்கு பெயரை அமைத்தோமானால் அவர்களது வாழ்க்கை இருகண்களைப் போல் ஒளி பொருந்தி சிறப்பாக இருக்கும் அல்லவா. சிறு குழந்தையிலேயே எண் கணிதம் பார்த்து பெயரை அமைத்து கொள்வது என்பது நீருடன் நீர் சேர்வது போன்றதாகும். அவ்வாறு இல்லையெனில் நீருடன் எண்ணை சேர்வது போன்று ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பிரிந்து தனது வலிமையை குறைத்துக் கொள்கிறது. நீர் என்பது, பிறந்த தேதி, விதி, எண், கிழமை, மாதம், பூதம் என்ற ஐந்தும் சேர்ந்து ஒரு காந்தத்தின் தன்மையை குறிக்கும். எண்ணை என்பது நமது பெயராக உள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து கூட்டு காந்தத்தன்மையை குறிக்கும்.
பெயர் சரியாக அமைந்தால் நீரோடு நீர் சேர்ந்தால் அதன் வலிமை அதிகமாகும், பெயர் சரியாக அமையாவிடில் நீருடன் எண்ணை சேர்ந்து வலிமை குறைவாக இருந்தாலும் எண்ணையே அதன் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். எண்கணிதம் மூலம் பெயரை திருத்தி வைப்பது என்பது நீரோடு நீர் சேரும்படி செய்வதாகும் இத்தகைய செயல்பாட்டால் உடல், மனம், உயிர், அறிவு, யாவற்றிற்கும் வலிமை அதிகமாகின்றது. ஊக்கம் அதிகப்படுத்தப்படுகிறது.
ஆகவே குழந்தைகளுக்கு பெயரை பார்த்து வைப்பது அவர்களுடைய வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றதாகும். இதுவே அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்து. பெயர் ஒருவருக்கு சரியாக அமைந்தால் அவர்களுடைய இலக்கு அவர்களுக்கு தெரியும். அந்த இலக்கை சிறப்பாக அடைய முடியும். எந்தவிதமான ராஜநடையும் போட்டு நடந்து செல்வர். இல்லையேல் கல்லிலும், முள்ளிலும் வழி தெரியாமல் அலைந்து, திரிந்து செல்கின்ற பாதையை அறியாமல் துன்பப்பட்டு, வேதனைப்பட்டு இலக்கை அடையாமல் இடையிலேயே எதிர்பாராத விபத்து ஏற்படலாம். மனச்சோர்வில் வியாதிகளால் பீடிக்கப்படலாம். தற்கொலை செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே கூறியபடி ஒருவருடைய பிறந்ததேதி அவருடைய குணாதிசயத்தை நிர்ணயம் செய்யும் விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம், என்பது அவர் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதை நிர்ணயம் செய்யும். பெயர் அவர் அந்த பிராயணத்தை எப்படி செய்கிறார் என்பதை நிர்ணயம் செய்யும்.
ஒருவர் திருச்சியிலிருந்து சென்னை வரை பிரயாணம் செய்ய முடியும் என்பதும், ஒருவர் விழுப்புரம் வரை பிரயாணம் செய்ய முடியும் என்பதும். விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் சேர்ந்து நிர்ணயம் செய்கிறது என வைத்து கொள்வோம். அந்த பிரயாணத்தை எப்படி செய்கிறார்.
அதாவது எப்படி செல்வது என்பதை அவருடைய பெயர் எப்படி நிர்ணயம் செய்கிறது எனில் பிரயாணத்தில் நாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு ஒவ்வொருவிதமாக தேர்வு செய்து கொள்கிறோம். ஒருவர் நடந்து செல்வதாகவும், சைக்கிளில், மோட்டார் சைக்கிளில், ஆட்டோவில், காரில், ஏசி காரில் என எதில் வேண்டுமானாலும் பிரயாணத்தை கொள்ளலாம். எதில் பிரயாணம் செய்கிறோம் என்பதை பெயரே நிர்ணயம் செய்கிறது.
அதாவது ஒருவருடைய பெயர் சரியாக இல்லையெனில் அதாவது பிறந்த தேதியோடு பெயர் ஒத்துவராத போது அவர்களுடைய வாழ்க்கையாகிய பிரயாணத்தினுடைய பாதை தெரியாமல் கல்லிலும், முள்ளிலும், காட்டிலும், மேட்டிலும் அலைந்து திரிந்து அவர் இலக்கை அடையாமலேயே அதாவது எந்தவித சுகத்தையும் அனுபவிக்காமலேயே மரணம் அடையக்கூடிய நிலை ஏற்படும்.
அதேபோல் பிறந்த தேதிக்கும், பெயருக்கும் பொருத்தம் எந்த அளவிற்கு சரியாக அமைக்கின்றதோ அதுபோன்று வாழ்க்கை பிரயாணம் இருக்கும். பிறந்ததேதியும், பெயரும் நன்றாக சிறப்பாக பொருந்தும்படி எண்கணிதம் மூலம் அமைத்து கொண்டால் அவர்களுடைய பிரயாணம் ஏசி் காரில் அலுங்காமல் குலுங்காமல் ரோட்டில் நம் பாதையை அறிந்து வெற்றிகரமாக பிரயாணத்தை முடிப்பது போன்றதாகும்.
இத்தகைய வாழ்க்கையை அனைவரும் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம், பிறந்த தேதி எனக்குறிப்பிட்டது பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதமாகிய ஐந்தையும் சேர்ந்தக் கூட்டுச்சொல்லை குறிப்பதாக கூறியுள்ளேன். குழந்தைகளின் மற்றும் நம்முடைய நம் வாழ்க்கை பிராயணமும் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் எண் கணித முறைப்படி பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதமாகிய ஐந்தையும் பெயராகிய இனிசியல், பெயர், மொத்த எண், ஆகிய மூன்றையும் ஒன்றை ஒன்று சேர்த்து சிறப்பாக அமைத்து கொண்டோமானால் நமது வாழ்க்கையில் உயர்வதோடு இந்த நாட்டையும், உலகத்தையும் உயர்த்துகிறோம் என்பதை மறுக்க முடியாது. தனி ஒருவனுடைய முன்னேற்றம் இந்த உலகத்தினுடைய முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது.
இத்தகைய வியத்தகு வாய்ப்பை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக்கொள்வதே ஆறாவது அறிவின் செயல்பாடு ஆகும்.
நாம் அன்னப்பறவைப் போல் இருக்கவேண்டும். அன்னப்பறவை எப்படி பாலும் நீரும் கலந்த பாலை நீரை விடுத்து பாலை மட்டும் குடிக்கிறதே அதுபோல் இந்த சமுதாய நிகழ்ச்சிகளில் நன்மைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். அதில் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்வில் முன்னேறலாம்.
நம் வாழ்க்கையில் நன்மையை மட்டும் தரக்கூடிய எண்கணிதத்தை பயன்படுத்தி ஒளி பொருந்திய எதிர்காலத்தை பெற விளைவோம்.
பெயர் ஒரு வகைத் தவம்
பெயர் ஒருவனுக்கு தவத்தை போன்றதாகும். பெயரை எண்கணித ஆராய்ச்சியில் அமைத்தபிறகு காலையில் சூரியோதயத்திற்கு முன் ஒரு மாதம் தினசரி எழுதச் செய்யவும். அவ்வாறு விழித்த பின் எழுதுவது என்பது நம் உடல், மனம், உயிர், அறிவு சலனமற்று ஒரு நிலையொடு இருக்கும், அப்பொழுது குறிப்பிட்ட முறை எழுதி முன் கூறியபடி ஏற்கனவே பெயர் பதிவாகி உள்ள நாள்கள் 15 வருடமாகவவோ, 60 வருடமாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு நாட்கள் பதிந்த பதிவுகளுக்கு மேல் பதிவு கொடுக்கும்போது நம் அறிவு, மனம், உடல், உயிர், அனைத்தும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட நிலையில் நிலையாக இருக்கவேண்டும். இத்தகைய ஒரு நிலைப்படுத்தப்பட்ட நிலையில் நாம் நம் பெயரை தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும்போது மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட, பெயரின் வலிமை கூடுகிறது. பதிவுகள் ஆழ்ந்து பதிகிறது.
இந்த நிலையில் புதிதாக உள்ள பெயரின் முழு பலனையும் அனுபவிக்க தயார் ஆகிறோம். ஒருமாதத்தோடு முடித்துவிடாது தினசரி தொடர்ந்து எழுத வேண்டும் இதன் மூலம் ஏற்கனவே என்ன விதமான குறைபாடுகள் இருந்ததோ அது பிறகு விளக்கப்பட்டு தற்காப்பு ஏற்பட்டு, புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். பெயரே நம்மை இயக்கக்கூடிய சக்தி, பெயரே நம் வாழ்க்கையின் உயர்நிலைக்கு அழைத்துச்செல்லக்கூடிய சக்தியாகும். நம் பெயர் இப்பிரபஞ்சம் முழுவதும் தொடர்பு வைத்து கொண்டு உள்ளது.
இத்தகைய வலிமை வாய்ந்த பெயரை அலட்சியப்டுத்தியது தான் இது நாள் வரை ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லாம் காரணம். இனியும் அலட்சியப்படுத்தாமல் நம் பெயரை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என ஐந்தின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலைக்க செய்வோம்.
பெயர், ஜீவ காந்தம், வான் காந்தம், பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள் என பிரபஞ்சம் முழுவதையும் தொடர்புபடுத்தும் ஒரு அற்புதத்தன்மையை பெற்று இருக்கிறது. அத்தகைய பெயரைக் கொண்டு வாழ்வில் விஞ்ஞான, மெய்ஞ்ஞான நுணுக்கங்களை கற்று அறிந்து ஆராய்ச்சி செய்யும் கலையாக எண் கணிதம் கிடைத்துள்ளது. இந்த கலை உடல், மனம், உயிர் ஆகியவற்றிற்கு கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பு, அறிவிற்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புத விருந்து. இப்பிரபஞ்ச ரகசியங்களோடு ஒப்பிடும் போது இந்த அறிவிற்கு கிடைத்திருப்பது ஒரு அணுவின் வெளிப்பாடு எனலாம்.
ஒரு அணுவின் அளவை ஞானிகள் ஒரு பசுவின் ரோமத்தை எடுத்து அதை இலட்சமடங்கு துண்டு செய்து, அதில் ஒன்றை எடுத்து அதை இலட்சமடங்கு துண்டு செய்தால் எவ்வளவு கிடைக்குமோ அந்த அளவே அணுவாகும் என்றனர். இதை நாம் அகக்கண்ணால் மட்டுமே உணர முடியும். அத்தகைய ஒரு அணுவின் வெளிப்பாடே இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.
நோய்களுக்கும் பெயரே காரணம்
இதற்கு முன் பெயர் நமது வாழ்க்கையின் பொருளாதார தடைகளையும், எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது என அறிந்தோம். இனி நோயிற்கும் பெயரே காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இதைபற்றிய நூல் தெளிவாக பின் வெளிவரும்.
அதாவது சக்கரை, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இருதய நோய், மூலம், காக்கை வலிப்பு இன்னும் பல நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது. இத்தகைய பெயரினால் ஏற்படும் நோயை பெயரைக்கொண்டு சரிசெய்தால்தான் சரியாகும். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற பழமொழிபடி எதிலிருந்து உருவாகிறது என்பதை அறிந்து ஆராய்ந்து வேரோடு பிடுங்கி எறிந்தால் இனி வளருமா? இத்தகைய வேரினை கண்டுபிடித்தாக்கிவிட்டது. வளருமா? இனி அகற்றுவதற்கான வழியையும் கண்டு பிடித்தாகிவிட்டது.
மருந்தின்றி, பத்தியமின்றி, வருத்தமின்றி, உறுத்தலின்றி பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைப்பதன் மூலமே குணப்படுத்தப்படுகிறது. இதற்கு நேமியோபதி சிகிச்சை (NAMEOPATHI) என்று பெயர். இந்த சிகிச்சை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியது. இந்த சிகிச்சைக்கு தேவை உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், கிழமை மட்டுமே. இதனை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம் பஞ்சபூதம் என்ற அடிப்படையில் பார்த்து எந்த நாளமில்லா சுரப்பி இயக்கம் பதிக்கப்பட்டுள்ளது என்பதை பெயரினை கொண்டு ஆராய்ச்சி செய்து அந்த நாளமில்லா சுரப்பியை இயக்கும் மாற்றுப் பெயரை பயன்படுத்தி சரி செய்யும் சிகிச்சைக்கு நேமியோபதி சிகிச்சை என்று பெயர்.
இதன் பயனை திருச்சியிலும், திருச்சியை சுற்றியுள்ள நகரங்களிலும் பொதுமக்கள் நல்ல உற்சாகத்தோடு, நல்ல ஒத்துழைப்பை கொடுத்து பயன்பெற்று வருகிறார்கள். முதுகுவலி (BACKPAIN) மருத்துவர்களின் ஆலோசனைகளால் ஏராளமான செலவுகள் செய்து சரி செய்ய முடியாத வியாதியும், நேமியோபதி சிகிச்சை மூலம் சரியாகிவிட்டது. பல வருடமாகியும் குழந்தையில்லாமல் மனவேதனையோடு உள்ள அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது.
அந்தளவிற்கு பெயரே நம் வாழ்க்கை சூழ்நிலையை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. கருக்கலைப்பு பெயரினாலேயே ஏற்படுகின்றது. கருவுற்றிருக்கும் தாய்க்கு பெயர் எண், 26, 35 ஆக இருந்தாலும் இனிசியல் P,F இருந்தாலும் அபார்ஷனால் முதல் குழந்தையை பாதிக்கிறது.
இதை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் தெரியவரும். அதாவது பிரபாகரன் என்பவருடைய மனைவிக்கு இன்சியல் P ஆகும். இத்தகைய P அவருடைய முதல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. அதாவது கருவிலேயே கருக்கலைப்பு ஏற்படுகிறது அல்லது பிறந்து இறந்து விடுகிறது. இதுபோல் எண்ணிலடங்கா செயல்பாடுகளுக்கு பெயரே காரணமாக உள்ளது.
நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது என்பதை அறிய உதாரணமாக இன்சியல் "R" ஆக இருந்தால் 90% சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இன்சியல் "B" ஆக இருந்தால் பிரம்மை பிடிக்க காரணமாக உள்ளது "K" ஆக இருந்தால் சிறுநீரக சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகிறது. ஆனால் அதிகபட்ச பெயரோ, இன்சியலோ, மொத்த எண்ணோ "2" ஆகிய சந்திரனின் ஆதிக்கத்தில் இருந்தால் சர்க்கரை வியாதி உள்ளது. இதை உங்கள் அருகில் உள்ள சர்க்கரை வியாதி நோயாளியின் பெயரை எழுதி முன் கூறியபடி எண்ணை போட்டு கூட்டி பார்க்கலாம். ஏதாவது ஒன்று 2-ன் தன்மையோடு அமைந்திருக்கும். அதாவது,
R. SANKAR
2+ 315212
2+ 14 = 16
இன்சியலில் 2 ஆக அமைந்துள்ளதால் சர்க்கரை வியாதி ஏற்படும்.
இதேபோல்,
S. MANI
3+ 4151
3+ 2 = 14
3+ 2 = 5
பெயரில் 2 எண் அமைந்துள்ளது.
இதேபோல்,
T. RAJAMANI
4. 21114151
4+ 16 = 20
மொத்த எண் 2 எண்ணாக அமைந்துள்ளது.
இதேபோல் பெயர் எண்ணிலோ, இனிசியலிலோ, மொத்த எண்ணிலோ 2 எண் வருமானால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இதை நேமியோபதி சிகிச்சை மூலம் பிறந்த தேதியையும், பெயரையும், பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தின் அடிப்படையில் பார்த்து பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைப்பதன் மூலம் சரி செய்யமுடியும்.
இதேபோல் முன் கூறிய இரத்த அழுத்தம், மூலம், இருதய நோய், ஆஸ்துமா, தோல்நோய், காக்கை வலிப்பு, சர்க்கரை, போன்ற நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது. இந்த நோய்களை பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் இவற்றின் அடிப்படியில் பெயரை அமைத்து நாளமில்லா சுரப்பியை இயங்கச் செய்து நேமியோபதி சிகிச்சை மூலம் சரி செய்யலாம். மேலும் மேலும் தொடர்ந்து பல ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
நோய்கள் பற்றிய நூல் பின் விரிவாக வெளிவரும். உங்களது பெயரை அனுபவம் வாய்ந்த எண் கணித நிபுணரை கொண்டு சரி செய்து கொள்ளுங்கள். ஏனையோர் புத்தகங்களை படித்து எல்லாம் தெரிந்து விட்டதாக கருதி பெயரை திருத்தம் செய்து துன்பப்படுவார்கள். அதைத் தவிர்க்கவும். நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய பணத்தை பார்க்காமல் திறமையான எண் கணித நிபுணரை பார்த்து ஒளி மயமான எதிர் காலத்தை பெறுங்கள்.

வானவியல் ASTRONOMY
வானவியல் என்பது கிரகங்களின் சஞ்சாரங்களின் செயல்பாட்டை மையமாக கொண்டது. கிரகங்களும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதைதான் நம் அறிஞர்கள், ஞானிகள், "அண்டத்தில் பிண்டம்", "பிண்டத்தில் அண்டம்" என்று கூறுவர். இந்த அண்டமே உடலாகவும், உடலே அண்டமாகவும் அமைந்துள்ளது.
வானவியல் என்னும் வான சாஸ்திரம் என்னும் ஒரு பகுதி வான சாஸ்திரம் என்றும் மற்றொரு பகுதி பஞ்சபூதமாகவும் அமைந்துள்ளது. பஞ்சபூதங்களால் ஆனது உடல். இந்த பஞ்சபூதங்களை இயக்கும் ஆற்றல் நவக்கிரகளுக்கு உண்டு. பஞ்சபூதமின்றி நவக்கிரகங்கள் இல்லை.
நவக்கிரகங்கள் இன்றி பஞ்சபூதங்கள் இல்லை. எங்கும் வியாபித்திருக்கும் இந்த களம் இரண்டு பிரிவாக அமைந்துள்ளது.
1. சிவ களம்
2. சக்தி களம்
சிவகளத்திலிருந்து தான் சக்தி களம் தோன்றியது. சக்தி களம் இல்லாமல் சிவகளத்தை உணர முடியாது. இதையே தான் "சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தியில்லை" என்பர். சிவனுக்குள் சக்தி அடக்கம்.
சிவகளம் என்பது சுத்தவெளி, இயக்கமற்ற நிலை, சக்தி களம் என்பது இயங்கும் நிலையில் உள்ள கிரகங்கள், கிரகங்களின் செயல்பாடுகளின் தொகுப்பு பூமி. பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் சக்தி களத்தில் அடங்கும். இந்த சக்தி களத்தினை மையமாக வைத்து தான் வான சாஸ்திரம் உருவானது. இது ஒரு கருவிலே திருவுடைய ஒருவரால் மட்டுமே சாஸ்திரம் தோன்றியிருக்கும் என்று கூறுகிறோம். பொதுவாக சாஸ்திரம் என்பதே இந்த சமூகத்தை வழி நடத்தும் ஒரு களமே அமையப் பெற்றுள்ளது. ஒருவர் பெற்ற இன்பத்தை பிறர் அனுபவிக்க ஆராய்ச்சி செய்து மிக துல்லியமான நுணுக்கமான அரூபமான கருத்துக்களை கொண்டுள்ளது. இதுபோன்ற வானசாஸ்திர ஆராய்ச்சிகளுக்கு அளவுகோல் என்பது தன்னிலையைச் சார்ந்தது. ஆராய்ச்சி செய்யும் நபர் எத்தகைய தனித்தன்மையோடு அவ்வளவுவிதமான கற்றறிந்த செயல்பாடுகளின் தன்மையை பொருத்தது. அவருடைய தரத்தையும் குணத்தையும் சார்ந்து இருக்கும். இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு திடமான விதிகளோ மாறாத சட்டதிட்டங்களோ கிடையது. உணர்ச்சி சார்ந்தது என்றால் இத்தகைய உணர்ச்சியின் வெளிபடுகளாக இருந்தாலும் 50% அறிவு சார்ந்தும் அமையும் பெளதீக ஆராய்ச்சியில் 100% அறிவு சார்ந்து அமையும். அதனால் தான் பெளதீக ஆய்வாளர்களால் வானசாஸ்திர ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவர்களின் ஆய்வுகளும் வேறு. இலக்கியத்தின் ஆய்வுகளும் வேறு. மிகத் துல்லியமான ஆய்வு களத்தில் (பெளதீக) வானசாஸ்திர ஆராய்ச்சிகள் செய்ய முயன்றாலும் துல்லியமாகக் கூற இயலாத நிலையே அமைந்துள்ளது. வான சாஸ்திரத்தை உணர, அனுபவிக்க உணர்ச்சி பூர்வமான செயல்பாடும், அறிவு சார்ந்த செயல்பாடும் அவசியம்.
50% உணர்ச்சியும் 50% அறிவும் தேவை. இது எனது அனுபவபூர்வமான உண்மை. அறிவியல் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் முடியாது. நான் டிவி-யில் (விஐய்) பேசிய தலைப்பு. அன்று வியாதியை பற்றியது. இனிசியலில் R மட்டும் வருமானால் பெயரில் ஆரம்ப எழுத்து R ஆக வரும் நபர்களுக்கு 90% சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. அதே போல் அனேக வியாதிகளை பற்றியும் பேசி இருந்தேன். அந்த நிகழ்ச்சிகளையும் பற்றியும் பேசி இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு வாரம் கழித்து ஸ்ரீ ஹரி கோட்டாவிலிருந்து ஒரு அறிவியல் அறிஞர் (Scientist) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது நிகழ்ச்சியை பார்த்ததாகவும் அவருக்கு இனிசியல் R வந்துள்ளதால் தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு பிறகு அவரது நண்பர்கள் உறவினர்கள் என எல்லோருடைய பெயரையும் ஆய்வு செய்து பார்த்த பொழுது நீங்கள் கூறியபடி சரியாக உள்ளது. என்னால் இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்று கூறுகிறார். இதை எதற்கு இங்கு கூறுகிறேன் என்றால் பெளதீக ஆய்வில் இத்தகைய ஆய்வுக்கு 50% மட்டுமே நம்பிக்கை இருக்கும், ஏனென்றால் இது இலக்கிய ஆய்வை மையமாக கொண்டு செயல்படுகிறது.
இவ்வாறு வானவியல் வான சாஸ்திரம் கூறிக்கொள்கிறார்கள்.
சிவகளமில்லாமல் சக்தி களத்தில் நவக்கிரகங்களுள்.
1. சூரியன்
2. புதன்
3. சுக்கிரன்
4. சந்திரன்
5. செவ்வாய்
6. குரு
7. சனி
8. ராகு
9. கேது
10. யுரேனஸ்
11. நெப்டியூன்
12. புளூட்டோ
சக்தி களதில் உள்ள நவக்கிரகங்களுக்கும் நமக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
சூரியன் - எழும்போடும்
புதன் - தோல்களோடும்
சுக்கிரன் - ஜீவ விந்து குழம்போடும்
சந்திரன் - ரத்தத்தோடும்
செவ்வாய் - ரத்தத்தில் உள்ள சிக்கப்பணுக்களோடும்
குரு - மூளையோடும்
சனி - நரம்புகளோடும்
ராகு,கேது - மனதோடு
என நெருங்கிய தொடர்புகளை கொண்டது.
இந்த தொடர்பை நாளமில்லா சுரப்பிகள் ஏற்படுத்துகின்றன.
குரு - Cerebral Cortex - துரியம்
சூரியன் - Convernous Plexy - ஆக்கினா
புதன் - Pineal Gland - மனோன்மணீயம்
சந்திரன் - Pharyngeal Plexy - விசுக்தி
சுக்கிரன் - Cordiac Plexy - அனாகதம்
சூரியன் - Solar Plexy - மூலாதாரம்
சனி செவ்வாய் - Coccygeal Plexy - மணிபூரம்
ராகு, கேது - Hypogaestric Plexy - சுவாதிஸ்டோள
இவ்வாறு நாளமில்லா சுரப்பிகளுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பும் நாளமில்லா சுரப்பிகளுக்கும் இடையே உள்ள தொடர்பையும் நன்கு உணர்ந்தவர்களால் மட்டுமே நோயைப் பற்றியும் நோயின் மூலத்தையும் கண்டறிய முடியும். இன்று அலோபதி மருத்துவ அறிஞர்கள் நாளமில்லா சுரப்பிகள் உள்ளது என ஏற்றுக் கொண்டுள்ளனர். அன்று அதைப்பற்றி துணித்துனரவோ மேலும் ஆய்வுகளையோ செய்யவில்லை. இதனால் தான் அலோபதி மருத்துவத்தால் நோயை கட்டுப்படுத்த முடிக்கிறதே அன்றி குணப்படுத்த இயலவில்லை. நாளமில்லா சுரப்பிகளை நம் முன்னோர்கள் ஞானிகளும் முனிவர்களும் தன் கையசைவினாலும் நாளமில்லா சுரப்பிகளை தொடுவதாலும் வியாதியை குணப்படுத்தி மகிழ்வித்தனர்.
இவ்வாறு கிரகங்களுக்கும் நமக்கும் இடையே உள்ள தொடர்புகளை அறிந்தோம். எத்தகைய மாற்றங்களைத் துன்பங்களை ஏற்படுத்துகிறது என்பது வான இயலின் அடுத்தக் கட்டசிந்தனையாக எடுத்துக்கொள்வோம்.
ஏற்கனவே நான் கூறியபடி கிரகங்களும் சரி உடலும் ஒன்றுக் கொன்று தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஒரே மாதிரியான சமூகம் இல்லையே. ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயல்பாடுகளும், சிந்தனைகளும், உடல்வாகுகளும் அமைந்துள்ளன. என்ன காரணம்? இதைத்தான் வான இயலில், உடலியலுக்கும் உள்ள தொடர்புகளின் விளைவுகள்.
உடலை பொருத்த வரை மூன்று பாகமாக பிரிக்கிறோம். ஒன்று ஸ்தூல உடல், சூக்கும உடல், காரண உடல். அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் என்பன.
மன உடலை மூன்று பிரிவாக பிரிக்கலாம். 1. ஆழ்மனம், 2. அடிமனம், 3. மேல் மனம், என்பன. உயிருடல் நம் உடலை சுற்றி ஒரு களம், மன உடல் நம் உடலை சுற்றி மற்றொரு களம். இதைதான் இலக்கியவாதிகள் கண்ணுக்கு தெரிபவை மட்டூம் உண்மையானது அல்ல. கண்ணுக்கு தெரியாத பல உண்மைகளும் உள்ளன என்பர். இதனால் தான் இத்தகைய ஆய்வுகளை மதிப்பீடு என்பது சமூக மதிப்பீடு மட்டுமே எடுத்துக்கொள்ளமுடியும்.
அறிவியல் மதிப்பீடாக கொண்டால் குழப்பமே மிஞ்சும். அறிவியல் மேதைகளும் குழம்பிதான் ஆகவேண்டும். அறிவியல் பார்வையில் மனம் எங்கு உள்ளது என்று கேட்டால் உயிர் எங்கு உள்ளது என்று கேட்டால் என்ன பதிலாக இருக்கும். மனம் நோகிறது என்கிறோம். மனதில் பதியவை என்கிறோம். உயிர் உள்ளது என்கிறோம். இவ்வாறு உண்மையானதா? பொய்யானதா? என நமக்குள்ளும் கேட்போம். அறிவியல் பார்வையாலும் வைப்போம்.
மனதையும், உயிரையும், பொருத்தவரை அறிவியல் ஆய்வுகளால் சான்றுகளை கொண்டு உறுதியான மாறாத ஆய்வு முடிவுகளை பெற முடியுமா?
**********************************************************************************
SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES,
CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST
ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
Contact AKSHAYADHARMAR
+91-98424 57516
web:http://akshayadharmar.blogspot.com
**********************************************************************************
செய்முறை கூடங்களில் சான்றுகள் திரட்ட முடியுமா? உயிர் இத்தனை அளவு உள்ளது. மனம் இத்தனை அளவு உள்ளது என கூற முடியுமா? ஏன் இதை கூறுகிறோமென்றால் அறிவியல் செல்லும் பாதை வேறு? ஆன்மிகம் இலக்கியம் செல்லும் பாதை வேறு. இரண்டும் இரண்டு தண்டவாளங்களை போன்றது. எந்த ஒன்று மட்டும் வளர்ந்தாலும் சுகமாக பிரயாணம் செய்ய முடியாது.
அறிவியலும் தேவை. ஆன்மீகமும் தேவை. தேவை என்பது உணர்பவர்களைப் பொருத்த விஷயம்.
இன்று வானவியல் என்ற ஒரு தொகுப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்று சந்திர கிரகணம். சூரிய கிரகணம் நாட்கள் மாதங்களாய், பருவங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் மிக துல்லியமாக கணித்து வைத்துள்ளனர். இன்று அறிவியல் அறிஞர்களும் அதைத்தான் பின்பற்றுகின்றனர். அன்று, தவறு என்று கூறி தூக்கி எறியவில்லையே. இன்று தொலைநோக்கு கருவிகளையும், சேட்லைட் கருவிகளையும் கொண்டு கிரங்களை பார்க்கிறோம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள், கிரகங்களையும் அதன் செயல்பாடுகளையும் மிக துல்லியமாக கூறி வைத்திருக்கின்றனரே சிந்திப்போம்.
இவ்வாறு கிரகங்களின் தாக்கமும், பஞ்சபூதங்களின் தாக்கமும் இம்மண்ணுலகில் மக்களை பலவாறு ஆட்டிப்படைக்கின்றது. இதையே வானவியல் ஆய்வுகளை நிகழ்த்தும். அறிஞர் பெருமக்கள் மிகவும் அடக்கமாக செயல்படுகிறார்கள். பிரபஞ்சத்தை நாம் இயக்குகின்றோமா? பிரபஞ்சம் நம்மை இயக்குகின்றதா? என்ற கேள்விகள் பலவாறு எழுந்து அறிஞர்களையும், ஞானிகளையும் மனதில் குழப்பி கொண்டுதான் உள்ளனர்.
இயற்கையோடு நாம் ஒன்றிதான் வாழக் கற்கிறோம். அதையே தான் எண் கணிதமும் கூறுகிறது. இயற்கைக்கு புறம்பான இயற்கைக்கு புறம்பாக வாழ எந்த சாஸ்திரமும் தோன்றவில்லை. எண் கணிதத்தில் ஒரு எழுத்தை நாம் உபயோகிக்கும் முறையில் கூறும் பொழுது அந்த எழுத்து உள்முகமாக ஒரு அதிர்வலையையும், வெளி அதிர்வலையையும் அதாவது அக அதிர்வலை, புற அதிர்வலை என கூறலாம். இத்தகைய அதிர்வலைகளை 8 நாளமில்லா சுரப்பிகளை கொண்டு அக அதிர்வலைகளை கணக்கிட்டும் புற அதிர்வாலையை 9 கிரகங்களும் தொடர்புபடுத்தி கூறுகின்றனர்.
இதில் அக அதிர்வாலையை நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படுத்தும் எழுத்துக்களை வான சாஸ்திர மதிப்பாக கொள்ளப்படும்.
ASTRONOMY VALUE
A, I, Q,Y. - 1
B, K, R. - 2
C, G, L, S. - 3
D, M, T. - 4
E, H, N, X. - 5
U, V, W. - 6
O, Z, - 7
F, P, - 8
இவ்வாறு எட்டு பிரிவுகளாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
இதை ஒவ்வொருவருடைய பெயரில் எத்தனை அதிர்வாலையை ஏற்படுத்துகிறது என்றால் 3 பிரிவுகளாக பிரித்து செயல்படுகிறது. முறையே இனிசியலில், பெயரில், மொத்த எண்ணில் இத்தகைய தாக்கம் தெரியவரும்.
C. S A N K A R
3. 3 1 5 2 1 2
3 + 14 = 17
இனிசியல் 3 குருவின் ஆதிக்கம்
பெயரில் 14 = 5 புதனின் ஆதிக்கம்
மொத்த எண்ணில் = 17 = 8 சனியின் ஆதிக்கம்
இத்தகைய 3 ஆதிக்கங்களும் ஒருவருடைய பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு அமையவேண்டும்.
பிறந்த தேதியில் 4 கிரகங்களை நாம் எவ்வாறு காண முடியும் என்றால்
ஒருவருடைய பிறந்த தேதி என்பது இறைவனும் நம்மாலும் (பெற்றோர்களால்) தீர்மானிக்கப்படக்கூடியதாக ஒரு குழந்தைக்கு நவக்கிரகங்களின் ஆதிக்கம் முழுமையாக இருந்த போதிலும், எண் கணிதத்தின் வாயிலாக நான்கு கிரகங்களின் அதிக பட்ச ஆதிக்கத்தை ஏற்படுத்தும் பெயரோடும் ஒப்புமைப்படுத்துகிறோம்.
அதிக பட்ச ஆதிக்கம் செலுத்தக் கூடிய கிரகங்களை கண்டறிய 14-05-1980-ல் பிறந்த ஒருவருடைய தேதியின் முதலில்
தேதி, ஒரு கிரகமாகவும்
விதி எண்,ஒரு கிரகமாகவும்
மாதம், ஒரு கிரகமாகவும்
கிழமை,ஒரு கிரகமாகவும்
எடுத்து கொள்ளப்படுகிறது.
பிறந்த தேதி என்பது 14 என்றால் 1+4=5 என்று புதன் கிரகம் எனவும்.
1 வந்தால் சூரியன்
2 வந்தால் சந்திரன்
3 வந்தால் குரு
4 வந்தால் இராகு
5 வந்தால் புதன்
6 வந்தால் சுக்கிரன்
7 வந்தால் கேது
8 வந்தால் சனி
9 வந்தால் செவ்வாய்
என எடுத்துக் கொள்ளவேண்டும்.
விதி எண் என்பது :
பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தும் கூட்டி வரக்கூடிய கூட்டு எண்ணே விதி எண்ணாக கொள்ளப்படும்.
14-05-1980 - 1+4+0+5+1+9+8+0
28 = 2+8 = 1 சூரியன் என விதி எண்ணாக எடுத்துக் கொள்ளவும்.
மாதம் என்பது:
ஒரு பிறந்த மாதம் எதுவோ அதையே கீழ்காணும்படி ஒரு கிரகமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஜனவரி (1) - சனி (8)
பிப்ரவரி (2) - சனி (8)
மார்ச் (3) - குரு(3)
ஏப்ரல் (4) - செவ்வாய் (9)
மே (5) - சுக்கிரன் (6)
ஜூன் (6) - புதன் (5)
ஜூலை (7) - சந்திரன் (2)
ஆகஸ்ட் (8) - சூரியன் (1)
செப்டம்பர் (9) - புதன் (5)
அக்டோபர் (10) - சுக்கிரன் (6)
நவம்பர் (11) - செவ்வாய் (9)
டிசம்பர் (12) - குரு(3)
என 5-வது மாதம் என்றால் மே மாதத்திற்குரிய கிரகம் சுக்கிரன் என எடுத்து கொள்ளவும்.
கிழமையை:
ஞாயிறு - சூரியன் (1)
திங்கள் - சந்திரன் (2)
செவ்வாய் - செவ்வாய் (9)
புதன் - புதன் (5)
வியாழன் - குரு(3)
வெள்ளி - சுக்கிரன் (6)
சனி - சனி (8
என எந்த கிழமையில் பிறந்துள்ளார் என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.
இவ்வாறு 4 கிரகங்களை கண்டுபிடித்து அதற்குரிய கிரகங்களில் எந்த கிரகம் அவருக்கு வலிமையாக உள்ளதோ அந்த கிரகத்தைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சிக்குட்படுத்தி அந்த கிரகத்திற்கு ஒப்புமையான கிரகத்தை எடுத்து பெயர் வைக்க கையாளவேண்டும். இதற்கு ஆராய்ச்சி தன்மையினை கொண்டே மிக சிறப்பாக செயல்பட முடியும்.

இனிசியாலஜி (Initiology)
ஒருவருடைய பெயரில் ஆரம்ப எழுத்து எனவும் தந்தையாரின் ஆரம்ப எழுத்து எனவும் எடுத்துக் கொள்வது. இத்தகைய இனிசியலில் எனப்படும் எழுத்திற்கு ஒருவருடைய தலையெழுத்து மற்றும் வல்லமை உண்டு.
இனிசியலாவது முறைப்படி ஒருவருடைய பெயருக்கான பலனை பகுத்துக் கூறும்பொழுது, வெளிப்படும் இனிசியலில் உள்ள கிரகம் ஒருவருடைய கிரகச் சூழலில் ஒரு பாகமாக செயல்படும். ஒருவருடைய பெயர் இயக்கத்தில், இனிசியலுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு.
இனிசியல் என்பது ஒரு கிரகம் அந்தக் கிரகத்திற்கும் வலிமை உண்டு. அந்த கிரகத்தை மையமாக வைத்து செயல்பாடுகளும் நிகழ்கிறது. அதே கிரகத்தை மையமாக வைத்து நோய்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர் கூறுகிறார். இங்கு ஆய்வாளர் இனிசியல் என குறிப்பிடுவதற்கு காரணம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.
பெயர் எண் கிரகம், இனிசியல் எண் கிரகம், மொத்த எண் கிரகம்
ஒருவருடைய உடலில் இனிசியலில், பெயர், மொத்த எண் இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக துரியம் எனப்படும் Cerebral Cortex எனப்படும் சக்கரம் வாயிலாக செயல்பாட்டிற்கு தயாராகிறது.
உதாரணத்திற்கு,
G. K U M A R
3. 2 6 4 1 2
3 + 15 = 18
இனிசியல் - 3 = குரு
பெயர் - 15 = 6 சுக்கிரன்
மொத்த எண். 18 = 9 = செவ்வாய்
முதலில் இனிசியல் மூளையில் பதிந்து பிறகு மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் கருமையம் என படிப்படியாக பதிவாகி ஜீவ காந்தமாக செயல்பட்டு உடலை இயக்கிக் கொண்டே, வான்காந்த பதிவாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகிறது.
இனிசியலின் இயக்கம் அந்தந்த கிரகத்தின் தன்மையை பொருத்து குறிப்பிட்ட காலம் இயங்கி பிறகு பெயரின் பதிவு செயல்பட ஆரம்பிக்கும் பிறகு மொத்த எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து மாற்றி, மாற்றி செயல்பட்டு கொண்டே இருக்கும்.
மேலே குறிப்பிட்டபடி முதலில் குரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்.
பிறகு சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். இவ்வாறு மாறி மாறி இதே கிரகங்களின் ஆளுமையில் அவருடைய வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டிருக்கும்.
K.K R A J A S E K A R
2 2 2 1 1 1 3 5 2 1 2 = 7
4 + 18 = 22
இனிசியல் 1+7 = 4
பெயர் மொத்த எண்
S.M J A Y A B H A R A T H I
3 4 1 1 1 1 2 5 1 2 1 4 5 1
7+ 24 = 31
72 + 4 = 6 3 + 1 = 4
இனிசியல் பெயர் எண் மொத்த எண்.
இவ்வாறு பெயரை மூன்றாக பிரித்து இனிசியலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஒரு எழுத்தை கூட்டியோ குறைத்தோ நம் வாழ்க்கையை சரி செய்து கொள்வது ஊர் பெயரின் முதலெழுத்தையோ, தாயாரின் பெயரின் முதல் எழுத்தையோ சேர்த்து வலிமைப்படுத்திக் கொள்வது வழக்கம்.
இனிசியல் என்பது ஒரு ரயிலுக்கு டிரைவரை போன்றது. இனிசியலுக்கு என்று ஒரு வலிமை உண்டு.
NAMELOGY (பெயரியல்)
ஒருவருடைய பெயர் எல்லோராலும் கூப்பிடும் பெயராகவும் இருக்கலாம். அல்லது கையெழுத்திடும் பெயராகவும் இருக்கலாம். இதில் கையெழுத்திடும் பெயருக்குத்தான் வலிமை மிக மிக அதிகம். கூப்பிடும் பெயர் 4 வயது வரை மட்டுமே வேலைசெய்யும். பிறகு அவர்கள் தனது மூளையில் தன் பெயரின் எழுத்துக்களை பதிக்க செய்கின்ற பொழுது அத்தகைய பதிவின் செயல்பாடு வலிமையாக செயல்படுகிறது.
ஒருவருடைய பெயர் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்தளவிற்கு அவருடைய செயல்பாடுகளில் வலிமை அதிகமாக இருக்கும். ஒருவரை குறிப்பிடும் பொழுது இன்னார் என அவருடைய பெயரை குறித்து தானே பேசுகிறோம். பெயரை வைத்து தான் அவருடைய உருவத்தையும் நம் மனம் எடுத்துக் காண்பிக்கிறது. பெயர் மகா வலிமை பொருந்தியது. சிலர் இனிசியல் என தனியாக இல்லாமல் பெயரை மட்டும் கையெழுத்தாக இடுவது உண்டு.
ஒருவருடைய பெயரை விட்டு விட்டு அவரைப் பற்றி சிந்தித்து பாருங்கள் எதுவும் நினைவில் கொள்ள இயலாது. பெயரே அவராகவும், அவரே பெயராக அமைந்துள்ளது. அவர் இல்லை என்றாலும் பெயர் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெயரை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியம். நம்மோடு பல பெயர்கள் வாழ்கிறது. பெயர்களுக்குரியவர்கள் இல்லை. குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜவஹர்லால் நேரு, காந்திஜி ... என பல பெயரை நாம் இன்றும் உபயோகிக்கிறோம். அத்தகைய பெயரை பெற பெருந்தவங்கள் பெரிய அதிர்ஷ்டங்கள் செய்திருக்க வேண்டும். இத்தகைய பெயரை பெறுவதற்கு என்ன பிரதிபலன் செய்தாலும் ஈடாகுமா என்றால் கண்டிப்பாக ஈடாகாது. பெயரே நாமாகவும் நாமே பெயராகவும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய பெயருக்கு ஒரு பலன் உண்டு. இத்தகைய பெயரே நம்மை ஆளுமைப்படுத்துகிறது. நம் செயல்பாடுகளுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு உள்ளது என அறிய வேண்டாமா? இதுவே பகுத்தறியும் தன்மையில் ஒரு பாகமாகும்.
இதில் இனிசியல் இல்லாமல் பெயருக்கு என்று ஒரு கிரகம் உண்டு. பெயருக்கு என்று ஒரு வலிமை உண்டு. இத்தகைய பெயருக்குரிய கிரகம் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மேலும் நன்மைகள் ஏற்படும். பெயருக்கு ஆரம்ப எழுத்து உண்டு. முடிவு எழுத்து உண்டு. எத்தகைய எழுத்துக்களை மாலையாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும் அதன் வலிமையை கூறமுடியும்.
இனிசியல் டிரைவர் என்றால் பெயர் இன்ஜினை போன்றது. ஒரு ரயிலுக்கு டிரைவரும் முக்கியம். இன்ஜினும் முக்கியம் என்ற அடிப்படையில் இன்ஜினின் தன்மையை பொறுத்தே டிரைவர் தனது வேலையை செயல்படுத்த முடியும். இனிசியலுக்கு என்று தனித்தன்மை உண்டு. அது பெயரின் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடு அமையப்பெறும்.
பஞ்சபூதம்(EARTHETIC FIVE ELEMENTS)
ப்ருதிவி - திரு.காஞ்சி
அப்பு - திருவானைகாவல்
தேயு - திருவண்ணாமலை
வாயு - திருக்காளத்தி
ஆகாயம் - சிதம்பரம்
இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்பனவாகும். இதன் தோற்றம் விண்ணிலிருந்து காற்றாகவும், காற்றிலிருந்து நீர் ஆகவும், நீரிலிருந்து நெருப்பாகவும், நெருப்பிலிருந்து எரிமலை குழம்பு மூலம் நிலமாக பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பஞ்சபூதங்களின் தொடர்புகள் தான் நம் உடலிலும் அமையப் பெற்றுள்ளது. ஜீவ உயிர்கள் யாவும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஜடப் பொருட்கள் என்று கூறப்படுவது பஞ்சபூதங்களால் ஆனது. அந்த காலத்தில் பஞ்சபூதங்களை தெய்வங்களாக கொண்டாடினார்கள். நாம் தெய்வமாக கொண்டாடும் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் பல சூட்சும முடிச்சுகளை போட்டு வைத்துள்ளனர். அதன் அருமை, பெருமைகளை எண்ணி வியப்படைந்து கொண்டிருக்கும் இவ்வுலகம், நம் கலாச்சாரங்களைத் தனித்து பார்வையிடுகின்றனர். நாம் அதில் உள்ள சூட்சமங்களை அறியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஆலயங்கள் யாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் மையமாக வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சபூதகளில் ப்ருதவிலிங்கம் என்று அழைக்கப்படும் நிலத்திற்கு அதிபதியாக காஞ்சி அமைந்துள்ளது. நீருக்கு அப்பு லிங்கமாக திருவனைக்காவலும். சிவதலங்களில் தேயு லிங்கமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது. வாயு லிங்கமாக திருகாளத்தியும், ஆகாயலிங்கமாக சிதம்பரமும் அமைந்துள்ளது. இவ்வாறு பஞ்சபூதங்களை மையமாக வைத்து கோவில்கள் அமையப் பெற்றுள்ளது.
எண்கணிதத்தில் பஞ்சபூதங்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் ஆற்றலையும் உயிர் ஆற்றலையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பிறந்த தேதியில் ஒரு பூதம் அடிப்படையாக அமையப்பெறும். அது இல்லாமல் இரண்டு பூதங்கள் பிறந்த தேதியோடு தொடர்புடையதாக கண்டிப்பாக அமையப்பெறவேண்டும். அவ்வாறு அமையுமானால் அவர் இப்பூமியில் வாழத் தகுதியுடையவராக ஆவார்.
தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
அதாவது,
அ - நிலம் - ப்ருதிவி - 1
இ - நீர் - அப்பு - 2
உ - நெருப்பு - தேயு - 3
எ - காற்று - வாயு - 4
ஒ - விண் - ஆகாயம் - 5
இவ்வாறு ஐந்து எழுத்துக்களை மையமாக கொண்டு பஞ்சபூதங்களுக்கிடப்படுகிறது. இந்த ஐந்து பூதங்களை மையமாக வைத்து தமிழ் எழுத்துக்களை அடக்கிவிடலாம்.
சு – க் + (அ) = நிலம்
இ – க் + (இ)= நீர்
இவ்வாறு அனைத்து எழுத்துக்களையும் வடமொழி எழுத்துக்கள் உட்பட பஞ்சபூதங்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்.
ச ங் க ர்
1 2 1 2 = 6/5 = மீதி 1 = நிலம்
கார்த்திக்
1 2 2 2 2 = 9/5 = மீதி 4 = காற்று
ப்ரூதிவிராஜ்
2 3 2 2 1 2 = 12/5 =மீதி 2 = நீர்
ஓம்பிரகாஷ்
5 2 2 1 1 2 = 13/5 = மீதி 3 = தீ
இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள எண்ணை தொடர்புப்படுத்தி கூட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டிய எண்ணை ஐந்தால் வகுக்க வரும் மீதியை அவருடைய பஞ்சபூதத் தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சங்கர் = நிலத்தின் தன்மையில் பெயர் உள்ளது.
கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது.
ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது.
ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது.
காந்தி
1 2 2 =5 – 5 = 5 = விண்
மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும்.
பிர்லா
2 2 1 = 5 - 5 = 0 = 5 விண்
ரஜினிகாந்த்
1 2 2 1 2 2 = 10 - 5 = 0 = விண்
இவ்வாறு கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவருடைய பெயர் எந்த பூதத்தின் தன்மையில் அமைந்துள்ளது என அறியலாமே.
பிறந்த தேதியில் அமைந்துள்ள பூதத்தோடு பெயரில் உள்ள பூதம் ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மிக உன்னத நிலையை அடைய முடியும்.
பிறந்த தேதி 1 எனில் நிலமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2, 7, 12, 17, 22, 27, தேதிகள் நீரை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
3, 8, 13, 18, 23, 28 தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
4, 9, 14, 19, 24, 29 தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
5, 10, 15, 20, 25, 30 தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
இதில் எந்த பூதத்தின் தன்மையில் ஒருவர் பிறந்துள்ளாரோ அந்த பூதத்திற்கு சாதகமான பூதத்தின் பெயர் அமையவேண்டும்.உதாரணத்தில் நீரின் தன்மையில் பிறந்தவருக்கு நெருப்பின் தன்மையில் பெயர் அமையக் கூடாது. நீருக்கு, நெருப்பு எதிர்மறையான வினை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமையும் பட்சத்தில் உயிர் ஆற்றலும், தொழில் ஆற்றலும் பாதிக்காமல் இருக்கும்.
ASTROLOGY (ஜாதகம்)
எண்கணிதத்தில் ஒரு அங்கமாக வகிப்பது ஜாதகம் ஆகும். ஒருவருடைய வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக ஜாதகம் அமைந்துள்ளது. ஒரு ரயிலில் தண்டவாளங்கள் அமைந்திருக்கும் நிலையில் ஒரு தண்டவாளமாக அமைந்து நிலையாக அமையப்பெற்றிருக்கும்.
ஜாதகம் என்பதே சாதகம் என்பது தான் பொருள். ஒருவருடைய வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை (சாதகமான) தெரிந்து கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமும் அமைந்திருக்கும். அவர்களும் பயப்பட தேவையில்லை. சாதகத்தில் ஏற்படும் பாதகத்தை இயற்கையே மாற்று வழிகளை ஏற்படுத்தி அதையும் சாதகமாக்கிவிடும். அந்த இயற்கையின் செயலை நாம் செம்மையாக செய்யவிடவேண்டும். அதற்கு பெயர் சரியாக இருந்தால் தான் செயல்படும். தட்ப வெப்பநிலையின் வெளிப்பாடு எங்கு சாதகமாக அமைகிறதோ அங்கு உயிரினங்கள் மிகுந்துக் காணப்படும் என்பது இயற்கை. உலக நாடுகளில் மிக சாதகமான தட்ப வெப்பநிலை ஆசியா கண்டத்தில் மட்டுமே உண்டு என்பதாலேயே இங்கு மக்களின் எண்ணிக்கை உலக நாடுகளோடு தொடர்புபடுத்தும் பொழுது அதிகமாக இருப்பது தெரிகிறது. நம் மக்களுக்கு தலை முடி ஏன் கருப்பாக அமைந்துள்ளது எனவும், பிற நாட்டில் (வெள்ளைக்காரர்கள்) மக்களுக்கு ஏன் வெண்மையாக இருக்கிறது என்பது இயற்கையின் தற்காப்பு ரகசியம். இங்கு வெயில் அதிகம் என்பது கருப்பு நிறம் நம் மூளையை தாக்காமல் வெப்பத்தை பிரதிபலித்து விடும் என்பதால் அமையப்பெற்றுள்ளது. இதற்கு நேர் மாறாக குளிர் பிரதேசத்தில் குளிர் தாக்காமல் இருக்க வெள்ளை நிறமாக அமைந்துள்ளது.
நெகம் எதற்கு? என்றால் தற்காப்புக்காக என அடுக்கி கொண்டே போகலாம் இவ்வாறு இயற்கையே தனக்குத் தானே பாதுகாக்கும் ஒரு வேலையையும் செய்து கொள்கிறது.
ஒரு சிலருக்கு மட்டுமே பாதகமான பலன்கள் அமையப்பெறும். உதாரணமாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என அமையப்பெற்றுள்ள ஒருவர் வெளியில் தண்ணீர் குடித்தல் கூடப் பார்த்து தான் குடிப்பார். இது மற்றவர்களுக்கு "இப்படியும் ஒருவரா" எனத் தோன்றும். இது ஜாதக ரீதியாக விஷ உணவை உட்கொள்ள வேண்டும் என்று ஜாதகருக்கு நிபுணர் கூறும் பொழுது அறிவுரை கூறுவார். அப்பொழுது அவரே நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என கூறும் பொழுதுதான் இதன் உண்மை புலப்படும். இதையும் மீறி விஷ உணவை உட்கொள்ளும் பொழுது உடனே வாந்தி, பேதி ஏற்பட்டு வெளியேற்றிவிடும். விஷ உணவு என்பது பழைய உணவாக இருக்கலாம். பழைய எண்ணை (அ) பூச்சிகள் விழுந்தும் இருக்கலாம். இவ்வாறு தனைத்தானே தற்காத்துக் கொள்ளக்கூடிய தன்மை இயற்கைக்கு உண்டு.
இவ்வாறு சாதகமானவற்றை ஜாதகத்தின் அடிப்படையில் தெரிந்துக் கொண்டு செயல்படும் பொழுது சாதகத்தை ஊக்கப்படுத்தலாம். பாதகமான பலன்களை தவிர்ப்பதற்கும் பெயரில் அமைக்கலாம். எண் கணித நிபுணருக்கு ஜாதகம் மூலம் ஒருவருடைய இயற்கையான விதி என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும். இந்த இயற்கையான விதியை அடிப்படையாக வைத்து செயற்கையான விதியை அமைக்க முடியும். ரயிலில் தண்டவாளம் இரண்டும் ஒரே சம அளவு இடைவெளியில் சரியாக அமையவேண்டும். அவ்வாறு அமையும் பட்சத்தில் பிரயாணம் சிறப்பாக செய்யமுடியும். இவ்வாறு ஒரு தண்டவாளம் இன்னொரு தண்டவாளமும் ஏறுக்கு மாறாக அமையுமானால் பிரயாணம் தடைப்படும். இயற்கை விதியோடு செயற்கை விதி ஒன்றுக்கொன்று ஒப்புமையாக அமையவேண்டும். அமைந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
ஜாதகம் பெயர் ஜாதகம்
பெயர்
img
தண்டவாளம் தண்டவாளம்
(சரியானது) (தவறானது )
ஒருவர் பிறக்கும் பொழுது அவரை சுற்றி நவக்கிரகங்களும் அமையப் பெற்றுள்ளது. அதன் தாக்கம் இவருக்கும் எந்தளவிற்கு நன்மையாக அமைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள எட்டு வகையாக பிரித்து உணர்வார் எண் கணித நிபுணர்.
ஒரு கிரகம் எந்த மாதிரி
ஒரு கிரகம் ஒருவருக்கு எப்படி உள்ளது என்பதை Poor , Very Poor ,Normal , Bottom , Good , Very Good , Excellent , Top Most என எட்டு பிரிவாக பிரிந்த எந்த நிலையில் அமைந்துள்ளது என அறிவார்.
அதே போல் பன்னிரண்டு வீடுகளும் எப்படி அமைந்துள்ளது என்பதையும் பகுத்தறிவார் தனது ஆராய்ச்சியில் தற்பொழுது யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என 12 கிரகங்களையும் 12 வீடுகளையும் பகுத்து ஆராய்ந்து எந்தத் திசைகளை சந்திக்கப் போகிறார் அதன் தன்மை, பலன் எத்தகையதாக அமைந்துள்ளது என்பதை பலனை எட்டுப் பிரிவாக பிரித்து பார்த்து Top Most ஆக அமைந்து கிரகத்தை எடுத்து அதற்கு சாதகமான கிரகத்தை எடுத்து பெயருக்கு உபயோகிக்கும் தன்மை அமைந்துள்ளது.
சாதாரணமாக 14-05-1970-ல் பிறந்த ஒருவருக்கு கிரக நிலைகள் எப்படி உள்ளது என அறிய
1 Top most 1 V.G
2 Good 2 Good
3 Good 3 Ex
4 Poor 4 Nor
5 Ex 5 V.G
6 V.G 6 Ex
7 Nor 7 Nor
8 Nor 8 V.G
9 Nor 9 V.G
10 Good 10 Ex
11 Ex 11 Top most
12 Nor 12 Top mo
நடக்கும் திசை முடிய
7= 29-08-1973 -V.G
6= 29-08-1993 -Ex
1= 29-08-1999 -Ex
2= 29-08-2009 -Ex
9= 29-08-2016 -Nor
4= 29-08-2034 -Nor
3= 29-08-2050 -Good
8= 5-03-2057 -V.G
தடம் (Tracking)
தலைப்பிலேயே அதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும். தண்டவாளங்கள் ஒரே இடைவெளியில் ஒரே நீளமுடையதாகவும், ஒரே அளவுடையதாகவும் பிரயாணம் செய்யத்தக்க சக்கரத்தின் அமைப்பை ஒத்தும் அமையவேண்டும். ஒருவருடைய பெயருக்கும் இனிசியலுக்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு தண்டவாளத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒருவருடைய பெயரின் கிரகமும், இனிசியலின் கிரகமும் பிறந்த தேதியோடு ஒத்து இருக்கவேண்டும். தடம் எப்படி அமைந்துள்ளது என்பது மிகுந்த ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே அறியமுடியும். ஒரே சீராக தடம் அமையப் பெற்றிருந்தால் சிறப்பான செயல்பாட்டை பெறமுடியும். ஒருவருடைய எண்ணம், செயல்பாடும் சுலபமாக ஒரே நேர்கோட்டில் அமையப் பெரும். இல்லாத பட்சத்தில் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமைந்து விடும். நினைப்பது நடப்பதற்கும் தடம் மிகமிக முக்கியம்.
தடத்தில் ஒரு தடம் ஒரு கிரகம் என்றால் அதற்கு இணையான தடம் அமையப்பெற்று இந்த இணைந்த குழு தடங்களும் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையப் பெற்றால் மிக உன்னதமாக பலனை எதிர்பார்க்கலாம்.
தடத்தின் தன்மையை பொருத்தேப் பிரயாணம் எப்படிப்பட்டதாக அமையும் என்பது தெரியவரும்.
உதாரணம் :
S.K S A N K A R
3.2 3 1 5 2 1 2
5 + 14 = 19
5 + 5
S.K சங்கரின் பெயரில் தடம் ஒன்று 5 ஆகவும் தடம் இரண்டும் 5 ஆக அமையப்பெற்றுள்ளது. மிக சிறப்பான தடமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் சிறப்பாக அமைந்துள்ளதா என அறிய அவருடைய பிறந்த தேதியை கொண்டு அறிய முடியும். இந்த தடம் 6-ஆம் தேதி பிறந்துள்ளவருக்கு 6, 7, 8, தேதிகளில் பிறந்தவர்களும் ஒத்து வருவது, வராதது. இவ்வாறு தடம் பிறந்த தேதியை பொறுத்தே சிறப்பாக அமைக்கப்படவேண்டும்.
இந்த நிலை மாறும் பொழுது அவனை தடம் புரண்டான் என்றுதான் கூறவேண்டும். தடம் புரளுதல் வாழ்க்கையில் தனது இலக்கை அடைய முடியாது என்பது பொருள். பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும். தடம் அமைக்கும் பொழுது பிறந்த தேதிக்கும் பொருத்தமாகவும், பெயரின் இனிசியல் எழுத்துக்கு அடுத்த எழுத்து கணக்கில் எடுத்துக் கொண்டும் பெயரின் எண் சரியாக அமைத்து அந்த பெயரின் எண்ணும் பிறந்த தேதியோடு ஒப்புடையதாக அமையப் பெற்று தடம் அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கும் தடம் எவ்வளவு தூரம் சரியாக அமையப்பெறும் என்பதையும் மனதில் நிறுத்தி அதற்குத் தக்க வலிமையான எண் மதிப்பை அமைத்துத் தடம் அமைக்கவேண்டும்.
NAME ANALYSING (பெயர் ஆய்வு)
ஒரு பெயருக்கு மிகவும் முக்கியமானது பெயர் ஆய்வு என்பதாகும். இது மாலை தொடுப்பது போன்றது ஆகும். ஆரம்பம் எது முடிவு எது என்பதை குறிக்கும் ஒரு நிலை. ஆரம்பத்தில் இந்த எழுத்து அமையப்பெறுவது முடிவில் இந்த எழுத்து அமையப்பெறுவது என்றளவில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொருவருடைய பிறந்த தேதியை பொருத்து ஆரம்ப எழுத்து முடிவு எழுத்து மாறுபடும். ஒரே மாதிரியாக அமையப் பெறுவது கடினம்.
ஒருவருடைய வாழ்க்கையின் செயல்பாடுகளில் ஆரம்பம் எத்தகையது முடிவு எத்தகையது என்பது இதன் அடிப்படியிலேயே கூற முடியும். உதாரணமாக ஒரு மாணவர் கல்லூரியில் சேர விரும்புகிறார். ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை பெறுவர். எப்படி எனில் ஒருவர் ஆரம்பித்து விடுவார் முடிக்க திணறுவார். ஒருவருக்கு ஆரம்பிக்க மிகவும் சிரமப்படுவார் பிறகு வேகமாக செய்து முடிப்பார். ஒருவரால் ஆரம்பிப்பதிலேயே குழப்பம் ஏற்பட்டு முடிவு வரை குழப்பமாக செய்வார்.
இவ்வாறு ஆரம்பம், முடிவு என்ற இரு செயலும் பெயரை பொருத்தே அமைகிறது.
5-ஆம் தேதி பிறந்த ஒருவருக்கு எழுத்து C, G, L, S-யில் அமையப்பெற்றால்
எந்த காரியம் ஆரம்பிக்கும் பொழுதும் தடைகள் ஏற்படும்.
5-ல் B, K, R-யில் அமையப்பெற்றல்
வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும், இல்லற வாழ்க்கைக்கு உகந்தது கிடையது.
5-ல் M, T, D-யில் அமையப்பெற்றல்
ஆரம்பம் போராட்டமாக அமையும். மனதில் ஏதாவது ஒருகுறையோடு இருப்பார்.
5-ல் பிறந்து A, I, J, Q, Y-யில் பெயர் அமைந்தால்
செல்வசெழிப்பு ஏற்படும். கையில் பணம் புலங்கிக் கொண்டே இருக்கும்.
5-ல் பிறந்து U, V, W-யில் பெயர் அமைந்தால்
செய்யும் தொழிலில் தன்னைத் தியாகம் செய்து கொள்வார். நண்பர்கள் உறவினர்களுக்காக தியாகம் செய்து கொள்வார்கள்.
5-ல் பிறந்து E, H, N-ல் பெயர் அமையப்பெற்றல்
செய்யும் செயலில் ஈடுபாடு முதன்மைப்படுத்தும் தன்மை வசீகரம் கிடைக்கும்.
இவ்வாறு ஒவ்வொரு தேதிக்கும் பெயரின் ஆரம்ப எழுத்திற்கும் முடிவு எழுத்திற்கும் உள்ள தொடர்பு செயல்களில் ஆரம்பமும், முடிவை கூறும் வகையில் அமைந்துவிடும்.
இதுபோன்று ஆரம்ப எழுத்து, ஒருவருடைய வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த எழுத்து அமைந்தவிதத்தை பொருத்து அமையப்பெறும். ஆரம்பம் மிக முக்கியம். முடிவு மிக முக்கியம். இதை விலியுறுத்தவே இந்த பெயர் ஆய்வு ஏற்பட்டது. ஆக்கும் கணக்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. பிறந்த தேதியின் தன்மையும் ஆரம்ப எழுத்து, முடிவு எழுத்துக்கும் இடைப்பட்ட கணக்கு அவரின் அடித்தளமாக அமைந்து செயல்படும்.
Word Combination (எழுத்துக் கோர்வை)
எழுத்துக் கோர்வை என்பது மாலையை கட்டுவது போன்றதாகும். அதை அழகாகவும் நயமாக கட்டுவது போன்றது. ஒரு பெயருக்கு மிக முக்கியமான பங்கு ஒருவருடைய தொழிலாகும். அந்த தொழிலில் அவரது உழைப்பு எத்தகைய தன்மையை உடையது என்பதை அறிய இந்த எழுத்துக்கோர்வை பயன்படும்.
ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டும் என்றே உழைக்கிறோம். ஆனால் ஒருவர் நன்றாக சம்பாதிக்கிறார். ஒருவர் மிகவும் சிரமப்படுகிறார். பொருளாதார சூழலை பொருத்தே பெற்றுள்ளார் என்பது உலக வழக்கமாக அமைகிறது. திறமையை வெளிப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒருவரையே இவ்வுலகம் பாராட்டுகிறது. பட்டங்களையும் பதவிகளையும் தருகிறது. இத்தகைய ஒரு ஆராய்ச்சி எண் கணித ஆராய்ச்சிக்கு கிட்டிய மிக பெரிய வரப்பிரசாதம் எனலாம். மிக உன்னதமான நிலைக்கு சர்வ சாதாரணமாக இந்த கணக்கு மூலம் பொருளாதார முன்னேற்றத்தை மிக எளிதாக தர இயலும் என்பதை ஐயம்பட கூறமுடியும்.
இந்த கோர்வை சிறப்பாக அமையப் பெற்றால் ஒருவருடைய உழைப்பு வீண்போகாது. உழைப்பது ஒட்டும். ஆக ஒருவருடைய முன்னேற்றம் பொருளாதார அளவில் அமைவதற்கு இந்த கணக்கு மிக மிக அவசியமானதாக உள்ளது.
SARATHA`S
43359613
9685679
454242
99666
9633
696
66
MANGAL&MANGAL
568443456844
25387792538
7826572782
618239961
79153967
7168364
8752291
63721
9193
113
24
AJITHKUMAR
225978153
47576968
2334665
567132
24845
6339
963
69
Single earning Capacity
RAJINIKANTH
3226633699
548396969
93236666
3559333
815366
96893
6583
242
66
Double earning capacity
இது போன்று 6, 2 சம்பாதிக்கும் திறனைக் கொண்டு இருக்கும். பிற எண்கள் அவர்களுடைய பிறந்த தேதியை பொருத்து மாறுபடும்.
பொதுவாக இதில் குறிப்பிட்ட எண்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமைப்பது கூடாது. வானவியல் (Astronomy) மதிப்பை பொருத்து எழுத்துக் கோர்வை அமைக்கப்படும். எழுத்துக் கோர்வையில் உள்ள எண் வானவியல் எண் மதிப்போடு ஒரு பொருத்தம் இருந்தால் மட்டுமே மதிப்பு பொருத்தம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஆக முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது. வானவியல் மதிப்பு ஆகும். இதனை அடிப்படையாக கொண்டு எழுத்துக் கோர்வை மதிப்பு போடப்படும். எந்தக் காரணம் கொண்டும் நீங்களாக பெயரை திருத்தம் செய்து கொள்ளாதீர்கள். இது புத்தகம் படித்து சமையலே தெரியாதவர் சமையல் செய்வது போன்றதாகும்.
ஒரு பெயரை தொடர்ந்து அடிக்கடி திருத்தம் செய்து கொண்டு எழுதி வருவாரானல் அவருக்கு எப்பொழுதுமே நிலையான பெயர் அமைய வாய்ப்பு கிடையாது. அடிக்கடி மாற்றம் செய்வது கடுமையான வியாதிகளை ஏற்படுத்திவிடும். ஒரு எண்ணிற்கு உள்ள வியாதி எதுவோ அது உடனே தலைதூக்கும் நன்மை அனுபவிப்பதைவிட தீமை மிகுதியாக பெறுவீர்கள். ஆகவே தகுந்த ஆலோசனை பெற்றே பெயரை திருத்தம் செய்யவும்.
PRONOLOGY (ஒலியியல்)
ஒரு எழுத்தை உச்சரிக்கும் பொழுதும் ஏற்படும் அதிர்வலையே ஒலியியல் ஆகும். A என்ற எழுத்து உச்சரிக்கும் பொழுது மனதிற்குள் செல்லும் செயலை அக அதிர்வலையை முன்னர் பார்த்தோம். ஒரு காந்தத்திற்கு இருதன்மை உண்டு. ஒன்று ஈர்க்கும் ஆற்றல். மற்றொன்று தள்ளும் ஆற்றல் என்பது போல் ஒரு சொல்லை உள் வாங்கும் பொழுது அதன் ஈர்க்கும் ஆற்றலாகவும், ஒரு அலை வெளியில் செல்லும் வேகத்தை தள்ளும் ஆற்றலாகவும் கணக்கிடப்படுகிறது. எழுத்தின் ஈர்க்கும் ஆற்றலை Astronomy Value அஸ்ட்ரானம் மதிப்பீட்டில் பார்த்தோம். இப்பொழுது தள்ளும் ஆற்றலை ஒலியியலில் காண்போம். எப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள ஈர்க்கும் திறன் அளவுகோலை AIJQY =1 என கூறினோமோ.
அதே போல் தள்ளும் திறன் அளவுகோளுக்கு மதிப்பு உண்டு. அதையே,df
A, J, S = 1
B, K, T = 2
C, L, U = 3
D, M, V = 4
E, N, W = 5
F, O, X = 6
G, P, Y = 7
H, Q, Z = 8
I, R = 9
இந்த மதிப்பைக் கொண்டே ஒலி அதிர்வு எண்ணை காணமுடியும்.
உதாரணம்,
S.R A G A V A N
1 9 1 7 1 4 1 5
1 + 28 = 29
S K. M A Y I L S A M Y
1 2 4 1 7 9 3 1 1 4 7
3 + 37 = 40
R A J I N I K A N T H
9 1 1 9 5 9 2 1 5 2 8 = 52
T A T A
2 1 2 1 = 6
B I R L A
2 9 9 3 1 = 24
இவ்வாறு அது அதற்குள்ள எழுத்திற்குரிய எண்களை பொருத்தி இதன் கூட்டு எண்ணும் சம்பாதிக்கும் திறனை உடையதாக அமைத்து கொள்வது மேலும் சிறப்பை தரும். பிறந்த தேதியோடு ஒத்து செயல்படவேண்டும்.
எழுத்தின் விகிதச்சாரம் (Percentage)
எழுத்தின் விகிதச்சாரத்தில் ஈர்ப்பு சக்தியின் அடிப்படையில் எழுத்திற்கு உள்ள விகிதச்சாரம் தான் நம் சக்திக்குரிய எழுத்தின் விகிதச்சாரம் என இருவகையாக அமையப்பெறும். Astronomy Sound Value, Pronology Sound Value என்பதாகும். ஒரு பெயரில் எத்தனை எழுத்துக்கள் பிரித்து உபயோகப்படுத்தியுள்ளோம். எப்படி பயன்படுத்துவது என்பது விகிதச்சாரம் பார்ப்பது. ஒரு சிலருக்கு சூரியனின் ஆதிக்கத்தை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக விகிதச்சாரம் பார்த்து மிகைப்படுத்த உதவும் கணக்கு.
இவ்வாறு இருவகையிலும் பார்த்துக் கணக்கிடும் பொழுது பெயருக்கு மேலும் ஆற்றல் பிரவாகம் எடுக்கும்.
உதாரணமாக M. JAYAPRAKASH என்ற பெயருக்கு எழுத்தின் விகிதச்சாரம் என்ன என பார்ப்போம்.
Astronomy Sound Pronology Sound
1 50% 1 50%
2 16.7% 2 8%
3 8.3 3 0%
4 8.3% 4 8%
5 8.3% 5 0%
6 0% 6 0%
7 0% 7 17%
8 8.3% 8 8%
9 0% 9 8%
இவ்வாறு மேற்கூறியபடி ஒருவருடைய பெயரில் எத்தகைய கிரகத்தின் வலிமை மிகுதியாக இருக்கவேண்டும் என்று ஆய்வு செய்து அதற்கு தக்கபடி கிரகங்களை விகிதச்சாரம் வாயிலாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
**********************************************************************************
SPECIALIST IN : LUCKY NAME ,LUCKY HOUSE,LUCKY STONES,
CONTACT:NUMEROLOGY, VASTHUST, NAME SPECIALIST
ARULNIDHI AKSHAYADHARMAR,MA.,M.PHIL.,DNYT.,MKYM
SAMYAPURAM,ARCH OPP, SAMYAPURAM,TRICHY-621112.
Contact AKSHAYADHARMAR
+91-98424 57516
web:http://akshayadharmar.blogspot.com
**********************************************************************************
OCTOCLE (குடும்ப கணக்கு)
குடும்பம் ஒரு கோவில். கோவிலக திகழவேண்டும் என்றால் குடுபத்தில் எல்லோரும் நலமாக இருக்கவேண்டும். நலம் கெடுவதற்கு காரணம் ஒருவருடைய கிரகம் மற்றவர்களுடைய கிரகங்களோடு ஒப்புமையாகமல் அமைவதே ஆகும். இத்தகைய ஒப்புமை எங்கிருந்து வரும் என்றால் யாருக்கு பெயர் அமைக்கிறோமோ அவருடைய பெயர் மற்றவர்களுடைய பிறந்த தேதியோடு ஒத்து அமைந்திருக்கவேண்டும்.
அதாவது ஒருவருடைய பெயர் 19-ஆம் எண்ணில் அமைந்துள்ளது என்றால் அவருடைய பெற்றோர்கள், தம்பிகள், தங்கைகள் என குடும்பத்தாரில் மிக முக்கியமான நபர் அந்த வீட்டின் இளைய நபர் அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். கடைசி நபரின் பிறந்த தேதியோடு கூட்டவேண்டும். அவ்வாறு கூட்டிவரும் பெயர் 4,7,8 வரக்கூடாது. பெயர் 19 ஆனால் கடைசி தம்பி, குழந்தை 3-ஆம் தேதி பிறந்திருந்தால்
19 + 3 = 22 = 4 வரும் பட்சத்தில் பெயரை திருத்திக் கொள்ள நிபுணரை அணுகவேண்டும். பெயர் 33 ஆக இருந்தால் வீட்டின் கடைசி நபர் பிறந்த தேதி 2 ஆக அமைந்தால் 33 எண் நபர் பெயரை திருத்திக் கொள்ளவேண்டும். இதற்கு தகுந்தவாறு பெயரை திருத்தி எழுதி வந்தால் கடைசி கிரகத்தோடு ஒப்புமை பெற்றுவிடும்.
எத்தனையோ குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமான சூழல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வெளியே உள்ளவர்களோடு சுமூகமான உறவு இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களோடு சுமூகமான உறவு இல்லாமல் தவிப்பவர்கள் இந்த ஆக்டகல் கணக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதை பயன்படுத்தி பயன் அடைந்தவர்கள் ஏராளம். எந்த ஒரு கணக்கும் பயன்பாட்டிற்கு வரும் பொழுதுதான் நன்மை தீமைகளை ஆராயமுடியும். இதைப்படிக்கும் வாசகர்களும் தனது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொழுதுதான் இந்தக் கலையின் உன்னதம் தெரியவரும். இல்லாத பட்சத்தில் எண்கணித நிபுணர்கள் சக்கரை இனிக்கும் என்று கூறுவது போல இந்த காலை வாழ்க்கை கலை என கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எப்பொழுது சாப்பிட்டு பார்க்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு அதில் உள்ள சூட்சுமங்கள் தெரியவரும். இந்த கணக்குகளை கையில் எடுத்து காண்பிக்க முடியாது இந்த கணக்கை பயன்படுத்தி வாழ்க்கையில் அனுபவிக்கும் போதுதான் தெரியவரும்.
காந்தத்தத்துவம் : (Magneto Therophy)
இந்த காந்தத்தத்துவம் என்பது ஒருவருடைய கர்ம பலனின் வெளிப்பாடு என கூறுகிறோம். பிராரப்திய கர்மம் என்பது ஏற்கனவே கூறியபடி இன்று வரை ஒருவர் செய்த செயல்களின் விளைவுகளின் பதிவு பிராரப்திய பதிவு எனப்படும். சஞ்சித கர்மம் பதிவு என்பது நமது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய மூட்டைகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பதிவு இந்த இருபதிவுகளும் இணைந்து ஆகாமிய கர்மப் பதிவு ஏற்படுகிறது.
1. பிராரப்திய கர்மப் பதிவு+சஞ்சித கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு
2. சஞ்சித கர்மப் பதிவு + பிராரப்திய கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு = காந்தத்தத்துவ பதிவு
ஒருவர் வயது ஏறிய நிலையில் 20,25,50 என பல வயதுகளில் கணக்கிடும் பொழுது பிராரப்திய பதிவுகள் தெரியவரும் இங்கு பிராரப்திய பதிவு என்ன என்பதையும், சஞ்சித கர்மப் பதிவு என்ன என்பதையும் அறிந்து காந்தத்தத்துவ அடிப்படையில் ஆகாமிய கர்மத்தை நிர்ணயிக்கச் செய்யலாம். இது ஒரு விதம்.
ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பட்சத்தில் இவருக்கு எங்கிருந்து பிராரப்திய கர்மம் ஏற்படுகின்றது. இவருக்கு சஞ்சித கர்மப் பதிவை மட்டுமே வைத்து கொண்டு பெயர் அமைக்கும் பட்சத்தில் அந்த பெயரும் சஞ்சித கர்மமும் இணைந்து செயல்படும் பொழுது பிராரப்திய கர்மப் பதிவு என்னவாக இருக்கும் என கணக்கில் கொண்டு ஆகாமிய கர்ம பலனை அமைக்க முடியும்.
ஆக காந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒருவருடைய விதியை மாற்றியமைப்பது எளியது. நல்ல செயலை ஊக்கப்படுத்துவது மூலம் நல்ல எண்ணங்களும், நல்ல சொற்களும், நல்ல செயல்களும் ஏற்படுகின்றது.
இந்த காந்தத்தத்துவம் அடிப்படையில் ஒருவருடைய கையில் உள்ள நவக்கிரகங்களின் செயல்பாட்டை நாளமில்லா சுரப்பிகளின் வாயிலாக தாக்கத்தை கிரகங்களின் வாயிலாக மூன்று பிரிவாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
1. நன்மை = (Positive) = Clockwise
2. தீமை (Negative) = Anti Clockwise
3. நன்மை- தீமை இல்லாமல் (Neutral) = Straight
இவ்வாறு காந்தத் தத்துவ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதனை ஸ்கேன் என்றும் கூறப்படுகிறது.
நம் உள்ளங்கையில் 9 கிரகங்களின் தாக்கம் 8 நாளமில்லா சுரப்பிகளின் தாக்கமும் தெரியவரும்.
1 2 5 6 7 9
1 5 6 7 9 -50%
1 5 6 9 - 60%
1 5 9 -70%
5 9 -90%
5 -100%
இந்த அடிப்படையில் ஸ்கேன் செய்து பார்த்த பிறகு மேலும், அதிகபட்ச நன்மை தரும் கிரகம் எது என கண்டறிய மேலே உள்ளபடி பில்டர் (Filter) செய்யும் பொழுது ஆய்வு செய்யும். நபருக்கு புதன் (அ) கரியன் சுக்கிரன், சந்திரன், குரு, ராகு, கேது, சனி, செவ்வாய் என 100% நன்மை தரும் கிரகத்தை கண்டறியப்படும்.
மேலும் புதன் என்று வரும் பொழுது எதில் பெயர் அமைப்பது 14, 23, 32, 4250, 59, 68, 77, 86 என பார்க்கும் பொழுது மீண்டும் ஸ்கேன் மூலம் பில்டர் (Filter) செய்யப்படும்.
உதாரணமாக :
14 23 32 41 50 59
23 32 41 59 -50%
23 41 59 -60%
41 59 -90%
41 -100%
இவ்வாறு அவருக்கு 41 எண்ணில் பெயர் வைக்கலாம் என தீர்மானம் செய்யப்படுகிறது. இவ்வாறு காந்தத் தத்துவம் அடிப்படையில் ஒருவருக்கு எத்தகைய எண்ணில் பெயர் அமைத்தால் சஞ்சித கர்மப் பதிவையும், பிராரப்திய கர்மப் பதிவையும் சமன் செய்து ஆகாமிய கர்மப் பதிவு எத்தகையதாக நன்மையுடையதாக ஆகும் ஒரு அற்புத கலையை அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் அடிப்படையில் காந்தத் தத்துவத்தை பயன்படுத்தி பல்லாயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த காந்தத்தத்துவக் கலையை தெய்வீக கலை என்றும் கூறுவர்.

பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste
=============================================================
NUMEROLOGY APPLICATION FORM:
NAME (signature name)(FEMALE/MALE) :
BIRTH DATE, MONTH, YEAR:
FATHER NAME & DATE OF BIRTH:
MOTHER NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:
GRAND MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE PLACE:
YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL ADDRESS WITH PHONE NUMBER:
YOURS APPLICANT
=============================================================
கீழ்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்
BANK DETAIL
BANK: K.V.B (KARUR VYSYA BANK)
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:
==================================================================================
பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம்
SRK
PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS
பலன்கள் FEES IN RUPEES
பலன் கூறல் நடத்தை, சுபாவம், அனுபவிக் கும் தன்மை, பொருளாதாரம், தனித்தன்மை, வருங்காலம் இல்லற வாழ்க்கை,எதிர்பாராத விபத்து,வியாதிகள் பெயர் 1,000/=
BASIC STAGE
(4SUBJ)
ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு
5,500/=
1 ST STAGE
(11SUBJECT) ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME ANALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை, 12,000/=
2 ND STAGE
(16SUBJECT) JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20,000/=
3 RD STAGE
(20SUBJECT) PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,
சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை 40,000/=
4 TH STAGE
(25SUBJECT) tRIANGLE,TRIGRAMS
GREEK
GEOMENTRIC/SRK VALUES,
வசீகரமான சூழல்
ஆளுமைதன்மை
மேலும்சம்பாதிக்கும்
திறன்,ஆரோக்கியம்
நட்சத்திர அந்தஸ்து
அதிர்ஷ்டகார்டு,
அதிர்ஷ்டக்கல் 70,000/=


No comments:
Post a Comment